Skip to main content

''ரொம்ப உணர்ச்சிவயப்படுறீங்க..!'' -கதி கலங்கிய அமைச்சர்கள்!

Published on 12/02/2021 | Edited on 13/02/2021
Sasikala

 

சசிகலாவின் வருகை அ.தி.மு.க. தலைவர்களை ஏகத்துக்கும் பதட்டமடைய செய்திருக்கிறது. சிறையிலிருந்து விடுதலையான சசிகலாவுக்கு பெங்களூரிலிருந்து சென்னை வரையில் அசத்தலான வரவேற்பை அளிக்க திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார் டி.டி.வி. தினகரன்.

 

இதனையடுத்து முதல்வர் எடப்பாடியின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் டிஜிபி திரிபாதியை சந்தித்து, ""அ.தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என புகார் வாசித்தார்கள்.

 

டிஜிபியிடம் புகார் கொடுக்க அமைச்சர்கள் போயிருக்கக் கூடாது என ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பில் விவாதப் பொருளானது. ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான புதுமை பாலு நம்மிடம், ""முதலமைச்சர் எடப்பாடியும் அவரது தலைமையில் உள்ள அமைச்சரவை சகாக்களும்தான் தமிழக அரசின் உச்சபட்ச அதிகாரம் படைத்தவர்கள். இவர்களின் உத்தரவுகளை நிறைவேற்றும் பொறுப் பில் இருப்பவர்கள்தான் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள். அப்படியிருக்கும் நிலையில், டி.ஜி.பி.யை சந்தித்து அமைச்சர்கள் புகார் தெரிவிப்பது ப்ரோட்டகாலுக்கு எதிரானது.

 

கேபினெட் அமைச்சர்களே புகார் கொடுப்பது அவர்களைவிட டிஜிபி உயர்ந்தவராகி விடுகிறார் என பொருள். அதுவும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகமே புகார் கொடுப்பது மரபுகளை மீறிய செயல். ஒரு பிரச்சனை குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க புகார் தெரிவிக்க வேண்டுமாயின் அ.தி.மு.க. நிர்வாகிகள் சென்று கொடுத்திருக்க வேண்டும். அதுதான் மரபு. அமைச்சர்கள் செல்லக் கூடாது'' என்கிறார் அதிரடியாக.

 

ddd

 

இதற்கிடையே, சென்னையில் சசிகலாவுக்கு வரவேற்பும் பேரணியும் நடத்த அனுமதி கேட்டு கடந்த 5-ந்தேதி டிஜிபி திரிபாதியிடம் அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழன் மனு கொடுத்தார். இதனை அறிந்து டென்சனான எடப்பாடி பழனிச்சாமி, மீண்டும் சி.வி.சண்முகத் திடம் பேச, இரண்டாம் முறையாக மீண்டும் டி.ஜி.பி.யை சந்தித்து 6-ந் தேதி புகார் வாசித்தார் சி.வி.சண்முகம். அ.தி.மு.க.வினரிடம் பதட்டம் அதிகரித்தபடியே இருந்தது.

 

இது குறித்துப்பேசிய சி.விசண்முகம், ""சசிகலா, தினகரனின் ஆதரவாளர்கள் மனித வெடிகுண்டாக மாறுவோம் என பேட்டி தருகின்றனர். தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தி அதனை அ.தி.மு.க. மீது பழி போட துடிக்கிறார்கள். மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து விட்டு சிறை சென்றவர் சசிகலா''‘என்று போட்டுத்தாக்கினார். டிஜிபி அலுவலகத்தை விட்டு வெளியே சென்றதும், ""ரொம்ப உணர்ச்சிவயப்படுறீங்க'' என சண்முகத்திடம் சொல்லியிருக்கிறார் ஜெயக்குமார்.

