Skip to main content

“பிரபாகரனை விட ஆபத்தானவன் நான் என்று சிங்களவன் நினைக்கிறான்” -சீமான் பேச்சு

Published on 28/11/2020 | Edited on 28/11/2020
hjk

 

 

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த தின பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பிரபாகரன் குறித்து பேசினார். அவரின் பேச்சு வருமாறு,  

 

"குறிஞ்சி நிலத் தலைவன், தமிழின இறைவன் என்று முருகன் பெருமான் படத்தை மக்கள் மனதில் நான் நிருவி விட்டேன். எனவே நீங்கள் என்ன வேல் எடுத்துக்கொண்டு சுத்தினாலும் நாங்கள் கொண்டுவந்த படம்தான் ஓடும். எங்கள் ஞாபகம்தான் அவர்களுக்கு இருக்கும். அதுபோல தமிழ் பேரினத்தின் தலைவன் பிரபாகரன் என்று இந்த சீமான் ஏற்றுக்கொள்ள வைப்பேன். அது நடக்காமல் இருக்காது. இப்போது யாரும் தமிழினத்தின் தலைவர் கருணாநிதி என்று யாரும் சொல்வதில்லையே? யாரையாவது சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். கட்சிக்கு வேண்டுமானால் தலைவன் என்று சொல்லிக்கொண்டு சுத்துங்கள். ஆனால் இனத்தின் தலைவன் என்று யாரும் சொல்லிக்கொண்டு சுத்தக்கூடாது. 

 

தலைவன் என்றால் பெத்த பிள்ளைகளுக்கு பதவி கேட்டு அலையக்கூடாது, பிள்ளைகளையும் போர்களத்தில் பலியிட்ட தலைவனாக இருக்க வேண்டும். அவ்வாறு என் தலைவன் பிரபாகரன் இருக்கிறார். எனவே அவர் ஒருவரே தலைவன் என்ற சொல்லுக்கு தகுதியான நபராக இருக்க முடியும். என்னயே சிலர் கேட்கிறார்கள், சீமானிசம் என்று கூறுகிறீர்கள், ஆனால் பிரபாகரனிசம் என்று ஏன் வரவில்லை என்று கேட்கிறார்கள். பிரபாகரனிசம் ஏன் வரவில்லை என்று கேட்க வைத்ததே இந்த சீமானிசத்தின் வெற்றிதான். அதனால்தான் நாங்கள் பிரபாகரனின் பிள்ளை. நாங்கள் வைக்கிற புகைப்படத்தை எல்லாம் கிழிக்கிறார்கள். எங்கள் தம்பிகள் எங்களிடம் வந்து அண்ணன் புகைப்படத்தை முடக்குகிறார்கள் என்று புலம்புகிறார்கள்.

 

கொஞ்ச நாள்தான் தானே முடிக்குவார்கள், முடக்கட்டும். நீங்கள் மடக்கியும், ஒடுக்கியும் வைக்க நாங்கள் குடை இல்லை. மானத்தமிழர் படை என்பதை அவர்கள் விரைவில் உணர்வார்கள். என்னை நீ தடுக்கலாம், என்னை நீ முடக்கலாம், ஆனால் இந்த மண்ணில் நான் முன்வைத்த அரசியலை யாராலும் மறுக்க முடியாது. யாராலும் நினைக்க முடியாத மாற்று அரசியலை நாங்கள் முன்வைத்துள்ளோம். துணிவோடு இருங்கள், நம்பிக்கையை இழக்க தேவையில்லை. காலத்தை உருவாக்கிய தலைவனின் பிள்ளைகள் நாம். எனவே அச்சம் தேவையில்லாத ஒன்று. விரைவில் நமக்கான காலம் வரும். கையறு நிலையில் நம்மை விட்டுவிட்டு நம் தலைவன் செல்லவில்லை. நமக்கு தேவையானதை கற்பித்துவிட்டுத்தான் சென்றுள்ளார். 

 

அவர் விரல் நீட்டிய திசையில் நாம் பாய்வோம். நமக்கான விடுதலை நிச்சயம் இருக்கிறது. அதில் எள் முனையளவு கூட சந்தேகம் வேண்டாம். தமிழ்நாட்டின் முதல்வர் நாற்காலியில் நாம் அமர்ந்திடுவோம், அதன் பிறகு சிங்களவன் நிம்மதியாக தூங்கிடுவானா? அவனே சொல்கிறான். பிரபாகரனை விட ஆபத்தானவன் ஒருவன் வளர்ந்து வருகிறான் என்று. அனைத்தையும் விட்டுவிடுவோம். வருகிற தேர்தல் நமக்கு போர்க்களம், இறங்கி அடிப்போம். பயமா இருக்கா, முருகா, முருகா என்று சொல்லுங்கள். அதை பாஜக நபர்களும் சொல்கிறார்களா? சரி விடு, தனியாக அமர்ந்துகொள், பிரபாகரன், பிரபாகரன் என்று தனியாக அமர்ந்து சொல்லுங்கள், முருகனும், பிரபாகரனும் ஒன்றுதான். அதை கூறினால் நாடி நரம்பெல்லாம் முறுக்கேறிவிடும். எதையும் சாதிக்க வேண்டும் என்ற வெறி பிறக்கும். எனவே வரும் தேர்தல் நமக்கானது" என்றார்.

 

 

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.

Next Story

நா.த.க. சின்னம் தொடர்பான விவகாரம்; தேர்தல் ஆணையம் அதிரடி!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Election Commission action for NtK party symbols related issue

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே தேர்தல் சின்னம் தொடர்பான குழப்பம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது. அதாவது கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் இந்த தேர்தலில் கர்நாடகாவைச் சேர்ந்த மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இது நாம் தமிழர் கட்சியினரிடயே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதே சமயம் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டது.

Election Commission action for NtK party symbols related issue

இதனையடுத்து நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கபட்ட மைக் சின்னத்திற்கு பதில் வேறு ஒரு சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், தீப்பெட்டி, கப்பல், படகு, பாய் மரப்படகு அல்லது விவசாயம் சார்ந்த சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மைக் சின்னத்திற்கு பதில் வேறு சின்னம் கேட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டு பிரச்சாரத்தை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.