Skip to main content

மோடிக்கு முன்னோடி...

Published on 08/11/2018 | Edited on 08/11/2018

 

ddd

 

2016ஆம் ஆண்டு... இதே நாள்...  இந்தியாவில்  பிரதமர் மோடியால்  'டீமானிடைசேஷன்' அறிவிக்கப்பட்டது. இதனை 'கருப்புப் பண ஒழிப்பு' தினமாக கொண்டாட  வேண்டும் என்று  அருண் ஜெட்லீ கூறினார். ஆனால் இத்திட்டத்தை அரசியல்வாதிகள் மட்டுமல்லாது பெரும்பாலான பொருளாதார அறிஞர்கள், சமூக  ஆர்வலர்கள், மக்கள் என பல தரப்பினரும் தோல்வி  நடவடிக்கையாகவே  கருதுகின்றனர். நமது பிரதமர் மோடியின் ஆட்சியை பலரும் துக்ளக் ஆட்சி என்று வர்ணித்தனர். மோடியுடன் ஒப்பிடும் அளவுக்கு துக்ளக்  என்னென்ன செய்திருக்கிறார் என்று பார்த்தோம். 14ஆம்  நூற்றாண்டில், இந்தியாவில்  பெரும்பகுதியை ஆண்ட 'துக்ளக்' வம்சத்தை சேர்ந்தவர் தான் 'முகமுது பின் துக்ளக்'. இந்த  துக்ளக் வம்சம் துருக்கி நாட்டை பூர்விகமாகக் கொண்டவர்கள். முகமது பின் துக்ளக்கின்  திட்டங்களையும், தோல்விகளையும் பற்றி பார்ப்போம். ஆரம்ப காலத்தில் முகமது பின் துக்ளக், அரசராக வேண்டும் என்று மக்கள் விரும்பினர், அரசரான பொழுது மிகுந்த எதிர்பார்ப்புடன், நல்ல காலம் பிறந்துவிட்டதாகக் கருதினர். அதற்குக்  காரணம் அவரின் குணமும் கல்வி   ஞானமும் ஆகும்.     

 

 

அப்போதைய 'டீமானிடைசேஷன்' 

 

 

dddd

 

கரன்சியை மாற்றியதில் மோடிக்கு முன்னோடி இவர். கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தும் தோல்வியைத்தான் தழுவியது என்றாலும்,  இந்தப் பணமாற்றம் படுதோல்வி அடைந்து  வரலாற்றில் ஒரு பெயரையும் அவருக்கு ஏற்படுத்தியது. நம் இந்தியாவில் தற்போது வரை  பிரச்சனையாகவே இருக்கும் இந்த 'கள்ளநோட்டு', இவர் ஆட்சியில்தான் அறிமுகமானது. கள்ளநோட்டை ஒழிக்க புதிய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வந்தது போல, இவர் புது  நாணயத்தை கொண்டு வந்தார்.  இவர் ஆட்சியில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களே  பயன்படுத்திருக்கின்றனர்.  வெள்ளி நாணயத்திற்கு ஈடாக வெண்கல நாணயம் கொண்டு வந்து ஒரே நாளில் பணத்தின் மதிப்பை அழித்திருக்கிறார். கள்ள வெண்கல நாணயங்கள் அச்சடிக்கப்பட்டு கஜானாவிலும், வணிகத்திலும் நிறைந்திருக்கின்றது. பின்னர் தோல்வியை  உணர்ந்து  திட்டத்தைக்   கைவிட்டார்.    

                       

'வரி'ப்புலி  

 

 

ddd

 

 

'தோப்' பிராந்தியம், இவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை  வளமாக இருந்துள்ளது. பிறகு இவர் தோப் பிராந்தியத்திற்கு அதிக வரி அமல்படுத்தினார். இதனால் மக்கள் சம்பாரித்த பணம்  முழுவதும்  அரசிற்கே தரும் நிலை  வந்தது. இவ்வூர்களில் பஞ்சம் ஏற்பட்டது,மக்கள் வேறு  ஊர்களில்   தஞ்சம் புக ஆரம்பித்தனர். சிலர் வழிப்பறி கொள்ளையர்கள் ஆகினர். கடைசியில்  தன் திட்டத்தின் தோல்வியை ஒப்புக்கொண்டு அதனை கைவிட்டார். வறுமையில் வாழும்  மக்களுக்கு அரசாங்க நிதியிலிருந்து  கடன் கொடுத்து விவசாயம் செய்யவைத்தார். 

