Skip to main content

தூத்துக்குடி போலீசாரின் காலடியில் மிதிபட்டு கிடக்கிறதா தமிழகம்?  நீதிதேவதையே கொதித்தெழு, காலிகளைத் துடைத்தெறி! சிவசங்கர் ஆவேசம்!

Published on 30/06/2020 | Edited on 30/06/2020

 

sathankulam police station

 

தூத்துக்குடி ஸ்டெர்லை ஆலை எதிர்ப்பு ஊர்வலத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார் துணை வட்டாட்சியர் சேகர். 13 அப்பாவி உயிர்கள் பலியானது. அன்று, தொலைக்காட்சி பார்த்து தான், துப்பாக்கிச் சூடு குறித்து அறிந்தேன் என்றார் முதலமைச்சர் பழனிசாமி.

 

சாத்தான்குளம் காவல்நிலையத்தில், அப்பாவிகள் ஜெயராஜ் - பெனிக்ஸ் கொலை குறித்து உயர்நீதிமன்ற ஆணைப்படி விசாரணை நடத்திய நீதித்துறையை நோக்கி, "உன்னால் ஒன்னும் புடுங்க முடியாதுடா", என்றார் காவலர் மகராஜன். நீதிதேவதை முகத்தில் காறி உமிழ்ந்துள்ளார் மகராஜன்.

 

தமிழக முதல்வரை விட அதிகாரம் வாய்ந்தவரா தூத்துக்குடி துணை வட்டாட்சியர் சேகர்? உயர்நீதிமன்ற நீதிபதிகளை விட சக்தி வாய்ந்தவரா சாத்தான்குளம் காவலர் மகாராஜன்? இவர்கள் காலடியில் தமிழகம் மிதிபட்டு கிடக்கிறதா? 

 

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ரத்த வெறி பிடித்த, வக்கிர மனம் கொண்ட மிருகங்கள் ஆய்வாளர் ஸ்ரீதர், துணை ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் , காவலர்கள் மற்றும் காவல் நண்பர்கள் ஆடிய கோர, கொலை தாண்டவம் குறித்த எழுந்த எதிர்ப்பு குரலில் இன்னும் சூடு அடங்கவில்லை.


அதற்குள்ளாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் தங்கள் சகாக்களை காக்க செய்யும் செயல்கள் நீதியின் செவிளில் அறைகின்றன. இந்த "அறை"க்கும் விழிக்காவிட்டால் நம் குரல் வளை மீதும் பாய்வார்கள் இவர்கள்.


ஜெயராஜ், பெணிக்ஸ் கொலை சம்பவம் தமிழகம் தாண்டி இந்திய அளவில் கவனம் பெற்றிருக்கிறது. இந்திய அளவில் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், திரைத்துறையினர், விளையாட்டுத் துறையினர் எனப் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். அடுத்தக்கட்டமாக உலக கவனத்தை ஈர்க்கும் விஷயமாகவும் மாறி விட்டது.

 

S. S. Sivasankar


அமெரிக்காவில் காவலர்கள் சிலரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவருக்கு நீதி கேட்டுத் துவங்கிய, உலகளாவிய போராட்டம் இன்னும் தொடர்கிறது. அதற்கு அடுத்து ஜெயராஜ், பெணிக்ஸ் கொலை உலகளவில் கவனம் பெற்று வருகிறது. எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகின்றன.


உலகமே உற்று நோக்கும் ஜெயராஜ் - பெனிக்ஸ் கொலை வழக்கை,  ஊற்றி மூட நினைக்கிறது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை.


ஜெயராஜ், பெணிக்ஸ் கொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்த, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தன்னிச்சையாக அதனை வழக்காக எடுத்துக் கொண்டது. கோவில்பட்டி ஜுடிசியல் நீதிபதியை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்கள். நீதிபதி பாரதிதாசன் காவல் நிலையம் சென்று விசாரணை மேற்கொண்டார்.


