Skip to main content

திமுக – அதிமுகவை இணைக்க முயன்ற கடற்கொள்ளையர்!

Published on 05/03/2018 | Edited on 05/03/2018

5.3.1916 - பிஜு பட்நாயக் பிறந்தார்!

வடநாட்டில் பிறந்து வளர்ந்த பிஜு பட்நாயக் தமிழகத்தின் எலியும் – பூனையுமான திமுக – அதிமுக என்கிற இரண்டு கட்சிகளை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்தது.

பிஜு பட்நாயக் – ஒரிசா மாநிலம் பெல்லகுந்தா என்ற கிராமத்தில் லட்சுமிநாராயணன் என்பவரின் மகனாக 5.3.1916ந்தேதி பிறந்தார். ரவென்ஷா கல்லூரியில் படித்து முடித்தார். விளையாட்டில் ஆர்வமாக கலந்துக்கொண்ட இவர் பல்கலைகழக கால்பந்து மற்றும் ஹாக்கி அணிகளின் கேப்டனாக இருந்தார். ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் முடித்தார். படித்து முடித்துவிட்டு இந்தியாவில் ராயல் வான்படையில் பணியாற்றிக்கொண்டு இருந்தார்.
 

biju patnaik


1940 – 1942 வரை பிரிட்டிஷ் அரசின் சார்பில் இரண்டாம் உலகப்போரில் கலந்துக்கொண்டு போர் புரிந்துள்ளார். பணியாற்றினாலும், இந்தியாவிற்கான சுதந்திர போராட்டங்களில் கலந்து கொள்ள துவங்கினார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டு 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் இருந்த பிஜு பட்நாயக்கும் – நேருவும் நெருங்கிய நண்பர்கள். நேருவின் ஆலோசகராகவும் பிஜு இருந்தார்.
 

இந்தியாவைப்போல, இந்தோனேசியாவும் ஒரு காலத்தில் டச்சுக்காரர்களிடம் அடிமை தேசமாக தான் இருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு பின்பு இந்தோனேசியா சுதந்திரநாடாக செயல்பட துவங்கியது. இது டச்சுக்காரர்களை கோபம் கொள்ள வைத்தது. டச்சுக்காரர்களுக்கும் – இந்தோனேசிய ஆட்சியாளர்களுக்கும் இடையே மோதல் உருவானது. இந்தோனேசியாவின் கப்பல்படை – விமானப்படை முழுவதும் டச்சுக்காரர்கள் வசமிருந்தது. இதனால் பிறநாடுகளின் உதவிகளை கேட்க இந்தோனேசியா அதிபர் சுக்ரனோ, பிரதமர் ஜஹாங்கீரை அனுப்ப முயன்றார். ஆனால் அவர் செல்ல முடியாதபடி டச்சு அரசாங்கம் கப்பல்படை, விமானப்படை முழுவதும் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த விவகாரம் இந்தியாவின் இடைக்கால பிரதமராக இருந்த நேருவின் கவனத்துக்கு செல்ல அவர் இந்தோனேசியா பிரதமரை அந்த நாட்டில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வர அனுப்பப்பட்டவர் பிஜு பட்நாயக்.
 

சிறந்த விமான ஓட்டியான பிஜு பட்நாயக் இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்கு சென்று அந்நாட்டு பிரதமரை அங்கிருந்து அவரது சொந்த குட்டி விமானத்தில் அழைத்துக்கொண்டு சிங்கப்பூர் வந்தடைந்தார். அங்கிருந்து இந்தியாவுக்கு அழைத்து வந்திருந்தார். ஜேம்ஸ்பாண்ட் பட சாதனை போன்றது இந்த சாதனை. இதனால் தான் அவருக்கு பூமிபுத்ரா என்கிற விருதை வழங்கி இந்தோனேசியா இன்றுவரை கொண்டாடிவருகிறது. அதே போல் காஷ்மீர் இந்தியாவுடன் இணைப்பு விவகாரத்தில் இந்திய இராணுவ வீரர்களை காஷ்மீரில் இறக்கிவிட்ட நிகழ்வு மயிர் கூச்செரியும் நிகழ்வு.
 