 

வயலும் வாழ்வும் 

 

ஒரே பயிரை  பெரும்பாலான விவசாயிகள்  சாகுபடி செய்து வந்த வழக்கத்தை மாற்றி,  அவர்களைப்  பிரித்து வேறு  பயிர்களைப்  பயிரிடச்  செய்தார். இதனால் விவசாயம் வளரும்  என்று நினைத்து    இந்தத்  திட்டத்தில்  70 லட்சம் வரை செலவு செய்துள்ளார். ஆனால்  இத்திட்டமும் தோல்வியையே தழுவியது.இதற்கு காரணம், வளமான மண்ணில் அதற்கேற்ப நடவேண்டிய  பயிர்களை  நடவில்லை. மேலும் அரசு அதிகாரிகளின் தலையீடு இருந்ததால்,  இந்த காலகட்டத்தில்  லஞ்சம் தலைவிரித்து ஆடியது. நூறு நாட்களைக் கடந்தும், நிர்வாணமாக நடந்தும் போராடிய விவசாயிகளை சந்திக்கவேயில்லை நம் பிரதமர். 
 

 

தலைநகர் மாற்றம்

 

 

dd

 

'வடக்கில் இருந்துகொண்டு தெற்குப் பகுதிகளை ஆள கடினமாக உள்ளது, அதுமட்டுமல்லாமல்  தேவகிரியை தலைநகராக மாற்றிவிட்டால் தென்னாட்டில் இருக்கும் வளங்களை எளிதாக  எடுத்துக்கொள்ளலாம்' என்று  எண்ணினார். உடனடியாக தில்லியில் இருந்து தேவகிரிக்கு  அதிகாரிகளையும்,  மக்களையும் இடம்  மாற உத்தரவிட்டார். அரசனை மீறி எதனையும் செய்ய  முடியாது என்பதால் அவர்களும் பயணத்தை மேற்கொண்டனர். தில்லியில் இருந்து தேவகிரி  சுமார் 1500 கிமீ தொலைவில் உள்ளது. அரசர், மக்கள் எல்லோரும் வந்தடைந்தனர். பிறகு  ஆண்டுகள் கழிந்தன. மீண்டும் தலைநகரை தில்லியாகவே மாற்றினார். இச்சமயம் மக்களை  விட்டுவிட்டு அரச குடும்பம், அரசாங்க வேலை பார்ப்பவர்களை  மட்டும் கூட்டிச்சென்றுள்ளனர்.   இந்த குழப்பங்களில், பயணங்களில் மக்கள் உயிரிழந்தனர். அரசாங்கமும் நிலையிழந்தது.  

 

வெளிநாட்டு பயணங்கள் 

 

 குராஷன் அரசாங்கத்தைக்  கைப்பற்ற நினைத்தார். உலகின் பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட  வெற்றியாளராக வேண்டும் என நினைத்தார். அதற்காக பெர்சிய அரசிடம் உதவியை நாடினார்,  தங்களின் 1 லட்சம் வீரர்களை ஒரு வருட தொகைக்கு வாடகைக்கு எடுத்துகொள்கிறேன்  என்று  ஒப்பந்தம் போட்டுள்ளார். கடைசியில் பெர்சிய அரசாங்கம் இவருக்கு உதவியே புரியாமல்  சென்றுள்ளது. இந்தப்  பணிக்காக 3 லட்சம் வரை செலவு செய்திருக்கிறார். இதனால் பெரிய  நஷ்டத்தையும்  சந்தித்துள்ளார். 'அவரும்' வெளிநாடுகளின் மீது மோகம் கொண்டவர்தான்.

 

வருவாய்  சீர்திருத்தங்கள் 


அரசராக பதவி ஏற்ற பின்பு மாகானத்தின் மொத்த  வருமானத்தையும், அரசாங்க செலவையும்  மதிப்பிட வேண்டும் என நினைத்தார். அரசாங்கத்தில் வேலை பார்ப்பவர்கள் தங்கள் வரவு  செலவு கணக்கை  நேரடியாக ஆவணத்துடன் ஒப்படைக்க வேண்டும் என்று அவசர சட்டம்  பிறப்பித்தார். பிறகு இதற்காக மிகப்பெரிய அலுவலகத்தை நிறுவினார். அதில் வேலைக்கு  ஆட்கள் சேர்த்து ஆவணங்களை மதிப்பீடு செய்துள்ளார். இது ஒன்று தான் ஓரளவு   வெற்றிகரமாக  செயல்படுத்தப்பட்ட  திட்டமாகத் தெரிகிறது.  
 

பல விஷயங்களில் மோடி தர்பாரும் துக்ளக் தர்பாரும், 'இது அது மாதிரியே இருக்கே...' என்று  எண்ண வைக்கின்றன.     

 

 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார்.