அப்போது தூத்துக்குடி  மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குமார், தூத்துக்குடி துணை கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் அங்கு வந்திருக்கின்றனர். இவர்கள் முன்னிலையில் அங்கிருந்த காவலர்கள் சிலர் நீதிபதியின் நடவடிக்கைகளை வீடியோ எடுத்துள்ளனர். உயர்நீதிமன்ற ஆணைப்படி காவல் நிலைய ஆவணங்களை நீதிபதி கேட்டுள்ளார். அதனைத் தர மறுத்திருக்கிறார்கள். அப்போது தான் காவலர் மகராஜன் அந்த வார்த்தைகளைப் பேசி இருக்கிறார். 


இமெயில் மூலமாக இதனை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கவனத்திற்குக் கொண்டு சென்றார். இந்தத் தகவலைக் கேட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை, "தூத்துக்குடி மாவட்ட காவல் நிர்வாகம், நீதிபதியின் விசாரணயைத் தடுக்க தன்னாலான எல்லாவற்றையும் செய்திருக்கிறது", என்று தெரிவித்திருக்கிறது.


உலகமே பார்த்துக் காறி துப்பிக் கொண்டிருக்கும் ஒரு கொலை வழக்கில், முதலமைச்சரின் அனுமதி இல்லாமல் மாவட்ட காவல் நிர்வாகம் இவ்வளவு தைரியமாக நீதிமன்றத்தோடு மோத முடியாது. எதற்கும் துணிந்து விட்டார்கள் இந்த ஆட்சியாளர்களும், தூத்துக்குடி மாவட்ட காவல் நிர்வாகத்தினரும் என்றே தோன்றுகிறது.

 

சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், "காவலர்கள் கைதிகளைத் தாக்கக் கூடாது" என வெளிப்படையாகச் சொல்கிறார். காவல் துறை ஏ.டி.ஜி.பி. ரவி சாத்தான்குளம் விஷயத்தைத் தொடாமல், காவலர்கள் எப்படிக் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என வீடியோவில் தெரிவிக்கிறார். காவல்துறை துணை ஆணையர் சரவணன், சாத்தான்குளம் கொலை தொடர்பாக தன் வருத்தத்தைக் கவிதையாக வெளியிட்டுள்ளார். இப்படித் தமிழக காவல்துறையே, சாத்தான்குளம் கொலைக் கும்பலின் செயலால் அவமானத்தில் தலை தாழ்ந்து இருக்கும் போது, தூத்துக்குடி நிர்வாகம் மட்டும் இந்த வக்கிரபுத்தி கொலைக்காரர்களை காக்க துடிக்கிறது.


சாத்தான்குளம் காவல் நிலைய நிர்வாகத்தை, மாவட்ட ஆட்சியர் வருவாய்த்துறை மூலம் எடுத்துக் கொள்ள மதுரை உயர்நீதிமன்றம் வற்புறுத்தியுள்ளது. அந்த அளவிற்குத் தூத்துக்குடி மாவட்ட காவல் நிர்வாகத்தின் மீது உயர்நீதிமன்றம் உச்சபட்ச கோபத்தில் உள்ளது.


கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குமார், துணை கண்காணிப்பாளர் பிரதாபன் காவலர் மகராஜன் ஆகியோரை மாற்றம் செய்யாமல் இந்த வழக்கில் விசாரணையைத் தொடர முடியாது என நீதிமன்றம் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. 

 

http://onelink.to/nknapp


ஆனால் 12 மணி நேரமாகியும் காவல்துறைக்கு அமைச்சரான முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாய் திறக்கவில்லை. சொந்த ஊரில் விழா எடுத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.


நீதித்துறை நெருப்பில் தகிக்கிறது. எடப்பாடி பிடில் வாசித்துக் கொண்டிருக்கிறார்.


கொலைக் கும்பலை காக்க நினைக்கும் மாவட்ட காவல் நிர்வாகமும், எடப்பாடியும் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.


கொலைக்கும்பல் கைது செய்யப்பட வேண்டும். எடப்பாடி பதவி விலக வேண்டும். அப்போது தான் நேர்மையான விசாரணையை நடத்த முடியும்.


நீதிதேவதையே கொதித்தெழு, காலிகளைத் துடைத்தெறி!

 

எஸ்.எஸ்.சிவசங்கர்
அரியலூர் மாவட்ட திமுக செயலாளர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.