Skip to main content

மனைவி நடத்தை குறித்தே பொய் வழக்கு போட்டவர் அந்த இன்ஸ்பெக்டர்... அவரது மனைவியோ இவரது பெண்பித்து உள்ளிட்ட...

Published on 17/07/2020 | Edited on 17/07/2020

 

sathankulam police station

 

அப்பாவும் மகனும் அடித்துத் துவைக்கப்பட்ட வேளையில், அதே சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வேறொரு வழக்கிற்காக வந்திருந்த இரண்டு வழக்கறிஞர்கள் பற்றிய தகவல் கிடைக்கவே, பலகட்ட முயற்சிக்குப்பின் தொடர்பு கொண்டோம். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மிகுந்த கவனத்துடனும், சட்ட அணுகுமுறையுடனும் நடந்ததை விவரித்தனர்.

 

ஒரு புகார் சம்பந்தமா அந்த வழக்கறிஞர்கள் க்ளையண்ட்டுடன் இரவு 7 மணிக்கு காவல் நிலையம் போயிருக்கிறார்கள். அப்போதுதான் ஜெயராஜை ஏற்றி வந்த போலீஸ் வாகனத்திலிருந்து அவரது சட்டையைப் பிடித்து, ஸ்டேஷனுக்குள் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் தள்ள, தடுமாறிய ஜெயராஜ், கீழே விழாமல் சமாளித்துக் கொண்டார். அவரது பிடரியில் அடித்துள்ளார் எஸ்.ஐ.

 

சில நிமிடங்களில் உள்ளே வந்துள்ளார் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர். அப்போது அந்த வழக்கறிஞர்களில் ஒருவர், "என்ன சார், என்ன புகார்? ஏம் யிப்டி அடிக்கீக''ன்னு கேட்க, அந்த வழக்கறிஞரை முறைத்துப் பார்த்த இன்ஸ் ஸ்ரீதர், "வக்கீல்னா நீங்க வந்த வேலயப் பாக்கணும். இங்கல்லாம் கிராஸ் பண்ணக்கூடாது. அது வேற கேஸ். அவனுக போலீசையே அசால்ட் பண்ணுனவனுக. ஒங்களுக்குத் தெரியாது'' என வழக்கறிஞரிடம் சூடான வார்த்தைகளை விட்டிருக்கிறார் இன்ஸ். ஆனால், ஜெயராஜ், பெனிக்ஸ் குடும்பத்தை அறிந்த அந்த வழக்கறிஞர்கள், அவர்கள்மீது எந்த கேஸூம் இதற்கு முன் இருந்ததில்லை என்கிறார்கள்.

 

அப்பாவைப் போலீஸ் பிடித்துச் சென்றதால், பென்னிக்ஸ், தன் நண்பன் ரவிசங்கரோடு பைக்கில் வந்து இறங்கியிருக்கிறார்.

 

ஸ்டேஷனுக்குள் படபடப்பாக நுழைந்த பென்னிக்ஸிடம், ஏற்கனவே அங்கிருந்த இரு வழக்கறிஞர்களில் ஒருவர், "அந்த இன்ஸ்பெக்டர் எமோஷன்ல இருக்கார். இப்ப உள்ள போக வேணாம். நாம பேசிக்கலாம். அரைமணி நேரம் கழிச்சுப் போகலாம்'' எனச் சொல்லியிருக்கிறார்.

 

அதற்குள்ளாகச் சத்தம் கேட்ட எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், "அது யார்ல, அவன உள்ள கூப்டுலன்னு போலீஸ் முத்துராஜாவை அனுப்ப, யதார்த்தமா உள்ள போன பென்னி, "எங்கப்பாவ ஏம் அடிச்சீக''ன்னு கேட்க, உடனே பால கிருஷ்ணன் டேபிளை விட்டு ஆத்திரமா எழுந்திருக்க, கை எட்டவில்லை. சுற்றி வந்து பென்னிய அடிக்க முயற்சிக்க, பென்னி தடுக்க, அதில் பாலகிருஷ்ணன் தடுமாறி விழ, பென்னியும் நிலைகுலைந்து மேலே விழுந்துள்ளார். பென்னிக்ஸை பிடிக் கிறதுக்காக வந்த இரண்டு போலீஸ்காரர்கள் டேபிள் மேல விழ, அதிலிருந்த பொருட்கள் கீழே விழுந்து சிதறியுள்ளன.

