Skip to main content

துக்ளக் படித்தால் அறிவு வளரும் என்றால் ரஜினி முதலில் அவரது ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் - சீமான் தாக்கு!

Published on 29/01/2020 | Edited on 30/01/2020


துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய சில செய்திகள் சர்ச்சையாகி உள்ள நிலையில் இதுதொடர்பாக அவர் மீது காவல்துறையினரிடம் சிலர் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினியை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " அடிக்கடி ரஜினிகாந்தை வைத்து இவர்கள் போடுகிற நாடகம் இருக்கே, இவரை யாரு தூத்துக்குடி போக சொன்னார்கள். அங்கே போராட்டம் நடந்த போது நீங்க வாங்கனு எந்த மக்களாவது சொன்னார்களா? போராட்டத்துல 15 பேர் இறந்தார்கள். நான் போனால் அந்த மக்கள் சந்தோஷம் அடைவார்கள் என்றால், அவர்கள் என்ன நாடகமா பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அங்கே போயிட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டார்கள் என்று சொல்கிறார். சமூக விரோதிகள் ஊடுறுவி விட்டார்கள் என்று உங்களுக்கு எப்படி தெரியும், உளவுத்துறை சொல்லவில்லை, காவல்துறை சொல்லவில்லை, உங்களுக்கு மட்டும் யார் சொன்னது. ரஜினிகாந்து இப்படி சொல்லிட்டாரேனு அதை பற்றி பேசிக்கொண்டே அந்த துப்பாக்கிச்சூட்டை மறந்துவிட்டார்கள். இப்போது குடியுரிமை சட்டம் தொடர்பான பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் நான் ரஜினிகாந்திடம் வைத்த கேள்வி, இந்த சட்டத்தை ஆதரிக்கிறீர்களா, இல்லை மறுக்கிறீர்களா என்ற ஒற்றை கேள்வியைத்தான். திடீரென்று தற்போது அவர் வன்முறை எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லை என்று கூறுகிறார்.
 

fgh




அவர் நடித்த பாதிக்கும் மேற்பட்ட படங்கள் வன்முறை படங்கள்தான். தற்போது வெளிவந்துள்ள தர்பார் படமும் வன்முறை படம்தான். ஆனால் எந்த பிரச்சனைக்கும் வன்முறை தீர்வல்ல என்று தொடர்ந்து சொல்லி வருகிறார். அதே போன்றதொரு பேச்சைத்தான் பிரதமர் நேற்று பேசிய போது தெரிவிக்கிறார். ஆயுதம் எதற்கும் தீர்வல்ல என்று பேசுகிறார். அப்போது குஜராத்தில் என்ன வைக்கோல் குச்சியை வைத்திருந்தீர்களா? ஆயுதம் எதற்கும் தீர்வல்ல என்று சொன்னால் எதற்காக ராணுவத்தை வைத்துள்ளீர்கள். அதனை கலைத்துவிட வேண்டியதுதானே? சிங்கப்பூர், கனடா போல ராணுவம் இல்லாத நாடாக இருந்துவிட்டு போக வேண்டியது தானே? ஏன் அதை செய்ய மாட்டேன் என்று சொல்கிறார்கள். ரஜினி முதல்வராக துடிக்கிறார், அவர் நடித்த அத்தனை படங்களும் வன்முறை படங்கள். ஆனால் வன்முறை எதற்கும் தீர்வல்ல என்று தொடர்ந்து சொல்கிறார். இது எங்களுக்கும் தெரியும். காந்தி காலத்தில் இருந்து புத்தர், மகாவீர் காலம் வரை எங்களுக்கு கற்பித்து வந்து இருக்கிறார்கள். 

போலிஸ் கைகளில் துப்பாக்கி கொடுத்திருக்கிறீர்களே எதற்காக, கொக்கு சுடுவதற்கா? தடி கொடுத்துள்ளீர்களே அது எதற்காக, கொசு அடிப்பதற்காகவா? நீங்கள் உங்கள் நண்பர் மோடியிடம் சொல்லி ராணுவத்தை கலைத்துவிட வேண்டியது தானே? எல்லையில் சமாதான புறாக்களை பறக்க விட வேண்டியது தானே. அல்லது எல்லையில் உங்களையாவது கொண்டுவிட சொல்லவிட வேண்டியது தானே?  வன்முறை எதற்கும் தீர்வல்ல என்று ரஜினிகாந்த் சொல்விட்டார், இதைபற்றி ஒரு கூட்டம் பேசுகிறது. ஆனால் குடியுரிமை விவகாரம் பற்றி அவர் எந்த கருத்தையும் சொல்லவில்லை. ஆதரிக்கிறாரா இல்லையா என்று இதுவரை ஒருவார்த்தை சொன்னாரா என்றால் அதை பற்றி பேச்சிமூச்சி இல்லை. திடீரென்று துக்ளக் பத்திரிக்கை விழாவில் கலந்துகொண்டு முரசொலி வைத்திருந்தால் திமுக என்றும், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று பேசியிருக்கிறார். அப்படி என்றால் உங்கள் ரசிகர்களுக்கு முதலில் துக்ளக்கை கொடுங்கள். அவர்கள்தான் உங்கள படம் ஓட வேண்டும் என்று தரையில் சோறு போட்டு சாப்பிடுகிறார்கள். நாங்கள் எல்லாம் தட்டில் சாப்பிடும் போதே பல்வேறு நோய்கள் வருகிறது. அதனால் ரஜினி அவர்களுடைய ரசிகர்களுக்குத்தான துக்ளக்கை தர வேண்டும்" என்றார்.

ரஜினி பேசிய இந்த ஒருவாரத்தில் என்னென்ன விஷங்களை நாம் பேச மறந்துவிட்டோம். ஹைட்ரோ கார்பன் எடுக்க பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதி தேவையில்லை, மக்களிடம் கருத்துக்கேட்க தேவையில்லை என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதைப்பற்றிய பேச்சுக்கள் எல்லாம் மறக்கடிக்க படுக்கிறது என்றார்.
 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்