Skip to main content

“உங்களுக்கெல்லாம் கேவலமாக இல்லையா; அடுத்தவன் ஓட்ட நீங்களே போட்டு ஜெயிக்கிறதுக்கு பேரு வெற்றியா...?” - சீமான் கேள்வி

Published on 06/12/2022 | Edited on 07/12/2022

 

ிுப

 

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவரிடம் நடப்பு அரசியல் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, " குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்ற கருத்துக் கணிப்புக்கு என்ன பதில் சொல்வது, இது ஒரு வெற்றியா? கேவலமாக இல்லையா, இதற்கு எங்கேயாவது தொங்கி விடலாம். வாக்களிக்க வருகிறவனைத் தூரத்திலேயே நிறுத்தி வைத்துவிட்டு நீங்களே வாக்குகளைப் போட்டுக்கொள்வதுதான் மெகா வெற்றியா? இந்த மாதிரி தேர்தல் நடத்தினால் 8 முறை அல்ல 80 முறை கூட யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம். இதில் பெரிய மக்கள் செல்வாக்கு இருக்கிறதா? 

 

இன்றைக்கு அம்பேத்கருக்கு பாஜக உரிமை கொண்டாடுகிறார்கள். இவர்களுக்கும் அம்பேத்கருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? இருக்கிறது என்றால் அவர்களை ஒன்றையாது சொல்லச் சொல்லுங்கள். இன்றைக்கு பட்டேலுக்கு 3 ஆயிரம் கோடிக்கு குஜராத்தில் சிலை வைத்துள்ளார்கள். பட்டேல் அவ்வளவு பெரிய தலைவரா? இந்த இந்தியாவைத் தாண்டினால் வேறு யாருக்காவது அவரை தெரியுமா? காந்தி, அப்பேத்காரை விட இவர் பெரிய தலைவரா? நீங்கள் யாரை ஏமாற்ற தற்போது அம்பேத்கரை கையில் எடுத்துள்ளீர்கள் என்று அனைவருக்கும் தெரியும். குஜராத் மட்டும்தான் இந்தியா என்று நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்காதீர்கள். அந்த உலகத்திலிருந்து மீண்டு வாருங்கள் இல்லை என்றாலும் மக்கள் அதை உங்களுக்குப் புரிய வைப்பார்கள்.

 

தமிழகத்தில் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் தமிழகம் வருகிறார்கள். இவர்களைப் பற்றிய முறையான தகவல்களைத் தமிழக அரசு சேகரிக்க வேண்டும். அவர்களுக்கு எக்காரணத்தை முன்னிட்டும் வாக்குரிமை வழங்கக்கூடாது. ரேஷன் கார்டு கூட கொடுங்கள் சாப்பிட்டுவிட்டுப் போகட்டும். அதனால் எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. ஆனால் ஒருபோதும் வாக்குரிமை வழங்கக்கூடாது. அவர்களுக்கு வாக்குரிமை வழங்கினால் ஈழத்தில் தமிழர்களுக்கு என்ன நடைபெற்றதோ அதுதான் நமக்கும் நடைபெறும். இதனை ஒருபோதும் நாம் அனுமதிக்கக்கூடாது. இது நம் எதிர்காலத்தோடு விளையாடுவதைப் போல் ஆகிவிடும். இதில் நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

 

இல்லை என்றால் இவர்கள் வாக்களிக்கும் நபர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லும் நிலைக்கு நாடு சென்றுவிடும். அதைத் தவிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிலைப்பாடு என்பது ஏற்கனவே கூறியது போலத்தான், 40 தொகுதிகளில் நேரடி போட்டியில் ஈடுபடும், 20 ஆண் வேட்பாளர்கள் 20 பெண் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளார்கள். நாங்கள் தனித்தே தேர்தலை எதிர்கொள்வோம். இதில் எந்த சந்தேகமும் யாருக்கும் எழத் தேவையில்லை. எங்களைப் புறக்கணித்தவர்கள் எல்லாம் எங்களை நோக்கி வரும் சூழலைத் தேர்தல் முடிவுகள் நிச்சயம் ஏற்படுத்தும். தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாக நிச்சயம் நாம் தமிழர் கட்சி மாறும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். 

 

குறிப்பாக நாம் தமிழர் கட்சியோ நானோ ஒருவரை ஆதரிக்கிறேன் என்பதற்காக அவர்களின் அனைத்து கருத்துக்களையும் செயல்களையும் ஏற்றுக்கொண்டேன் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி கருத்துக்கள் இருக்கும், கோட்பாடுகள் இருக்கும், யாரையும் நாங்கள் கூறுவதுதான் சரி என்று கட்டாயப்படுத்தக் கூடாது. நம்மையும் யாரும் கட்டப்படுத்த முடியாது. எனவே சம்பவங்கள் அடிப்படையில் நாம் யாரையும் அடையாளப்படுத்த முடியாது. நமக்குத் தவறு என்று படும் விஷயங்களில் நான் கருத்துச் சொல்கிறேன். அதில் மற்றவர்களுக்கு மாற்றுக்கருத்து கூட இருக்கலாம். ஆனால் அதை நீங்கள் பேசவே கூடாது என்பது தவறான முன் உதாரணமாகிவிடும்" என்றார்.


 

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.

Next Story

நா.த.க. சின்னம் தொடர்பான விவகாரம்; தேர்தல் ஆணையம் அதிரடி!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Election Commission action for NtK party symbols related issue

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே தேர்தல் சின்னம் தொடர்பான குழப்பம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது. அதாவது கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் இந்த தேர்தலில் கர்நாடகாவைச் சேர்ந்த மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இது நாம் தமிழர் கட்சியினரிடயே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதே சமயம் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டது.

Election Commission action for NtK party symbols related issue

இதனையடுத்து நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கபட்ட மைக் சின்னத்திற்கு பதில் வேறு ஒரு சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், தீப்பெட்டி, கப்பல், படகு, பாய் மரப்படகு அல்லது விவசாயம் சார்ந்த சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மைக் சின்னத்திற்கு பதில் வேறு சின்னம் கேட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டு பிரச்சாரத்தை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.