 

தினகரனோ,’""சின்னம்மா (சசிகலா) வெளியே வருவதால் அமைச்சர்கள் பயந்து நடுங்குகிறார்கள். சட்டம் ஒழுங்குப் பிரச் சனையை ஏற்படுத்தி எங்கள் மீது பழிபோட திட்டமிட்டுள்ளனர்'' என்கிறார் ஆவேசமாக.

 

ddd

 

அ.தி.மு.க.வுக்கும் சசிகலாவுக்கும் சம்மந்தமில்லை என முதல்வர் தொடங்கி சில அமைச்சர்கள் வரை சொல்வதும், சசிகலாவின் வருகையை ஒடுக்க நினைப்பதும் எடப்பாடிக்கு எதிரான புகைச்சல்களை அ.தி.மு.க.வில் அதிகரிக்கச் செய்திருக்கிறது.

 

இதற்கிடையே சென்னைக்கு வந்ததும் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு முதலில் செல்ல வேண்டும் என்றே திட்டமிட்டிருந்தார் சசிகலா. வருவதற்கு 4 நாட்களுக்கு முன்பு, சென்னைக்குள் நுழைந்ததும் எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு சென்று, அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு (இதனை சசிகலாதான் அமைத்தார்) மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, எம்.ஜி.ஆர். வீட்டினுள் சில நிமிடங்கள் அமர்ந்து விட்டு கிளம்புகிற மாதிரி தனது திட்டத்தை மாற்றியிருந்தார் சசிகலா. இதனை ஜானகி எம்.ஜி.ஆரின் தம்பி மகள் சுதாவிடம் தெரிவித்தது தினகரன் தரப்பு.

 

இதனையறிந்து அதனை தடுக்கும் முயற்சியாக, மற்றொரு மகள் கீதா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை எதிர்த்து பதில் மனு தாக்கல் செய்ய சுதா தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எடப்பாடியின் மறைமுக தூண்டுதலாலேயே சசிகலாவுக்கு எதிராக மனு போடப்பட்டிருப்பதாக ஒரு தகவல் தினகரனுக்கு கிடைக்க, அதனை சசிகலாவிடம் வெள்ளிக்கிழமையே பாஸ் செய்திருந்தார்.

 

எடப்பாடியை மேலும் பதட்டமடைய வைக்க, எம்.ஜி.ஆர். இல்லத்தில் வரவேற்பு அதிகமாக இருக்க வேண்டும் என திட்டமிட்ட தினகரன், அந்த பொறுப்பை மாவட்ட கழக முன்னாள் துணைச்செயலர் வைத்திய நாதனிடம் கொடுத்தார். இந்த பதட்டச் சூழலால், ஜெ நினைவிடம் செல்ல நினைத்த சசிகலா, தம்மால் ஒரு மோதல் போக்கு உண்டாகி விடக்கூடாது எனவும் ஆலோசித்திருக்கிறார். 

 

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நம்மிடம் பேசிய பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க.வின் எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் அழகப்பன், ‘""காண்ட்ராக்ட் உள்பட எந்த பிரதிபலனும் பாராமல் 35 ஆண்டு காலம் கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக் கிறோம். சின்னம்மா மற்றும் முதல்வர் எடப்பாடிக்குமிடையே நடக்கும் மோதலால், புரட்சித்தலைவரால் உருவாக்கப்பட்டு அம்மாவால் பாதுகாக்கப்பட்ட அ.தி.மு.க. அழிந்து விடுமோ என பயமாக இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை சின்னம்மாவின் ஒற்றைத் தலைமைக்குள் அ.தி.மு.க. வந்தால் மட்டுமே இன்னும் பல ஆண்டுகாலம் அ.தி.மு.க. உயிர்ப்புடன் இருக்கும்'' என்கிறார் அழுத்தமாக!

 

சசிகலா-எடப்பாடி மோதலை பா.ஜ.க. உருவாக்கி வருகிறது என்ற எண்ணமும் அ.தி.மு.க தொண்டர்களிடம் உள்ளது.

 

 

 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.