Skip to main content

சின்னம்மா வரட்டும்... பல்லு பிடுங்கின பாம்பாயிருவாங்க... -கட்டம் கட்டவைத்த லூஸ்-டாக்!

Published on 25/07/2020 | Edited on 25/07/2020

 

sasikala admk

 

விருதுநகர் மாவட்டம்- சாத்தூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ., எஸ்.ஜி.சுப்பிரமணியம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக, அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. தற்போது, கட்சியில் எந்தப் பொறுப்பும் வகிக்காத சுப்பிரமணியத்தை நீக்கும் அறிவிப்பில், ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வமும், எடப் பாடி பழனிசாமியும் கையெழுத்திட்டுள்ளனர்.

 

rajendra balaji -  rajavarman issue

 


ஏன் இந்த நடவடிக்கை?

 

சாத்தூர் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், தனது தீவிர ஆதரவாளராக இருந்ததால், 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சிபாரிசு செய்து, அவர் எம்.எல்.ஏ. ஆவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார், மா.செ.வாக இருந்த கே.டி. ராஜேந்திரபாலாஜி. அதன் பிறகு, இருவருக்குமிடையே ’உரசல்’ ஏற்பட்டு, டிடிவி தினகரனின் அமமுக-வுக்கு தாவி, தகுதியிழப்பு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரானார், சுப்பிரமணியம். ஆனாலும், விருதுநகர் அமமுக மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு கிடைத்தது. பிறகு, அமமுக கசந்துபோய், மீண்டும் கே.டி. ராஜேந்திரபாலாஜி மூலம், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

 

sasikala admk rajendra balaji

 

சுப்பிரமணியத்தை, ராஜேந்திரபாலாஜி மீண்டும் அதிமுகவுக்கு கொண்டுவந்ததே, தனக்கு வேண்டாதவர் ஆகிவிட்ட சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கு ‘டஃப்’ கொடுப்பதற்காகத்தான் என்று அப்போது பேச்சு எழுந்தது. ஆனால், சாதிப்பாசம் இழுக்க... எதிர்பாராத "ட்விஸ்ட்' ஆக, அமைச்சரை கை கழுவிவிட்டு, ராஜவர்மன் எம். எல்.ஏ.-வுக்கு நெருக்கமானார் சுப்பிரமணியம். "நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்றாகி விட்டதே' என ராஜேந்திரபாலாஜிக்கு கோபமோ, கோபம். இந்த நிலையில்தான், வெறும் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருந்த சுப்பிரமணியம், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பிர மணியத்தை தொடர்பு கொண்டோம். ""என்ன தவறு செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. அமைச்சருக்கும், எம்.எல். ஏ.வுக்குமான உரசலில், நான் பலிகடா ஆக்கப் பட்டுவிட்டேன். ஒரு சாதாரண தொண்டனாக, நான் அதிமுகவில் தொடர்வதை யாராலும் தடுக்க முடியாது'' என்றார் குமுறலோடு.

 

சுப்பிரமணியம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தற்கு என்னதான் காரண மாம்?’ அதிமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். ""நானும் டிரவுசர் போட்ட காலத்துல இருந்து கட்சியில இருக்கேன். சொல்லப் போனா... இப்ப பெரிய பெரிய பொறுப்புல இருக் கிறவங்கள காட்டிலும் நான் சீனியராக்கும். சின்னம்மா வெளில வரட்டும். ஆட்சியில இப்ப டாப்ல இருக்கிறவங்கள்லாம் பல்லு பிடுங்கின பாம்பாயிருவாங்கன்னு, பப்ளிக்கா லூஸ்-டாக் விட்டு கட்சிக் காரங்களுக்குள்ள பிரச் சனை ஆயிருச்சாம். அப்புறம்... அமைச்சர் ராஜேந் திரபாலாஜிக்கு எதிரா இருக்கிறவங்கள ஒருங் கிணைச்சு மேல வரைக்கும் புகார் வேற அனுப்பினாராம். இது போதாதா? ராஜேந்திரபாலாஜி கிட்ட ஒபீனியன் கேட்டு எடப்பாடியும், ஓ.பி. எஸ்.ஸூம் கட்சியில இருந்தே சுப்பிரமணியத்த தூக்கிட்டாங்க''’என்றார் சிரித்தபடி.

 

""வெள்ளந்தியான சுப்பிரமணியத்துக்கு இது போதாத காலம்...''’என்று "உச்' கொட்டுகிறார்கள், சாத்தூர் தொகுதியில்!


 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.