Skip to main content

"கரோனா வைரஸை விட கொடுமையானவர்களிடம் நாடு உள்ளது.." - சீமான் பேச்சு!

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பெரிய அளவில் வன்முறை நடந்துள்ளது. ஆனால் அது பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ அல்லது பிரதமர் மோடியோ ஒரு சிறிய வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இதை எல்லாம் பார்க்கின்ற போது வேதனையாக இருக்கின்றது. இந்த கொடுமையானவர்கள் நிறைந்துள்ள தேசத்திலா நாம் வாழ்கிறோம் என்ற அச்ச உணர்வு இயல்பாகவே நமக்கு ஏற்படுகின்றது. கரோனா வைரஸை விட கொடுமையானவர்களிடம் நாடு மாட்டிக்கொள்ளது. இப்போது புதிதாக வங்கி திவாலாகும் சீசன் ஆரம்பித்துள்ளது. பஞ்சாப் வங்கியை முடித்துவிட்டு தற்போது எஸ் பேங்கை முடித்துள்ளார்கள். வங்கிகள் ஏன் திவாலாகின்றது. எதற்காக அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வார்க்கிறார்கள். பொதுச்சொத்து என்று நாட்டில் ஏதாவது ஒன்று இருக்கிறதா? பள்ளிக்கூடம், மருத்துவமனைகள், போக்குவரத்து, ராணுவ தடவாளங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தனியாருக்கு கொடுத்துள்ளார்கள். இதையெல்லாம் தனியாருக்கு கொடுத்துவிட்டு கோயில்களை அரசு எடுத்துக்கொள்ள விரும்புகிறது. அரசு நடத்துவதை தனியாரும், தனியார் செய்ய வேண்டியதை அரசும் நடத்த வேண்டிய சூழ்நிலைகளை உண்டாக்க பார்க்கிறார்கள். உலகத்திலேயே 37 ஆயிரம் கோயில்களை கொண்ட ஊர் நம்முடைய தமிழர் நாடுதான்.

இப்போதெல்லாம் அரசியல் கட்சி பதவிகளில் கூட தலைவர் என்று சொல்கிற மாதிரியான பதவிகளை யாரும் விரும்புவதில்லை. மாவட்ட தலைவர் என்பதை விட மாவட்ட செயலாளர் என்று அழைப்பதையே அனைவரும் விரும்புகிறார்கள். இந்த ரஜினிகாந்தை எல்லாம் தலைவர் என்று அழைப்பதனால் பயப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். நாட்டின் பிரதமர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறிவி்ட்டார். ஏன் என்றால் அவரை யாரும் மதிப்பதில்லை. அவரெல்லாம் ட்விட்டரை விட்டு வெளியேற வேண்டிய ஆள் இல்லை. நாட்டை விட்டே வெளியேற வேண்டிய ஆட்கள் அவர்கள். மதிக்கின்ற மாதிரி அவர்கள் ஏதாவது செய்தால் மதிப்பார்கள். சிஏஏ-வை எதற்காக எதிர்க்கிறார்கள் என்று கேட்கிறார்கள், சிஏஏ தேவையில்லை, அதனால் எதிர்க்கிறேன். நான் இவ்வளவு நாட்களாக சொல்லிவந்ததை இப்போது தெலுங்கானா முதல்வர் சொல்லிவிட்டார். எனக்கே பிறப்பு சான்றிதழ் இல்லை, என்னுடைய அப்பா, அம்மாவுக்கு நான் எப்படி தருவேன் என்று அவர் கேட்பதைத்தான் நான் பல நாட்களாக கூறிவருகிறேன். 

மாட்டுக்கறி நாம தின்னா அடிப்பார்கள். ட்ரம்ப் வந்தால் ஐந்து விதமாக சமைத்து தருவார்கள். அவரிடம் சொல்ல வேண்டியது தானே, மாட்டை நாங்கள் புனிதமாக கருதுகிறோம் என்று, ஏன் சொல்லவில்லை. ட்ரம்ப் இருக்கும் போது நம்முடைய பிரதமர், ராணுவ அமைச்சர் எல்லாம் எப்படி நின்றார்கள், பள்ளிக்கூடத்தில் பிரேயர் பாடும்போது மாணவர்கள் நிற்பதை போல்தானே நின்றார்கள். ஆசாத் காஷ்மீரை மீட்போம் என்று ஆவேசமாக பேசும் இவர்கள், சீனா ஆக்கிரமிப்பை பற்றி ஏன் பேசமாட்டேன் என்கிறார்கள். அவர்களிடம் உண்மையான ராணுவம் இருக்கிறது. போதாக்குறைக்கு கரோனா வைரஸை வேறு வைத்திருக்கிறார்கள். இனி போர் என்றால் பயோவார் தான் நடக்கும். இந்த இடைப்பட்டகாலத்தில் தான் இத்தனை ஆட்டம்,பாட்டம், சொத்து சேர்த்தல் என அனைத்தும் நடைபெறுகிறது. நீங்கள் பணக்காரன், வசதி படைத்தவன் என்றெல்லாம் கொரோனா பார்க்காது. எனவே ஆட்டம் போடாதீர்கள்" என்றார். 

