Skip to main content

மண் சோறு சாப்பிட்டும் பட ஓடவில்லையே ராஜா.... தர்பார் குறித்து சீமான் கிண்டல்!

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கிராமங்கள் தோறும் சென்று கூட்டங்களில் கஸந்து கொண்டு உரையாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது அதே பாணியில் ஒரு கூட்டத்தில் உரையாற்றும் போது மத்திய, மாநில அரசுகளை தாக்கி பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " தற்போது பெரும் முதலாளிகளின் வேட்டை காடாக பூமி மாற்றப்பட்டு வருகின்றது. அமேசான் காடுகள் தீப்பற்றி எரிகின்றது. ஒரு இடத்தில் தீப்பற்றி எரிகிறது என்றால், அதை இயற்கையாக நடக்கிற ஒரு நிகழ்வாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.  ஆனால் 650 இடங்களில் ஒரே நேரத்தில் காடுகள் தீப்பற்றி எரிகின்றது. 400க்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்கள் அங்கே வாழ்கிறார்கள். பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படுகின்ற அமேசான் காடுகள் பற்றி எரிகின்றன.

 

hj



ஆயிரக்கணக்கான உயிரினங்கள் அந்த தீயில் கருகி மாண்டுள்ளது. அதில் உள்ள விலை மதிக்க முடியாத மரங்களை எடுத்துக்கொள்ள சில நிறுவனங்கள் துடிக்கின்றன.  அந்த இடங்களை பன்னாட்டு நிறுவனங்கள் வேட்டை காடாக மாற்ற  நினைக்கின்ற போது, அங்கு இருக்கும் பழங்குடி இன மக்கள் அதை தடுக்கிறார்கள். உனக்கு அது காடு, எனக்கு அது வீடு வெளியேறு என்று அந்த பழங்குடியினர் தொடர்ந்து போராடுகின்றார்கள். போராடி, போராடி கடைசியாக நீதிமன்றம் செல்கின்றான். நீதிமன்றம் வன வேட்டைக்கு தடை விதிக்கின்றது. உடனடியாக காடு முழுவதும் பற்றி எரிகின்றது. உலகத்தின் நுரையீரல் புகையாக போய்க்கொண்டிருந்தது. இன்றைக்கு தன்னுடைய வாழ்விடங்களையும், உடமைகளையும் அடுத்தவர்கள் பறித்துக்கொள்ள கூடாது என்று போராட்டம் நடத்திய மக்களைதான் இன்று மாவோயிஸ்ட்டுகள் என்று அழைக்கின்றோம்.

நம்மை எப்படி மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடுகின்ற போது நம்மை எப்படி பயங்கரவாதிகளாக, தீவிரவாதிகளாக சித்தரித்தார்களோ அதைபோன்றே இவர்களையும் சித்தரித்துள்ளார்கள்.   இத்தனை ஆண்டுகாலமாக காடுகளை பராமரித்து காத்தவர்களையே அவர்களால் காடுகளுக்கு ஆபத்து என்று காடுகளை விட்டு அவர்களை விரட்ட பார்க்கிறார்கள். அருகில் இருக்கும் கேரளாவை பார்க்கிறோம். அடத்தியான மரங்களை ஒவ்வொரு வீடுகளுக்கு அருகிலும் நாம் பார்க்கிறோம். அதை போல் நம்முடைய மாநிலம் ஏன் இல்லை என்ற எண்ணம் நமக்கெல்லாம் ஏற்படுகின்றது. ஏன், எட்டுவழிச்சாலைகள் எல்லாம் உங்கள் மாநிலத்தில் அனுமதிக்கவில்லை என்று கேரள முதல்வரை பார்த்து கேட்டால் அது எங்கள் மாநிலத்தில் உள்ள வளங்களை எல்லாம் அழித்துவிடும் என்று அவர் பதில் கூறுகிறார்.

இன்றைக்கு இந்த மண்ணை ஆள துடிக்கின்றவர்கள், பல லட்சம் ரசிகர்கள் தனக்காக இருக்கிறார்கள் என்று சொல்பவர்கள் மரக்கன்றுகளை நட வைத்து இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஏதாவது செய்தார்களா என்றால் அப்படி எதுவும் செய்யவில்லை. இந்த நூற்றாண்டிலும் மண் சோறு சாப்பிடும் ஒரு கூட்டம் இருக்கின்றது. அப்படி மண் சோறு சாப்பிட்டும் படம் ஓடவில்லை. மேகம் மறைத்துவிட்டதால் ஒரு ஸ்டாரும் மின்னவில்லை. கேளிக்கைகளில் நாட்டம் கொண்ட எந்த இனமும் போராட வராது. காந்தி சொல்வதை போல உழைக்காமல் உண்பதும் ஒருவித திருட்டுத்தான் என்று சொல்லுவார். திண்ணையில் சும்மா உட்கார்ந்திருந்தால் அவன் இந்த சாதி, மதம் என்று பேச தோன்றும். உழைக்காமல் இருப்பவர்களுக்கு சோறு இல்லை என்று சொல்லிவிட வேண்டும். இவர்களை நினைக்கும் போது சிரிப்புத்தான் வருகிறது" என்றார். 

 


 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்