Skip to main content

"ஆட்சியாளர்களுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை... அவர்கள் கவலை எல்லாம் இதைப்பற்றி மட்டும்தான்.." - சீமான் பேச்சு!

Published on 25/06/2020 | Edited on 25/06/2020

 

hj

 

கரோனா உச்சத்தில் இருந்து வரும் இந்நிலையில் அரசியல் தலைவர்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தோன்றி தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்துப் பேசியுள்ளார்.

 

அவர் பேசும்போது, "இன்றைய ஆட்சியாளர்களுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. மதம் இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். அதன் பின்னால் பதுங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். சாதி, மதம் எப்படி மனிதனை காப்பாற்றும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது. மனிதன்தான் அதைக் காப்பாற்றி வைத்துள்ளான். மண்புழு கூட மனிதனுக்கு உதவும். இன்று மண்புழுவைக் கூட தனியாக உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு நாம் பூமியை நஞ்சாக்கி வைத்துள்ளோம். இதற்கெல்லாம் என்ன செய்ய வேண்டும் என்று நமக்குத் தெரியும். அதனைத் தன்னலமற்று நாம் செய்ய வேண்டும்.

 

மானிடச் சமூகமே மிகப்பெரிய ஆபத்தில் இருக்கின்றது. குறிப்பாக நம்முடைய தமிழினம் பெரிய ஆபத்தில் சிக்கித் தவிக்கின்றது. பலவற்றை நாம் இழந்துள்ளோம். குறிப்பாக நீர்வளத்தை, பெரிய அளவில் அதில் நாம் தோற்றுப்போய் உள்ளோம். முல்லைப் பெரியாறு இருக்கின்ற தேவிக்குளம், பீர்மேடு பகுதிகளை உள்ளடக்கிய இடுக்கி மாவட்டம் தமிழகத்திற்கு வர வேண்டிய இடம். மாநில பிரிப்பின்போது நேருவிடம் இருந்த நட்பைப் பயன்படுத்தி அப்போதைய அமைச்சர் கிருஷ்ணன் மேனன் காமராசர் அவர்களை இந்தப் பிரிப்புக்குச் சம்மதம் தர வைத்தார். அதன்பிறகுதான் ஐயா எந்த மேடாக இருந்தால் என்ன இந்தியாவில்தானே இருக்கின்றது என்று பேசியது. 

 

இதே போன்று காவிரி பகுதியைச் சேர்ந்த குடகு மாவட்ட விவசாயிகள் மாநில பிரிப்பின் போது, நாங்கள் தமிழ்நாட்டிற்கு வந்துவிடுகிறோம் என்றார்கள். ஆனால் இங்கே இருந்த அரசியல்வாதிகள் இல்லை, நீங்கள் கர்நாடகத்திலேயே இருங்கள் என்று கூறினார்கள். அவர்களும் அங்கேயே இருந்துவிட்டார்கள். தற்போது அவர்களிடம் குடிக்க தண்ணீர் கேட்டால் அவர் எப்படித் தண்ணீர் தருவான். எல்லா இடத்திலேயும் நம்முடைய முன்னோர்கள் செய்த தவற்றால் நாம் கையறு நிலையில் இருக்கின்றோம். எல்லா வரியையும் மத்திய அரசிடம் கொடுத்துவிட்டு இன்றைகு கையறு நிலையில் நின்று கொண்டிருக்கின்றோம்.

 

http://onelink.to/nknapp

 

பிச்சை எடுக்கும் சூழலில் தான் நாம் இருக்கின்றோம். வரியை எல்லாம் அவர்கள் எடுத்துச் சென்று விடுகிறார்கள். கரோனா முதல் அனைத்தையும் நம்மையே பார்த்துக்கொள்ள சொல்கிறார்கள். இதுதான் தற்போது நாட்டில் இருக்கின்ற நிலையாக இருக்கின்றது. இலவச மின்சாரம் கொடுத்து வந்தார்கள். தற்போது அதிலேயும் கைவைத்துவிட்டார்கள். ஏன் இலவச மின்சாரத்தை நிறுத்துவதாக அறிவிப்பு வந்துள்ளதே என்றால் மத்திய நிதியமைச்சர் நீங்கள் வேண்டும் என்றால் கொடுத்துங்கோங்கோ. அதனால் பல ஆயிரம் கோடி நஷ்டம் வருகிறது. அதை எல்லாம் ஒரு சிஸ்டத்தின் கீழ் கொண்டு வரவே நாங்கள் இதை எல்லாம் செய்கிறோம் என்கிறார்கள். இது அனைத்தும் எங்கே போய் முடியுமோ, தெரியவில்லை" என்றார்.                

 

              

Next Story

'சின்னம் கிடைக்காதவர்கள் பொறாமையில் பேசுகிறார்கள்' - ஜி.கே. வாசன் பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'Those who don't get the symbol speak in envy'-GK Vasan Answer

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னத்திற்குப் பதிலாக மைக் சின்னம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சின்னம் தொடர்பான பிரச்சனையில் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் சிக்கின. மதிமுக பம்பரம் சின்னம் கேட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அச்சின்னத்தை தர முடியாது எனத் தெரிவித்திருந்தது. அதேபோல் விசிகவும் பானை சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அண்மையில் புதிய சின்னமான மைக் சின்னத்தை அறிமுகப்படுத்திய நாம் தமிழர் கட்சியின் சீமான், ''தங்களுடைய கட்சிக்கு மட்டுமல்லாது மதிமுகவிற்கும் சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் சுணக்கம் காட்டுகிறது. இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் கேட்கும் சின்னம் கொடுக்கப்படும் எனச் சொல்கிறது. அப்படி பார்த்தால் விசிக இரண்டு தொகுதிகளில் தானே போட்டியிடுகிறது அவர்களுக்காவது  கேட்கும் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும். இதே பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகளுக்கு கேட்கும் சின்னம் கிடைத்துள்ளது. பாஜக கூட்டணியில் இருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்'' எனத் தெரிவித்திருந்தார்.

nn

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சில கட்சிகளுக்கு சின்னங்கள் கிடைக்கவில்லை என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பொறாமையோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றமே ஒரு தெளிவான உத்தரவை கொடுத்திருக்கிறது. முறையாக கணக்கு வழக்குகளை கொடுத்தால் உங்களுக்கு சின்னம் கிடைக்கும். அதை சரிவர செய்யாமல் எங்களுக்கு எங்களுடைய சின்னம் வேண்டும் என்று கேட்டால் சட்டத்திலேயே அதற்கு இடம் கிடையாது. தேர்தல் ஆணையம் நினைத்தவர்களுக்கு நினைத்ததை கொடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இந்தியாவில் கிடையாது. நம்முடைய சின்னம் முக்கியம் என்றால் சின்னத்திற்கு ஏற்ற அரசியல் கட்சிகள் தங்களுடைய கோட்பாடுகளை முறையாக சரியாக செய்திருக்க வேண்டும். அது அவர்களுடைய கடமை'' என்றார்.

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.