Skip to main content

வீடு இல்லாமல் வாழ்கின்ற மக்களிடம் குடியுரிமை சான்று கேட்கிறீர்கள்..? - சீமான் கேள்வி!

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய அரசை சாடி பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது,"  சாலையில் நம்முடைய அம்மாவோ, அக்கவோ அல்லது குழந்தைகளோ செல்லும் போது அவரிடம் உள்ள பொருளை ஒருவர் பறித்துக்கொண்டு ஓடுகிறார்கள் என்றால் நாம் அவர்களை என்ன செய்வோம். பொருளை பறித்துக்கொண்டு ஓடியவர்களிடம் உள்ள பொருளை மீட்டு அவர்களை வெளுப்போம். அதைப்போலத்தான் பலநூறு வருடங்களுக்கு முன்பு நம்முடைய வழிபாட்டு உரிமையை பறித்துக்கொண்டவர்களிடம் இருந்து நம்முடைய உரிமையை மீட்க வேண்டும். இன்றைக்கு பெருவுடையார் கோயிலில் தமிழில் மந்திரங்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. இதற்காக நம்முடைய சக்திவேல் முருகனார் எடுத்துவைத்த வாதங்கள் மிகமுக்கியமானது. தெருவில் ஒரு கோயில் இருக்கிறது என்றால் அந்த தெருவில் யாராவது இறந்துவிட்டார்கள் என்றால், அந்த கோயிலின் கருவறையை மூடிவிடுவார்கள். அதை போலவே செத்துபோன மொழியான சமஸ்கிருதத்தை கோயில் உள்ளே வர அனுமதிக்க கூடாது. அதை நம்முடைய அய்யா பதிவு செய்தாரே அந்த நொடியில் அவர்கள் செத்தே போனார்கள். சமஸ்கிருதத்துக்காக நம்மிடம் எவ்வளவு தர்க்கம் செய்கிறார்கள். அதற்கு ஒரு பவர் இருப்பதாக சொல்கிறார்கள். அப்படி பவர் இருந்தால் நாம் ஏன் அணு உலையை வைத்திருக்கிறோம். சமஸ்கிருதத்தை வைத்தே தேவையான பவரை பெற்றுக்கொள்ளலாமே? நம்மை முட்டாளாக்க பார்க்கிறார்கள். 
 

fg



எத்தகைய அரிய கருத்துக்கள் நம்முடைய  மொழியில் இருக்கின்றது. அறிவார்ந்த அறிஞர் பெருமக்கள் நம்முடைய முன்னோர்களாக நமக்கு கிடைத்துள்ளார்கள். சிவனுக்கு தமிழ் தெரியாது என்கிறார்கள். ஆனால் நம்முடைய தமிழே அவர் தந்ததுதான் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள். நீங்கள் நாத்திகரா அல்லது ஆத்திகரா என்று கேள்வி எழுப்புகிறார்கள், அது எல்லாம் உங்களுக்கு தேவையில்லாத ஒன்று. எங்களுடைய தமிழ் கோயில்களில் ஒலிக்க வேண்டும். எங்கு தமிழ் இருக்கோ அங்கே என்னுடைய இறைவன் இருப்பான். நாங்கள் ஒரு கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களாக இருக்கிறோம். தகப்பன் என்கிறவன் என்னை பெற்றவனாக இருக்க வேண்டும். தலைவன் என்கிறவன் என் இரத்தமாக இருக்க வேண்டும். என் மொழி புரியாதவன் எனக்கு இறைவனாக இருக்க முடியாது. என் வலி உணராதவன் எனக்கு தலைவனாக இருக்க முடியாது. இவன் என்னுடைய இறைவன். அதனால் தமிழில் மந்திரங்கள் கூறச் சொல்கிறோம். விமானத்தில் ஏறியவுடன் என்னை எப்படி கண்டுபிடிப்பார்கள் என்று தெரியவில்லை வணக்கம் என்றுதான் என்னை பார்த்து விமான பணியாளர்கள் கூறுகிறார்கள். அது வேறு ஒன்றுமில்லை. ஆள் பார்த்து செய்வதுதான்.   

யார் ஒருவர் இந்திய நாடு நம் நாடு, நமக்கு சொந்தமானது என்று பேசுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்த நாட்டிற்கு  சம்மந்தமில்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். அந்த நபர்கள் சொந்த வீட்டுக்காரர்களிடம் உங்கள் வீட்டு பத்திரத்தை காட்டு என்கிறார்கள். பரம்பரை பரம்பரையாக இங்கே வாழ்பவர்கள் நாங்கள். இந்த நாடு நாடாவதற்கு முன்பே இங்கே வாழ்ந்தவர்கள் தமிழர்கள். எங்களிடம் நீங்கள் தற்போது சான்று கேட்கிறீர்கள். சரி நாங்கள் கொடுக்கிறோம். வருடாவருடம் திரிவேணி சங்கமத்தில் 3 கோடி பேர் கோவணம் கட்டிக்கொண்டு குளிக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் ஆவணம் கேளுங்கள். அவர்கள் என்ன தருகிறார்கள் என்று பார்ப்போம். பிரதமர் 2022-க்குள் அனைவருக்கும் வீடு வழங்கிடுவோம் என்று சொல்லும்போது, இன்னும் வீடு இல்லாமல் பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். வீடே இல்லாமல் வாழ்கின்ற மக்களிடம் குடியுரிமை சான்று கேட்கிறீர்களே உங்களுக்கு மண்டையில் ஏதாவது இருக்கிறதா? நாட்டை வழிநடத்தி செல்லும் தலைவர்கள் அந்த இலட்சணத்தில் இருக்கிறார்கள்" என்றார்.


 

 

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.

Next Story

நா.த.க. சின்னம் தொடர்பான விவகாரம்; தேர்தல் ஆணையம் அதிரடி!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Election Commission action for NtK party symbols related issue

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே தேர்தல் சின்னம் தொடர்பான குழப்பம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது. அதாவது கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் இந்த தேர்தலில் கர்நாடகாவைச் சேர்ந்த மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இது நாம் தமிழர் கட்சியினரிடயே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதே சமயம் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டது.

Election Commission action for NtK party symbols related issue

இதனையடுத்து நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கபட்ட மைக் சின்னத்திற்கு பதில் வேறு ஒரு சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், தீப்பெட்டி, கப்பல், படகு, பாய் மரப்படகு அல்லது விவசாயம் சார்ந்த சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மைக் சின்னத்திற்கு பதில் வேறு சின்னம் கேட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டு பிரச்சாரத்தை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.