 

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்

Next Story

'கர்நாடகாவில் நீர் இல்ல... காங்கிரஸ் பாஜகவுக்கு இங்க ஓட்டு இல்ல..'-தஞ்சையில் சீமான் பரப்புரை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'No water in Karnataka... No vote for Congress'-Seeman lobbying in Thanjavur

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஹிமாயூன் கபீரை ஆதரித்து தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டார். அப்பொழுது பேசிய அவர், ''இங்கு வாக்குகேட்டு வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, பாஜகவின் தலைவர்களின் கருத்து என்னவாக இருக்கிறது. ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது எனச் சொல்லும் கட்சிக்கு ஓட்டு கேட்டவர் முதல்வர் ஸ்டாலின். மானமிக்க, மண்ணை நேசிக்கக்கூடிய தலைவனாக இருந்தால் தண்ணி தரவில்லை, உங்களுக்கு எதற்கு ஓட்டு? கூட்டணியும் இல்லை, சீட்டு இல்லை என்று முடிவு எடுத்திருக்க வேண்டுமா வேண்டாமா? ஆனால் காங்கிரசுக்கு 10 சீட்டு கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் நாம் என்ன முடிவெடுக்க வேண்டும் என்றால் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை என்றால் ஒரு தமிழரின் ஓட்டும் உனக்கு இல்லை. என்ற முடிவை நாம் எடுக்க வேண்டும். அப்படி தோற்கடித்தால்தான், ஏன் நம்மை தோற்கடித்தார்கள் என அவர்கள் சிந்திப்பார்கள். காவிரியில் மக்களுக்கான நீரை பெற்றுக் கொடுக்க முடியவில்லை; கச்சத்தீவை எடுத்துக் கொடுத்தோம்; மீனவர்கள் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவில்லை; மீத்தேன் ஈத்தேன் என நிலத்தை நஞ்சாக்கினோம்; முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் தர மறுத்தோம் அதனால் நம்மை தோற்கடித்து விட்டார்கள் என உணர வேண்டும்.

தமிழக மக்களிடம் ஓட்டை வாங்க வேண்டும் என்றால் அவர்களுடைய உரிமைக்காக பேச வேண்டும். உரிமையை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நிலையை நீங்கள் உருவாக்காத வரை நம்முடைய உரிமையை மீட்க முடியாது. கல்வி மாநில உரிமை அதை எடுத்துட்டு போனது காங்கிரஸ். அப்போது ஆட்சியில் இருந்தது திமுக. இந்த இரண்டு கட்சிகளும் மீண்டும் சேர்ந்து கொண்டு நம்மிடம் ஓட்டு கேட்டு வருகிறது. ஆனால் இதை நாங்கள் நினைவுபடுத்திக் கொண்டே இருப்போம். மறப்பது மக்களின் இயல்பு அதை நினைவு படுத்திக் கொண்டே இருப்பது போராளிகளின் கடமை. மறந்துடாத, விடாதே, அவர்களுக்கு ஓட்டு போடாதே எனச் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டியதாக இருக்கிறது.

மேகதாதுவில் அணைக் கட்டியே தீருவோம் எனச் சொல்லுகிறது காங்கிரஸ். அணைக் கட்டியே தீர வேண்டும் எனச் சொல்கிறது பாஜக. இதற்கு இங்கே இருக்கின்ற பாஜக தலைவர்கள், வேட்பாளர்களின் கருத்து என்ன? பேச மாட்டார்கள். காரணம் காவிரியில் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் எனப் பாஜக சொன்னால் அங்கு காங்கிரஸ் ஜெயிக்கும். காங்கிரஸ் சொன்னால் கர்நாடகாவில் பாஜக ஜெயிக்கும். அற்ப தேர்தல் வெற்றிக்காக, பதவிக்காக மக்களின் உரிமையை பலிகொடுக்க தயாரானவர்கள் இவர்கள். என் உரிமைக்கு, உணர்வுக்கு, உயிருக்கு நிற்காத உனக்கு என் ஓட்டு எதுக்கு என்று கேள்வியை எழுப்ப வேண்டும். நம்முடைய வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாத இவர்களுக்கு எதற்கு நமது வாக்கு என்ற சிந்தனை மக்களுக்கு வரவேண்டும்'' என்றார்.