Skip to main content

பாகிஸ்தான், பசு மாடு இதைவிட்டால் பாஜகவுக்கு எந்த கொள்கையும் கிடையாது - சீமான் தடாலடி!

Published on 06/11/2020 | Edited on 06/11/2020
ுபர

 

 

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடப்பு அரசியல் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார் வேல் யாத்திரை பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் சற்று காட்டமாகவே பதில் அளித்தார். அவர் அளித்த பதில்கள் வருமாறு, "பாஜகவினர் வேல் யாத்திரை மேற்கொள்வதை பற்றி கேட்கிறீர்கள், அதை பற்றி சொல்ல என்ன இருக்கிறது. அவர்களுக்கு தமிழகத்தில் அரசியல் செய்ய எந்த வழியும் கிடையாது. ஆனால் எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக இன்றைக்கு வேல் எடுத்துக்கொண்டு ஓடலாமா என்று பார்கிறார்கள். டிசம்பர் 6 வரைக்கு அந்த பேரணியை நீண்டிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது. அந்த நாள் அம்பேத்கர் உடையது. பாபர் பசூதி இடிக்கப்பட்ட நாள், அந்த நாளில் தாழ்த்தப்பட்ட மக்கள் எழுச்சி பெற்றுவிடக்கூடாது என்ற காரணத்தில் தானே மசூதியை இடித்தீர்கள். இதை தான் அண்ணனே திருமா தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கு அவர்களிடம் பதில் இருக்கிறதா? நிச்சயம் பதில் சொல்ல மாட்டார்கள். 

 

வட இந்தியாவில் மதத்தை வைத்து அரசியல் செய்து பிழைத்ததை போன்று இங்கேயும் செய்யலாம் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழகத்தில் இந்த பாச்சா நிச்சயம் பலிக்க போவதில்லை. நிச்சயம் அவர்கள் ஏமாந்துதான் போவார்கள். எனவே தமிழக மக்கள் அவர்களின் போலி முகத்திரையை கிழிப்பதற்கு மிகவும் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும். இல்லை என்றால் நம்மை ஏமாற்றி விட பார்ப்பார்கள். அதற்கெல்லாம் நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது. அரசும் அதனை அனுமதிக்கக்கூடாது. நான் இதே அரசிடம் கேட்கிறேன். கடந்த முறை நான் வேல் பேரணி நடத்த அனுமதி கேட்டபோது என்னை நகர அனுமதித்தீர்களா? கோயிலுக்கு முன்பு ஒரு நூறு அடி நடந்து போய்கொள்கிறேன் என்று கேட்டதற்கு இந்த அரசு எனக்கு அனுமதி கொடுத்ததா?  வேல் எடுத்துக்கொண்டு ஒரு 10 அடி கூட என்னை செல்லவிடாமல் தடுத்தார்கள். அப்படியே கோயிலில் போய் கும்பிட்டுவிட்டு போங்கள் என்று சொல்லிவிட்டீர்கள். இவர்கள் மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை தமிழகத்தில் ஏற்படுத்த பார்க்கிறார்கள்.

 

அவர்களுக்கு சாதி, மதம், சாமி இதை தாண்டிய எந்த கோட்பாடுகளும் அவர்களுக்கு கிடையாது. இதை வைத்தே அனைத்து இடங்களிலும் அரசியல் செய்துவிட்டு போய்விடலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். பாகிஸ்தான், பசு மாடு இதைவிட்டால் பாஜகவுக்கு பாலிஸி கிடையாது, எந்த கொள்கையும் கிடையாது. பாலியல் வன்கொடுமை, பொருளாதார சீரழிவுக்கு பேசாத வாய்கள் பாரதமாதாகி ஜே என்று கோஷமிட மட்டும் வாய் திறக்கும். அந்த அயோக்கியத்தனத்தை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இது எவ்வளவு பெரிய பைத்தியக்காரத்தனம் என்பதை கற்றறிந்த அறிஞர்கள், சான்றோர் பெருமக்கள் உணர வேண்டும். எனவே நாங்கள் இதனை எதிர்க்கிறோம் என்று எங்கள் மீது சேற்றை வாரி பூசத்தான் பார்க்கிறார்களே தவிர இதில் இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்து பார்க்க மாட்டேன் என்கிறார்கள். சரியான ஒன்றை எதிர்ப்பதற்கு நாங்கள் என்ன பைத்தியகாரர்களா, தவறு செய்தால் எதிர்ப்போம். தவற்றை அவர்கள் திருத்தும் வரை போராடுவோம். எனவே வேல் பேரணியால் தமிழகத்தில் எந்த எழுச்சியும் எழ போவதில்லை என்பது மட்டும் உண்மை" என்றார்.

 

 

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.

Next Story

நா.த.க. சின்னம் தொடர்பான விவகாரம்; தேர்தல் ஆணையம் அதிரடி!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Election Commission action for NtK party symbols related issue

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே தேர்தல் சின்னம் தொடர்பான குழப்பம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது. அதாவது கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் இந்த தேர்தலில் கர்நாடகாவைச் சேர்ந்த மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இது நாம் தமிழர் கட்சியினரிடயே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதே சமயம் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டது.

Election Commission action for NtK party symbols related issue

இதனையடுத்து நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கபட்ட மைக் சின்னத்திற்கு பதில் வேறு ஒரு சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், தீப்பெட்டி, கப்பல், படகு, பாய் மரப்படகு அல்லது விவசாயம் சார்ந்த சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மைக் சின்னத்திற்கு பதில் வேறு சின்னம் கேட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டு பிரச்சாரத்தை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.