 

sathankulam police station

 

உள்ளே இருந்த ஸ்டேஷன் ரைட்டர் ஃபியூலா செல்வகுமாரி, "ஏய், போலீஸ் ஸ்டேஷன்ல வந்து போலீசயே அடிக்காம்ல. அவன வுட்றாதீங்க. அடிச்சித் தூக்குங்கல''ன்னு வெறித்தனமா டேபிளை ஓங்கி அடிச்சிருக்காரு. அப்புறம்தான் உள்ளே வச்சி இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.கள், போலீஸ்காரங்க எல்லாரும் சுத்தி நின்று அடிச்சிருக்காங்க. வக்கீல்கள் இருவரும் இன்ஸ்பெக்டரிடம் கேட்டபோதும், வேலையைப் பார்த்துவிட்டு போகும்படி சொல்லிவிட்டாராம். ஐயோ, அம்மா ஆத்தான்னு உள்ளாற ரெண்டு பேரும் அலர்ற சத்தம். இது மனிதச் செயலல்ல. மிருகத்தனமான செயல் என்கின்றனர் ஸ்பாட்டில் இருந்த வழக்கறிஞர்கள்.

 

இரட்டைக் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், கேரளாவைப் பூர்வீகமாகக்கொண்டவர். தந்தை பி.டபிள்யூ.டி.யில் ஓர் அதிகாரி. வைகை டேம் கட்டிட வேலையின் போது அந்தப் பணிக்காகக் குடும்பத்துடன் தேனிப்பக்கமுள்ள ஆண்டிப்பட்டியில் குடியேறியிருக்கிறார்கள். போலீஸ் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட ஸ்ரீதர் டைரக்ட் எஸ்.ஐ.யாக 2001இன் போது முதன்முதலாக நெல்லை மாவட்டத்தின் பனவடலிசத்திரம் காவல் நிலையத்திற்குப் போஸ்டிங் போடப்பட்டார். பின்னர் புளியங்குடிக்கு மாற்றப்பட்டு 2003இன் போது சங்கரன்கோவிலுக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டவர்.

 

ஸ்ரீதரின் மனைவிக்கும் பூர்வீகம் கேரளா தான். கல்யாணத்துக்காக சாதி உள்பட பலவற்றிலும் பொய் சொல்லி ஏமாற்றிய ஸ்ரீதரின் வண்டவாளத்தை, பெண்குழந்தை பிறந்த பிறகே அறிந்த மனைவி, வீட்டிற்குள்ளேயே தனி வாழ்க்கையை நடத்தியிருக்கிறார்.

 

விவாகரத்து பெற நினைத்த இன்ஸ்பெக்டரோ, தன் மனைவி நடத்தை குறித்தே பொய் வழக்கு போட்டிருக்கிறார். அவரது மனைவி சசிரேகாவோ, ஸ்ரீதரின் பெண்பித்து உள்பட பலவற்றையும் ஆதாரப் பூர்வமாக எடுத்து வைக்க, ஸ்ரீதர் போட்ட வழக்கு டிஸ்மிஸ் ஆகிவிட்டது. அதன்பின் வாழப் பிடிக்காத சசிரேகா தன் பெண்குழந்தையுடன் கேரளாவிற்கே திரும்பிப் போய் விட்டார்.

 

http://onelink.to/nknapp

 

ஸ்ரீதர் தேவர்குளம் மாற்றப்பட்டு பதவி உயர்வில் இன்ஸ் ஆகி சாத்தான்குளம் வரை வந்திருக்கிறார். இதற்குள்ளாக அனைத்துக் கெட்டப் பழக்கங்களும் ஒட்டிக்கொள்ள அதன் தாக்கமாக உடல்நலமும் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

 

பேரூரணி ஜெயிலில் ஸ்ரீதர் அடைக்கப்பட்டாலும் அங்குள்ள ஜெயிலர்களிடம், "நானும் காக்கிச் சட்டைதான். உன்னைவிட ரேங்க் கூடியவன். கொடுக்க வேண்டிய மரியாதையக் குடுக்கலைன்னா விட மாட்டேன். என் அரசியல் செல்வாக்கின் மூலம் மீண்டும் பொறுப்புக்கு வருவேன்'' என்று கெத்துக் காட்டியிருக்கிறார். இது ஜெயில் சூப்பிரடண்ட் வரை போக அவ்வளவு தெனாவெட்டா எனக் கறுவியவர், சிறைக் கைதிகளை விட்டு ஸ்ரீதரை வசமாகக் கவனித்து விட்டாராம்.

 

 

Next Story

அலட்சியம் காட்டிய நகராட்சி; பரிதாபமாக பிரிந்த பெண் இன்ஸ்பெக்டரின் உயிர்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Woman inspector passed away due to unidentified speed breaker.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலைப்பணிகள் நடந்து முடியும் போது பல இடங்களில் தேவையில்லாமல் வேகத்தடைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. 

