Skip to main content

'கொம்பன்' கம்பெடுத்தா வீட்டுக்கு முழுசாப் போவ முடியாது... வெறித்தனம் காட்டிய எஸ்.ஐ.ரகுகணேஷ்!!!

Published on 03/07/2020 | Edited on 03/07/2020

 

Raghu Ganesh

 

சித்ரவதைச் செய்யப்பட்டு கொலைக்குள்ளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் உடற்கூறாய்வு பாளை அரசு மருத்துவமனையில் 24 அன்று இரவு ஆரம்பிக்கப்பட்ட போது அங்கே நாடார் சமூகத்தின் ராக்கெட்ராஜா, ஹரி நாடார் அடங்கிய முக்கியப் புள்ளிகளுடன் மக்கள் கூட்டம் திரண்டுவிட்டது.

 

இரவு நேரத்தில் போஸ்ட்மார்ட்டம் நடந்ததில்லை. அதனால், பகலில்தான் நடத்தப்படவேண்டும் என்று ராக்கெட் ராஜாவும் ஹரிநாடாரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட போலீசார் மீது 302 செக்ஷன் போடப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்.

 

அதுவரையிலும் உடல்களை வாங்கப் போவதில்லை என்று ஜெயராஜின் மனைவி பிள்ளைகள், உள்ளிட்ட பொதுமக்களே ஆத்திரம் காட்டியது தூத்துக்குடி போலீசாரைப் பதற்றத்திலும் பதைபதைப்பிலும் தள்ளிவிட்டது.

 

சமாதானப் படலத்தை போலீஸ் உயரதிகாரிகளும் வருவாய் உயரதிகாரிகளும் நடத்தினர். விசாரணை நீதிபதியான கோவில்பட்டி ஜே.எம். பாரதிதாசன், ஜெயராஜ் குடும்பத்தார்களிடம் வாக்குமூலம் பெற்றார். போஸ்ட் மார்ட்டம் நள்ளிரவு முடிந்தது.

 

sathankulam

 

வாக்குமூலம் பற்றி விசாரித்தோம். ஜெயராஜையும், மகன் பென்னிக்சையும் கோவில்பட்டி சப்-ஜெயிலில் அடைத்த சாத்தான்குளம் போலீசார், "இவனுக போலீசையே அசால்ட் பண்ண வந்தவங்க. கவனியுங்க'' என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். அவர்கள் இருவரின் உடல்களில், தாக்கப்பட்ட அடையாளங்கள் இருந்தது என்று சிறைக் கண்காணிப்பாளர் குறிப்பெழுதியிருக்கிறார்.

 

அதை விசாரணை நீதிபதி ஆவணமாக்கிக் கொண்டார். அதன் பிறகே நீதிபதியிடம், "போலீசார்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது. உடல்களைப் பெற்றுக் கொள்கிறோம்'' என்று செல்வராணியும், மகள் பெர்சியும் சொன்ன பிறகே இருவரின் உடல்களும் வாங்கப்பட்டது.

 

பின்னர் முறைப்படி உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. தவிர, தந்தையும் மகனும் சித்ரவதைக்குள்ளாக்கப் பட்டபோது உடனிருந்து கால்களை மிதித்துப் பிடித்துக் கொண்டவர்கள் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீசின் கண்ணன், தளபதி, ஜேக்கப், எலிசா ஆகிய நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப் பெறுகிறது.

 

காரணம், வியாபாரிகளான ஜெயராஜூம் அவர் மகன் பென்னிக்சும், போலீஸின் சித்ரவதையால் பலியானது, முதல் சம்பவமல்ல. ஒரே மாதத்தில் நடந்த இரண்டாவது சம்பவத்தின் மூன்றாவது டார்ச்சர் கொலைகள். சாத்தான்குளம் காவல் சரகத்தில் வரும் தெற்கு பேய்க்குளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்ற 28 வயது இளைஞனை அவரது அண்ணன் துரை மீதான வழக்கிற்காக அழைத்துச் சென்றதுடன், துரையின் மாமனாரையும் தூக்கிச் சென்று, லாக்கப்பில் வெளுத்து வாங்கி, வீட்டுக்கு அனுப்பினார்.

