Skip to main content

"ஐயா வலிக்குது அடிக்காதீங்க...'' கையெடுத்துக் கும்பிட்ட ஜெயராஜ்... -''ஐயாயிரம் ரூவா குடு...'' அடித்து கந்தலாக்கி பணம் கறந்த கொடுமை!

Published on 11/07/2020 | Edited on 11/07/2020
 jayaraj fenix

 

இரட்டை படுகொலையில் போலீசின் வண்டவாளங்கள் அம்பலப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பென்னிக்ஸுக்காக சாத்தான்குளம் ஸ்டேஷனுக்கு அவரது வக்கீல் நண்பர் சென்றபோது, விசாரிச்சிட்டு அனுப்பி வைக்கிறோம்னு சொன்னவர் டி.எஸ்.பி. பிரதாபன். அந்த டி.எஸ்.பி. ஸ்பாட்டில் இருந்தது கவனமாக மறைக்கப்படுகிறது என்கிறார்கள். வக்கீலும், பென்னிக்ஸ் தாய்மாமாவும் ஜன்னல் வழியே பார்த்தபோது, போலீசார் அடித்துத் துவைப்பது தெரிந்துள்ளது. பதறிப் போய் அலறியிருக்கிறார்கள்.

 

"ஐயா வலிக்குது அடிக்காதீங்க'' என்று ஜெயராஜ் எஸ்.ஐ.க்களை கையெடுத்துக் கும்பிட்டிருக்கிறார். சரி, "ஐயாயிரம் ரூவா குடு, ஒரு சின்னக் கேசாப் போட்டு ஒன்னய வெளியே அனுப்புறேன்'' என்று எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் சொன்னதும், வெளியே நின்றிருந்து பென்னிக்ஸின் தாய்மாமன் உடனே வீட்டுக்குப் போய் ஐந்தாயிரம் ரூபாயைக் கொண்டு வந்து எஸ்.ஐ.யிடம் கொடுத்திருக்கிறார். பணத்தை வாங்கிக்கொண்டு சொன்னதை செய்யாத எஸ்.ஐ.பாலகிருஷ்ணனும், ரகுகணேசும் கூட்டணி போட்டுச் சளைக்காமல் லத்தியால் இருவரது புட்டங்களையும் மாட்டை அடிப்பது போன்று வெறியைக் காட்டியிருக்கிறார்கள்.

 

போலீசார் முரட்டு அடியால், புட்டங்கள், வயிற்றுப் பகுதி ஊதிப் போய் மரண வேதனையில் கோவில்பட்டி கிளைச் சிறையிலடைக்கப்பட்ட பென்னிக்ஸை, அவரது நண்பர்கள் நான்கு பேர் ஜூன் 22 அன்று மனு போட்டு முறையாக பார்த்திருக்கிறார்கள். வலியால் தள்ளாடியபடி வந்த பென்னிக்ஸைப் பார்த்து நண்பர்கள் கண்ணீர் விட்டுள்ளனர்.

 

"போலீஸ்காரங்க நகழவிடாம மிதிச்சிக்கிட்டு லட்டியால தொடர்ந்து அடிச்சிக்கிட்டேயிருந்தாங்க. கம்புல எண்ணைத் தடவி ஆசனவாயில் உள்ளாற சொருவுனதால கடுமையான வலியப்பா, ரத்த ஒழுகல் நிக்கல்ல, உடம்புக்கு முடியல, நா பொழைக்க மாட்டேன் போலருக்குப்பான்னு'' பென்னிக்ஸ் கதறியதை பார்த்து நண்பர்கள் துடித்திருக்கிறார்கள். அன்று இரவு 9 மணிக்கு பென்னிக்ஸ் இறந்த தகவல், நண்பர்களை எட்டியதும் உறைந்துவிட்டார்களாம். இவைகளெல்லாம் சாட்சியமாக்கப்படலாம்.

 

எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், பணகுடியில் எஸ்.ஐ.ஆக இருந்தபோது, பெண் ஒருவருக்கு, தனக்கு பாலியலில் பிடித்தமானதை வெளிப்படுத்தி, லாட்ஜ் போகலாமா என்று உடம்பு கூசுகிற லெவலுக்கான வார்த்தைகளை எஸ்.எம்.எஸ். பண்ணியிருக்கிறார்.

 

கொதித்துப்போன அந்த பெண், எஸ்.பி. வரை ஆதாரத்துடன் அவரது வக்ர உணர்வைக் கொண்டு செல்ல, விவகாரமாகி பின் அங்கிருந்து வீரவநல்லூருக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அங்கேயும் பிரச்சனையாக, திசையன்விளை மாற்றப்பட்டவர், அங்குள்ள வசதிபடைத்தவர்கள் தொடர்பான புகார்கள் வரும்போது நடவடிக்கை எடுக்காமலிருப்பதற்காக லம்பான தொகையை வெட்டிவிடுவாராம். இந்த லம்ப் கொள்ளை தொடரவே அதுவே அவருக்கு வினையாகி, சாத்தான்குளத்திற்குத் தூக்கியடித்திருக்கிறது. விசாரணையில் களமிறங்கியிருக்கும் சி.பி.சி.ஐ.டி. டீம் படுகொலையான இருவரின் வீடு, கடை, அக்கம்பக்க பகுதிகளிலும் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.