புதுக்கோட்டை - அறந்தாங்கி 30 கி.மீ சாலையில் 40க்கும் மேற்பட்ட வேகத்தடைகள், புதுக்கோட்டை - ஆலங்குடி  சாலையில் ஒரு கி.மீ உள்ளே இருக்கும் கல்லூரிகளுக்கு பிரதானச் சாலையில் பெரிய பெரிய வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. எந்த வேகத்தடையிலும் வெள்ளைக்கோடு அடையாளம் இருப்பதில்லை. இதே போல புதுக்கோட்டை நகராட்சி பகுதிக்குள் அமைக்கப்படும் சாலைகளில் திடீர் திடீரென பல இடங்ளிலும் பெரிய பெரிய திண்ணைகள் போல வேகத்தடைகள் அமைத்துள்ளனர். 

இந்தப் புதிய வேகத்தடைகள் அமைக்கப்பட்டாலும் அதற்கான அடையாளம் ஏதும் இல்லை. இதே போல பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலையில் பழைய அரசு மருத்துவமனை பிரிவு சாலையில் 4 சாலைகள் இணையும் இடத்தில் உள்ள சிக்னல்கள் பல வருடமாக வேலை செய்யவில்லை. மேலும் அதே இடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத்தில் இருந்து வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது.  ஆனால்  வேகத்தடை அமைத்த இடத்தில் வெள்ளைக்கோடுகள் அடையாளமிடவில்லை. இதனால் அந்த வழியாகச் சென்ற பலரும் தவறி கீழே விழுந்து சென்றுள்ளனர். அதன் பிறகும் அதனை கவனிக்காத நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது.

Woman inspector passed away due to unidentified speed breaker

இந்த நிலையில் தான் திருச்சி திருவரம்பூர் 2 காவல் நிலைய ஆய்வாளர் பிரியா 7 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை பணி முடிந்து இரவில் தனது குழந்தைகளைப் பார்க்க புதுக்கோட்டையில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். பேருந்து நிலையம் வந்த அவரது கணவர் ஆய்வாளர் பிரியாவை தனது புல்லட்டில் ஏற்றிக் கொண்டு செல்லும் போது அடையாளமில்லாத பெரிய வேகத்தடையில் பைக் ஏறி குதித்ததில் தடுமாறி கீழே விழுந்த ஆய்வாளர் பிரியாவின் பின்பக்க தலையில் பலத்த காயமடைந்தார். 

உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, திருச்சியில் உள்ள ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரதானச் சாலையில் திடீர் வேகத்தடை அமைத்த நகராட்சி நிர்வாகம் அடையாளக் கோடுகள் போடாமல் அலட்சியமாக இருந்ததால் அந்த வேகத்தடையே காவல் ஆய்வாளரின் உயிரைக் குடிக்கும் எமனாக இருந்துவிட்டது. இதே போல நகரில் ஏராளமான ஆபத்தான வேகத்தடைகள் உள்ளது.

ஒரு பெண் ஆய்வாளர் வேகத்தடையில் விழுந்த பிறகு யாரோ கோலப் பொடி வாங்கிச் சென்று தூவியுள்ளனர். அதன் பிறகு நேற்று இரவு நகராட்சி சார்பில் வெள்ளைக் கோடு போட்டுள்ளனர். ஒவ்வொரு பணியின் போதும் காட்டப்படும் சிறியஅலட்சியங்கள் தான் இப்படி உயிர்ப்பலிகள் வரை கொண்டு செல்கிறது என்பது தான் வேதனை. இப்படி அலட்சியமாக இருந்து உயிர்பலியாக காரணமாக இருந்த நகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் பெண் காவல் ஆய்வாளரின் நண்பர்களும், உறவினர்களும்.

Next Story

ராஜேஸ் தாஷுக்கு சிறைத்தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Former DGP Rajesh Das gets 3 jail sentence

தமிழக சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி, அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 16/06/2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்கத் தடையில்லை. நீதிமன்றத்தை மாற்றக் கோரிய ராஜேஷ்தாஸ் மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை” எனக் குறிப்பிட்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு மீதான் விசாரணை விழுப்புரம் முதன்மை நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல் முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 12 ஆம் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பூர்ணிமா தெரிவித்திருந்தார். 

அதன்படி இன்று, ராஜேஷ்தாஸின் மேல்முறையீட்டு வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறைத்தண்டனையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.