Skip to main content

"துப்பாக்கி குண்டுகள் வீணாகும் என்ற காரணத்தினால் தாய்க்கு முன்பாக குழந்தைகளை ஒட்டி நிறுத்தி.." - உலகப்போரின் மறக்க முடியாத உண்மைகள்!

Published on 13/03/2020 | Edited on 13/03/2020

நாங்கள் சரணடயமாட்டோம், எக்காலத்திலும் நடக்காது. ஒருவேளை நாங்கள் அழிய நேரலாம். அப்படி ஒரு சூழல் வந்தால் மொத்த நபர்களையும் சேர்த்து நாங்களும் அழிந்து போவோம் - ஹிட்லர். 

1938 -ம் ஆண்டின் தலைசிறந்த மனிதர் என ''டைம்'' பத்திரிகை அட்டைப் படத்தில் போட்டு மரியாதை செய்த ஹிட்லரின்மறுபக்க கோரமுகம்தான் மேல காணும் வார்த்தைகள். ஹோலோகாஸ்டன் என்ற கிரேக்க வார்த்தையில் பிறந்த ஹோலோகாஸ்ட் என்பதன் அர்த்தம் நெருப்பில்  இட்டு பலி கொடுப்பது. ஆடு,கோழி பலி கொடுப்பது போல, கொலை செய்வது. உலகம் முழுக்க  ஹோலோகாஸ்ட்டை செயல்படுத்தியது  ஹிட்லரின்போர் வெறி.  உலகப்போருக்குமுன்1922 -ல் ஒரு பத்திரிக்கை பேட்டியில்   ''எனக்கு மட்டும் அதிகாரம் முழுமையாக கிடைத்துவிட்டால் நான் செய்யும் முதல் வேலை யூத இன அழிப்பாகத்தான் இருக்கும். வரிசைவரிசையாக தூக்கு மேடைகள் அமைப்பேன். என்னால் எத்தனை தூக்கு மேடைகள் அமைக்க முடியுமோ அத்தனையும்  அமைப்பேன். பின் யூதர்கள் தூக்கில் போடப்படுவார்கள். உடல் அழுகி துர்நாற்றம் வரும்வரை பிணங்கள் அங்கேயே தொங்கிக் கொண்டு இருக்க வேண்டும். சுகாதாரம் அனுமதிக்கும் வரை அங்கேயேதான் தொங்க வேண்டும். பின்னர் கயிற்றில் இருந்து விடுவித்து விட்டு அடுத்த குழுவை தூக்கிலிடுவோம். உலகின் கடைசி யூதன் இருக்கும் வரை இந்த என் பணி தொடரும்.
 

v


போர் ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கும் வேளையில் கொடுத்த வாக்கை காப்பாற்ற ஆரம்பித்தார். தூக்கு மேடைகளோடு விடவில்லை. பலவகையான (various) முறைகளில் மனிதர்களை கொல்வதற்காக தனியாக ஒரு அரசுத்துறை ஓன்று ஆரம்பிக்கப்பட்டது. கொல்லப்பட வேண்டியவர்களின் பிறப்புசான்றிதழ்கள் மற்றும் முழு விலாசமும் அரசுத்துறைகளில் இருந்தே மொத்தமாக பெறப்பட்டது. தபால் அலுவலகங்கள் யூதர்களை நாடுகடத்தும் உத்தரவு மற்றும் குடியுரிமை பறிப்பு ஆணைகள் அச்சிட்டு கொலையாளிகளிடமே தந்தன. யூதர்களின் சொத்துக்கள் பறிப்பு நடவடிக்கைகள் அரசு நிதித் துறையின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.

பணிபுரியும் யூதர்கள் அனைவரையும் வேலைகளை விட்டு வேளியேற்றும்படி முதலாளிகளுக்கு அரசுஆணை அனுப்பப்பட்டது. மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிகளில் இருந்து துரத்தியடிக்கப்பட்டனர்.  கைவசம் அட்ரஸ் இருந்ததால் கதவுகள் உடைக்கப்பட்டு யூதர்கள் கும்பல் கும்பலாக கைது செய்யப்பட்டனர். அரசு வாகனங்கள் அவர்களை கொலைக் களத்துக்கு அழைத்து சென்றன.மருத்துவ பரிசோதனைகளுக்கு எலி முயல்கள் அவசியப்படவில்லை. விலையின்றி மனிதர்களே கிடைத்தனர். கண் காது தோல் தொடங்கி அணைத்து பாகங்களிலும் ஆராய்ச்சி செய்யலாம். தங்கப்பல்கள் சேமித்து வைக்க அழகு வேலைப்பாடுகளுடன் கூடிய பெட்டிகள் விற்பனை சூடு பிடித்தது.பெரும் குழிகள் வெட்டி வரிசையாக நிறுத்தி வைத்து சுட்டு கொன்று உள்ளே தள்ளப்பட்டனர்.

