Skip to main content

“உண்மையான ஃபாரின் ரிட்டன் நான்தான்" -பிரபாகரன் பிறந்தநாளில் கலகலத்த சீமான்

Published on 27/11/2020 | Edited on 27/11/2020
jkl

 

 

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த தின பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பிரபாகரன் குறித்து உணர்ச்சி பூர்வமாக பேசினார். அவரின் பேச்சு வருமாறு, "அலெக்சாண்டர் பிறந்ததால் கிரேக்க இனம் பெருமை அடைந்தது. செங்கிஸ்கான் பிறந்ததால் மங்கோலிய இனம் சிறந்தது.  ஜூலியட் சீசரால் ரோமானிய மக்கள் பெருமை அடைந்தார்கள். அதை போல பிரபாகரன் என்ற என்ற தலைவன் பிறந்ததால் தமிழ் இனமே பெருமை அடைந்தது. இன்றைக்கும் தலைவருடைய போர்க்குணத்தை பார்த்து உலகம் வியந்து கொண்டிருக்கிறது. தலைவரை பார்த்து பயப்படுவதை கூட விட்டுவிடுங்கள், அவருடைய தம்பியை பார்த்தும் இன்றைக்கு பயப்படுகிறார்கள். எங்கேயும் போக விடமாட்டேன் என்கிறார்கள், எந்த நாட்டுக்கு செல்ல அனுமதிக்க முடியாது என்கிறார்கள். 

 

அப்படி சென்றாலும் கைது செய்து உடனடியாக அனுப்பி விடுவார்கள். உண்மையிலேயே நான்தான் ஃபாரின் ரிட்டன். இதே மாதிரி பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளேன். உடனடியாக திரும்பி வந்துள்ளேன். பிரபாகரன் இந்த இனத்திற்கு நூறு சதவீதம் உண்மையாக இருந்தார். ஆனால் இந்த இனம் அவருக்கு உண்மையாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை அவருக்கு துரோகம் செய்தது. இந்த மாதிரி ஒரு துரோகத்தை வேறு யாரும் செய்திருக்க மாட்டார்கள். மற்ற இனத்தில் இந்த மாதிரி ஒரு தலைவன் பிறந்திருந்தால் அந்த இனமே அவரை கொண்டாடி தீர்த்திருக்கும். ஆனால் இந்த இனம் அவரை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டது. இதற்கெல்லாம் மன்னிப்பு என்பதே கிடையாது. அதனால் தான் இன்றைக்கு நாம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். 

 

எங்கேயாவது சொந்த இனத்தின் மகனை பயங்கரவாதி, தீவிரவாதி என்று ஒரு இனத்தின் மக்கள் பேசி திரிவதை எங்கேயாவது பார்த்துள்ளீர்களா? இது எவ்வளவு பெரிய கொடுமை. யாராவது ஏற்றுக்கொள்ள முடியுமா? நாம் வருவதற்கு முன்னர் இதை தொடர்ந்து பேசி வந்தார்கள். ஆனால் இன்றைக்கு பிறக்கின்ற குழந்தைகள் எல்லாம் பிரபாகரன், பிரபாகரன் என்று பிறக்கிறார்கள். யாராவது இல்லை என்று சொல்லிவிட முடியுமா? சின்ன குழந்தைகள் எல்லாம் அவரை மாமா, பெரியப்பா என்று கொண்டாடி தீர்க்கிறார்கள். இது பிரபாகரனின் யுகம். பிரபாகரனின் பிள்ளைகளின் காலம். அடக்க நினைக்க முடியாது, அடங்கவும் மாட்டோம்.

 

இன்றைக்கு தமிழீழம் என்ற ஒரு நாடு இருந்திருந்தால் இந்தியாவிற்கு ஒரு பெரிய பாதுகாப்பாக இருந்திருக்கும். ஒரு செல்ல மகன் போல அவர் இருந்திருப்பார். ஆனால் விட்டார்களா? எங்களை ஒழிக்க வேண்டும் என்று மொத்தத்தையும் சீனா கையில் கொடுத்துவிட்டு பாதுகாப்பு அற்று இந்தியா நின்று கொண்டு இருக்கிறது. சிங்களர்கள் ஒருபோதும் இந்தியாவிற்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள். அவர்கள் சீனாவுக்கு ஆதரவாகத்தான் இருப்பார்கள். இந்தியாவிற்கு எதிராகத்தான் இயங்குவார்கள். இதற்கு கடந்த கால வரலாறு இருக்கிறது. நம் தலைவன் இருக்கிற வரை ஒரு அந்நிய கப்பல், படை என்று எதுவும் ஊடுறுவவில்லை. ஆனால் தற்போது அந்நிய கப்பல் நங்கூரம் இட்டு நம் கடற்கரையில் நிற்கிறது. இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும். அந்த இடத்தில் நிச்சயம் நாம் இருப்போம்" என்றார்.

 

 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்