Skip to main content

பாகிஸ்தான், பசு மாடு இதைவிட்டால் பாஜகவுக்கு எந்த கொள்கையும் கிடையாது - சீமான் தடாலடி!

Published on 06/11/2020 | Edited on 06/11/2020
ுபர

 

 

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடப்பு அரசியல் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார் வேல் யாத்திரை பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் சற்று காட்டமாகவே பதில் அளித்தார். அவர் அளித்த பதில்கள் வருமாறு, "பாஜகவினர் வேல் யாத்திரை மேற்கொள்வதை பற்றி கேட்கிறீர்கள், அதை பற்றி சொல்ல என்ன இருக்கிறது. அவர்களுக்கு தமிழகத்தில் அரசியல் செய்ய எந்த வழியும் கிடையாது. ஆனால் எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக இன்றைக்கு வேல் எடுத்துக்கொண்டு ஓடலாமா என்று பார்கிறார்கள். டிசம்பர் 6 வரைக்கு அந்த பேரணியை நீண்டிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது. அந்த நாள் அம்பேத்கர் உடையது. பாபர் பசூதி இடிக்கப்பட்ட நாள், அந்த நாளில் தாழ்த்தப்பட்ட மக்கள் எழுச்சி பெற்றுவிடக்கூடாது என்ற காரணத்தில் தானே மசூதியை இடித்தீர்கள். இதை தான் அண்ணனே திருமா தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கு அவர்களிடம் பதில் இருக்கிறதா? நிச்சயம் பதில் சொல்ல மாட்டார்கள். 

 

வட இந்தியாவில் மதத்தை வைத்து அரசியல் செய்து பிழைத்ததை போன்று இங்கேயும் செய்யலாம் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழகத்தில் இந்த பாச்சா நிச்சயம் பலிக்க போவதில்லை. நிச்சயம் அவர்கள் ஏமாந்துதான் போவார்கள். எனவே தமிழக மக்கள் அவர்களின் போலி முகத்திரையை கிழிப்பதற்கு மிகவும் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும். இல்லை என்றால் நம்மை ஏமாற்றி விட பார்ப்பார்கள். அதற்கெல்லாம் நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது. அரசும் அதனை அனுமதிக்கக்கூடாது. நான் இதே அரசிடம் கேட்கிறேன். கடந்த முறை நான் வேல் பேரணி நடத்த அனுமதி கேட்டபோது என்னை நகர அனுமதித்தீர்களா? கோயிலுக்கு முன்பு ஒரு நூறு அடி நடந்து போய்கொள்கிறேன் என்று கேட்டதற்கு இந்த அரசு எனக்கு அனுமதி கொடுத்ததா?  வேல் எடுத்துக்கொண்டு ஒரு 10 அடி கூட என்னை செல்லவிடாமல் தடுத்தார்கள். அப்படியே கோயிலில் போய் கும்பிட்டுவிட்டு போங்கள் என்று சொல்லிவிட்டீர்கள். இவர்கள் மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை தமிழகத்தில் ஏற்படுத்த பார்க்கிறார்கள்.

 

அவர்களுக்கு சாதி, மதம், சாமி இதை தாண்டிய எந்த கோட்பாடுகளும் அவர்களுக்கு கிடையாது. இதை வைத்தே அனைத்து இடங்களிலும் அரசியல் செய்துவிட்டு போய்விடலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். பாகிஸ்தான், பசு மாடு இதைவிட்டால் பாஜகவுக்கு பாலிஸி கிடையாது, எந்த கொள்கையும் கிடையாது. பாலியல் வன்கொடுமை, பொருளாதார சீரழிவுக்கு பேசாத வாய்கள் பாரதமாதாகி ஜே என்று கோஷமிட மட்டும் வாய் திறக்கும். அந்த அயோக்கியத்தனத்தை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இது எவ்வளவு பெரிய பைத்தியக்காரத்தனம் என்பதை கற்றறிந்த அறிஞர்கள், சான்றோர் பெருமக்கள் உணர வேண்டும். எனவே நாங்கள் இதனை எதிர்க்கிறோம் என்று எங்கள் மீது சேற்றை வாரி பூசத்தான் பார்க்கிறார்களே தவிர இதில் இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்து பார்க்க மாட்டேன் என்கிறார்கள். சரியான ஒன்றை எதிர்ப்பதற்கு நாங்கள் என்ன பைத்தியகாரர்களா, தவறு செய்தால் எதிர்ப்போம். தவற்றை அவர்கள் திருத்தும் வரை போராடுவோம். எனவே வேல் பேரணியால் தமிழகத்தில் எந்த எழுச்சியும் எழ போவதில்லை என்பது மட்டும் உண்மை" என்றார்.

 

 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்