இப்படி இந்தியாவை ஒட்டிய தேசங்களான நேபாளம், இந்தோனேசியா போன்ற நாடுகளின் சுதந்திர போராட்டத்துக்கு தீவிரமாக ஆதரவு அளித்து வந்தார் பிஜு பட்நாயக். இதனால் இந்தியாவின் கடற்கொள்ளையர் என அழைக்கப்பட்ட பிஜு பட்நாயக் இறந்தபோது, இந்தோனேசியா அரசு தன் நாட்டு கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டது.

 

biju patnaik


1946 முதல் அவர் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று வந்தார். 1961 ஜீலை 21ந்தேதி காங்கிரஸ் கட்சியின் ஒரிசா மாநில தலைவராக இருந்த பிஜு பட்நாயக், அம்மாநில முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது அவரது வயது 45 தான். 2 ஆண்டுகள் தான் அந்த பதவியில் இருந்தார். நேரு மறைவுக்கு பின் இந்திராகாந்தியின் நண்பராக இருந்தாலும் இருவருக்குள்ளும் மோதல் வந்து இதனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 1989ல் உட்கல்காங்கிரஸ் என்கிற மாநில கட்சியை தொடங்கி தேர்தலை சந்தித்தார். அதோடு, அப்போது இந்திராகாந்தி, இந்தியாவில் கொண்டு வந்த அவசர நிலைப்பிரகடணத்தின்போது, பிஜு பட்நாயக்கும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவசர நிலை விலக்கிக்கொள்ளப்பட்ட பின் நடைபெற்ற நாடாளமன்ற பொதுத்தேர்தலில் எம்.பி பதவிக்கு போட்டியிட்டார். அதில் வெற்றிபெற்று ஜனதா ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தார்.
 

1979 செப்டம்பர் மாதம் டெல்லியில் இருந்த முதலமைச்சராக இருந்த அதிமுக நிறுவனர் எம்.ஜி.இராமச்சந்திரனை சந்தித்து திமுகவும் – அதிமுகவும் இணைய வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தினார். சென்னை வந்து கலைஞருடன் பேசினார், பின்னர் கலைஞரும் – எம்.ஜி.ராமச்சந்திரனும் சந்தித்து பேசினார்கள். வெற்றிகரமாக நடந்து முடிந்தது பேச்சுவார்த்தை. ஆனால் இணைப்பு சாத்தியமாகவில்லை இதுப்பற்றி திமுக தலைவர் கலைஞர் தனது சுயசரிதையான, நெஞ்சுக்கு நீதியின் மூன்றாம் பாகத்தில் விளக்கமாக எழுதியுள்ளார். பின்னர் ஒருமுறை, பன்ருட்டி இராமச்சந்திரன் தான் திமுக – அதிமுக இணைப்பை தடுத்தார் என பகிரங்கமாக பேசினார். பிராந்திய கட்சிகள் வலிமையாக இருந்தால் தான் தேசிய கட்சிகளை எதிர்க்க முடியும், மாநில நலனை காக்க முடியும் என்ற கருத்தை உடையவர். அதனாலே திமுக – அதிமுக இணைய முயற்சி செய்தார்.

 

biju patnaik


ஒரிசாவின் முதலமைச்சராக முதல்முறையாக 1960ல் தேர்ந்தெடுக்கப்பட்டார் பிஜு பட்நாயக். அதன்பின் மத்திய பதவிகளில் இருந்த பிஜு பட்நாயக் மீண்டும் 1990 ல் முதல்வரானார். 1995 வரை முதல்வராக இருந்தார். இவரது மனைவி கியான். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். நவீன்பட்நாயக் என்கிற மகன் அப்பாவுக்கு பின் முதலமைச்சர் பதவிக்கு வந்தார். மகள் இந்தியாவின் சிறந்த பத்திரிக்கை எழுத்தாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

1997 ஏப்ரல் 17ந்தேதி உடல்நலக்குறைவால் மறைந்தார் பிஜு பட்நாயக். அவர் மறைந்தாலும் அவரால் பலன் பெற்ற இந்தோனேசியா உட்பட எந்த நாடும் மறக்கவில்லை.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.