Skip to main content

சாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு! நக்கீரன் 'EXCLUSIVE'...

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

sathankulam

 

சாத்தான் குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் தலையிட்ட மதுரை உயர்நீதிமன்றம் அவர்களது உடலை உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட்டது. அந்த உடற்கூறாய்வில் என்ன நடந்தது. அவர்களது உடலில் எப்படிப்பட்ட காயங்கள் இருந்தன. அவர்களது மரணம் எதனால் ஏற்பட்டது என்கிற தகவல்கள் நக்கீரனுக்கு Exclusive-வாக உடற்கூறாய்வு செய்த மருத்துவர்களின் வட்டாரத்தில் இருந்து கிடைத்தது.

 

உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவின் அடிப்படையில் உடற்கூறாய்வில் தடய அறிவியல் துறை பேராசிரியர், அதே துறையைச் சார்ந்த இணை பேராசிரியர் மற்றும் ஒரு உதவி பேராசிரியர் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் பேராசிரியர், உதவி பேராசிரியர் என இருவர் மட்டுமே இருந்தனர். இணை பேராசிரியர், ஒரு பெண் மருத்துவர். அவர் கடைசி நேரத்தில் உடற்கூறாய்வு செய்யும் குழுவில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக மதுரை மருத்துவக் கல்லூரி, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி, ஜிப்மர் மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் இருந்து தடய அறிவியல் துறை இணை பேராசிரியர் ஒருவரை இடம் பெற வைத்திருக்கலாம். அப்படி எந்த முயற்சியும் செய்யாமல் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் தடய அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் படிக்கும் ஒரு மாணவரை வைத்து உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

 

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வீடியோ எடுக்கப்பட்ட உடற்கூறாய்வில், இதுபோன்ற சர்ச்சைக்குரிய மரணங்களை உடற்கூறாய்வு செய்யும்போது பின் பற்றவேண்டிய டிஜிட்டல் அட்டாப்சி எனப்படும் நவீன உடற்கூறாய்வு முறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை. இறந்தவரது சடலத்தை சி.டி. ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கு உட்படுத்தினால் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயங்கள் தெளிவாகத் தெரியும். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் முறையில் முதுகுத் தண்டுவடத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது தெரியும். அவர் எதனால் இறந்தார் எனத் தெளிவாக தெரிந்துவிடும். அந்தப் பதிவுகள் எலக்ட்ரானிக் முறையில் அழிக்கப்பட முடியாத வகையில் இருக்கும்.

 

இங்கிலாந்தில் சமீபத்தில் சந்தேகப்படக்கூடிய விதத்தில் நடந்த மரணங்களை 'டிஜிட்டல் அட்டாப்சி' முறையில் மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்தார்கள். அதில் மரணத்திற்கான காரணம், மரணம் அடைந்தபோது இருந்த உடல்நிலை ஆகியவை மிகத் தெளிவாக தெரிந்தது. அந்த முறையில் இந்த இருவரது உடற்கூறாய்வும் மேற்கொள்ளப்படவில்லை.

 

பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் உடற்கூறாய்வின் அடிப்படையில் இருவரது மரணத்திற்கான காரணம் (Homicide due to prolonged physical and psychological torture) நீண்ட நேரம் உடல் மற்றும் உளவியல் சித்திரவதை மூலமாக மரணம் ஏற்பட்டிருக்கிறது என மருத்துவர்கள் தங்களது ரிப்போர்ட்டில் எழுதியிருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக அவர்களது பின்தொடை மற்றும் ஆசன வாயிலுக்கு அருகே உள்ள பகுதி மற்றும் ஆசன வாயில் பல இடங்களில் சதை கிழிந்து காயம் ஏற்பட்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.(Multiple contusions all over the gluteal and rectum region and in the upper and middle part of thigh). rectum எனப்படும் குடலின் கடைசிப் பகுதியான 12 செ.மீ. நீளமுள்ள மலக்குடல் எனப்படும் ஆசனவாய் வழியாக அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. (rectal bleeding) இதனால் அவர்களுக்கு ரத்தக் கசிவு அதிர்ச்சி (Haemorrhagic shock) ஏற்பட்டுள்ளது. இந்த ரத்தக் கசிவால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக அவர்களது ரத்த அழுத்தம் குறைந்திருக்கிறது. இதனால் இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் செயலிழந்து மரணம் ஏற்பட்டிருக்கிறது என அந்த அறிக்கையில் மருத்துவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


இதுபற்றி நம்மிடம் பேசிய உடற்கூறாய்வு மருத்துவ நிபுணர் ஒருவர், "அவர்களது விதைப்பை, ஆணுறுப்பு (scrotum, penis) ஆகிய பகுதிகளில் காயங்கள் இல்லை. அவர்களது வயிறு மற்றும் மார்பு கூட்டிற்குள் (abdomen, thorax) எந்தப் பாதிப்பும் இல்லை. எந்தக் காயமும் இல்லை. மரணத்திற்கான காரணம் அவரது இடுப்புப் பகுதியில் இருந்த ரத்தக் குழாய்களில் ஏற்பட்ட ரத்தப்போக்குதான்'' என்றார்.

 

http://onelink.to/nknapp

 

நாம் இதுபற்றி கருத்தறிய புகழ்பெற்ற மருத்துவரான டாக்டர் கருணாநிதியிடம் கேட்டோம். "இந்த ரிப்போர்ட்டின்படி மரணம் நிகழ்ந்திருக்குமானால் இது கொடுமையான, சித்ரவதையினால் ஏற்பட்ட மரணம். இதைச் செய்தவர்கள் தமிழக காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் மத்திய புலனாய்வுத்துறை விசாரித்தால்தான் இதில் உண்மைகள் வரும் என்றார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் மற்றும் சுப்ரீம் கோர்ட், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றிற்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்'' என்றார்.

 

சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படும் என எடப்பாடி அறிவித்திருப்பதில், டாக்டர் கருணாநிதி போன்றவர்களின் நியாயக் குரலும் அடங்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.