துப்பாக்கி குண்டுகள் வீணாகும் என்ற காரணத்தினால் தாய்க்கு முன்பாக குழந்தைகளை ''ஒட்டி நிறுத்தி'' ஒரே குண்டில் இரு உயிர்களை கொல்லும் வேடிக்கைகள் காட்டப்பட்டன. துப்பாக்கியால் ''சுட்டு கொல்வது சலிப்பு'' ஏற்படுத்திய காரணத்தினால் விஷவாயு பரிசோதனைகள் நடைமுறை படுத்தப்பட்டன.பதினாறு சதுர அடிகள் கொண்ட 4 க்கு 4 தடுப்புகளுக்குள் நான்கு பேர் சாகும் வரை நின்று கொண்டே இருப்பது போன்ற நவீன தண்டனைகள் முன் மொழியப்பட்டன.  இரண்டாம் உலகப்போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை  5 கோடிக்கும் மேல். இதில் யூதர்களின் எண்ணிக்கைமட்டும் 1 கோடிக்கும் மேல். காரணம் ஹிட்லரின் இனவெறி. போர்வெறி. இனி ஒரு உலகப்போர். தேவையா?. வேண்டாம்.அமைதியான வாழ்வியலே உலக மக்களின் தேவை .
 

Next Story

ஹிட்லர் மீசை வரைந்ததற்காக சிறுவன் கைது

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

NN

 

ஹிட்லர் மீசை வரைந்ததற்காக சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் துருக்கியில் நிகழ்ந்துள்ளது.

 

துருக்கியில் நடைபெற்ற தேர்தலின் பொழுது ஹாடு ஓவன் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில் மர்ம நபர் ஒருவர் ஹிட்லரை போன்ற மீசையை வரைந்து, மேலும் அதில் அவதூறான கருத்துகளை எழுதியதாகக் கூறப்படுகிறது. இதற்கு அங்கு பெரும் எதிர்ப்பு எழுந்து நிலையில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் இச்செயலை செய்த சிறுவனின் வீட்டை கண்டுபிடித்து போலீசார் அவரிடம் விசாரித்தனர். விசாரணையில் சிறுவன் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.

 

 

Next Story

ஹிட்லரின் வரலாறை உலகமே சொல்லும்... காஷ்மீர் நிலை குறித்து காங்கிரஸ் சிறுபாண்மைதுறை அறிக்கை

Published on 25/09/2019 | Edited on 25/09/2019

காங்கிரஸ் கட்சி சிறுபான்மைதுறை மாநில தலைவர் அஸ்லம் பாஷா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பது முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி. இந்து மன்னரால் ஆளப்பட்ட பகுதி. மன்னர் ஹரிசிங் காஷ்மிர் தனிநாடாக அறிவித்தார். மன்னர் ஹரிசிங்கின் அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிராக ஷேக்அப்துல்லா களம் இறங்கினார். அவரின் தேசிய மாநாட்டு கட்சி மதசார்பற்ற காஷ்மீர் என்பதே தனது இலட்சியம் என அறித்தார். இடதுசாரிகளின் ஆதரவு ஷேக்அப்துல்லாவிற்கு பலமாக இருந்தது. காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதே காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பு என்று நம்பினார். பதான் பழங்குடி மக்கள் படையெடுப்பு பாக்கிஸ்தான் ஆதரவு ஐ.நா. பஞ்சாயத்து பொதுவாக்கெடுப்பு என நீண்டு இறுதியாக 370 என்ற சிறப்பு சட்டம் என்கிற அந்தஸ்த்துடன் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

 

 Hitler's history will tell the world ... Report of Congress Minority Report on Kashmir


இந்திய வரலாறு தெரியாத மோடி அரசு, ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை அமல்படுத்த முனைகிறது. ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே மொழி, ஒரே தேர்தல் என பிதற்றுகிறது. ஆரியர்கள் இருந்தார்கள், முஸ்லீம்கள் வந்தார்கள் என்ற திரிபு வரலாற்றை உறுதிசெய்யும் நடவடிக்கையே காஷ்மீர் விவகாரம். நாடாளுமன்றத்தில் ஒரு முஸ்லீம் உறுப்பினர்கூட இருக்கக்கூடாது. ஒரு முதலமைச்சர் கூட இருக்கக்கூடாது என்பதன் வெளிப்பாடுதான் காஷ்மீரின் மாநில அந்தஸ்த்து நீக்கம். இதன் மூலம் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கான மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே பாஜக நோக்கம்.

முஸ்லீம்கள் வந்தேரிகளே என வரலாற்றை மாற்ற பாஜக முயற்சிக்கிறது. அது இந்தியாவிற்கு பேராபத்தாக முடியும் என்பதை உணராமலேயே செய்கிறது. ஆரியர்கள் தங்கள் சூத்திர அடிமைகளைக்கொண்டு நடத்ததும் நாடகம் அவர்களுக்கு எதிராகவே திரும்பும் என்பதை உணர வேண்டும். வரலாற்றை உங்கள் விருப்பத்திற்கு வளைக்க நினைத்தால் ஹிட்லரின் வரலாறை உலகே சொல்லும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.