 

உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகேந்திரன் 13.6.2020 அன்று இறந்து போனார். இப்போதுதான் இந்த விவகாரம் பரபரப்பாக வெளிப்படத் தொடங்கியுள்ளது. போலீஸ் அடியால் செத்தது பற்றி ஏற்கனவே தனது அம்மா, அக்கா ஆகியோரிடம் மகேந்திரன் தெரிவித்திருந்தது, பின்னர் அவர்களின் வாக்குமூலமாகப் பதிவாகியுள்ளது. தற்போது வைரலாகும் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் இருவர் பேசிக்கொண்ட ஆடியோவிலும் மகேந்திரன் பெயர் உள்ளது. 

 

வழக்கு ஒன்றில் தேடப்பட்டு பின் ஸ்டேஷனில் சரண்டரான பனைகுளத்தின் வார்டு கவுன்சிலர் ராஜாசிங்கை லட்டியால் வெளுத்த எஸ்.ஐ. ரகுகணேஷ், அவரை கோவில்பட்டி கிளைச் சிறையில் போட்டிருக்கிறார். தற்போது நெஞ்சுவலி காரணமாக ராஜா சிங்கை, கிளைச் சிறையினர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது தந்தை மகனின், சாவுக்கு முந்தைய சம்பவம்.

 

http://onelink.to/nknapp

 

"இந்த ஊர்ப் பசங்கள அடி உறிச்சாத்தான்டே வசத்துக்கு வருவானுங்கடேய்'' என்று அடிக்கடி வார்த்தையில் வெறித்தனம் காட்டும் எஸ்.ஐ.ரகுகணேஷ், "கொம்பன் கம்பெடுத்தாலும், பச்ச மட்டய தூக்குனாலும் தோல உருச்சிறிவேம்லேய். வீட்டுக்கு முழுசாப் போவ முடியாதுலேய்னே, பசங்கள வெளுத்து வாங்கிருவாறு. சுரேஷ், ராஜதுரை, பாலகுமார்னு 15க்கும் மேற்பட்ட பசங்க அவரோட அடியால புட்டம் பழுத்துப் போய் நடக்க முடியாமக் கிடக்கானுவ என்கிறார்கள் ஊர்க்காரர்கள். வெறித்தனமான அடியாலேயே சாத்தான்குளத்தைப் பதட்டத்தில் வைத்திருக்கும் எஸ்.ஐ.ரகுகணேஷ், 'கொம்பன்' என்று தனக்கு அடையாளமாகப் பெயர் வைத்துக் கொண்டதற்கும் காரணமிருக்கிறதாம்.

 

1967களில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட தூத்துக்குடியில் பிரபலமான டாக்டர் மரகதவேல். அவர், அவரின் மனைவி, ஒரு குழந்தை என மூன்று பேரும் பனங் கருக்குமட்டையால் வெறித்தனமாக அடித்துத் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டார்கள். டாக்டரின் ஒரு குழந்தை பீரோவின் பின்னால் மறைந்து கொண்டதால் அது தப்பியது. அப்போதே அங்கிருந்த ஆயிரம் பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. மூர்க்கத்தனமாக நடத்தப்பட்ட இந்தப் படுகொலை தமிழகத்தையே உலுக்கியது. அந்தக் கொலையில் அந்தப் பகுதியின் ஆண்டி, கொம்பன் இருவரும் குற்றவாளிகள்.

 

அவர்களின் பெயரைக் கேட்டால் ஊரே அதிரும். அதுபோல அதிர வேண்டும் என்பதற்காக ஒரு குற்றவாளியின் பெயரை போலீஸ் அதிகாரியான தனக்குப் பட்டப்பெயர் வைத்துக்கொண்டு ஈரப்பனமட்டைக்குப் பதில் தண்ணீரில் நனைத்த லத்தியால் வெளுத்து வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார் எஸ்.ஐ. ரகுகணேஷ். தண்ணீரில் ஊறப்போட்ட லட்டிக் கம்பு, கைநழுவாமல் இருப்பதற்கு கிரிப்பாக இருக்கும். ஒரே அடி, சதையைப் பிய்த்துவிடும். உள்ளே எரியும் ஆனா ரத்தம் வராது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.