Skip to main content

"சரத்பவார் முதல் சிந்தியா வரை.." உள்ளடி வேலைகளால் காங்கிரஸை கரைத்த பெரும் தலைகள்!

Published on 10/03/2020 | Edited on 11/03/2020

பெரும் பரபரப்புகளுக்கு இடையே கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் மூன்றில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றது. சிறிய கட்சிகளின் உதவியுடன் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் அரியணையில் ஏறியது. இனி வெற்றி முகம்தான் என்று காங்கிரஸ் தலைவர்கள் மார்தட்டிய நிலையில், 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. ஆட்சியில் இருந்த மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பெரும் மாநிலங்களில் கூட பாஜகவிடம் சரண்டர் ஆனது காங்கிரஸ் கட்சி.

 

gh



இத்தகைய தள்ளாட்டத்தில் காங்கிரஸ் கட்சி இருந்துவரும் நிலையில், கடந்த வருடம் கர்நாடகாவில் அதன் கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதா தளமும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏக்களும் அணி மாறியதால் காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியிழந்தது. சொல்லிவைத்தார் போல அடுத்த சில தினங்களிலேயே பாஜக ஆட்சியில் அமர்ந்தது. தேர்தல் வெற்றி பெற முடியாமல் காங்கிரஸ் கட்சி தள்ளாடுவது ஒருபுறம் என்றால், பெற்ற வெற்றியை தக்கவைக்க முடியாமல் திணறுவது என்பது நூறாண்டுகள் கடந்த காங்கிரஸ் கட்சிக்கு வரலாற்று சோதனை என்றுதான் சொல்ல வேண்டும்.  

அன்று கர்நாடகத்தில் கூட்டணியால் ஏற்பட்ட சோதனை இன்று விஸ்வரூபம் எடுத்து மத்திய பிரதேசத்தில் கட்சியின் முன்னணி தலைவரான ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். தனக்கு ஆதவாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை பெங்களூருக்கு கொண்டு சென்று மாநில அரசுக்கு தற்போது நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அதிரடி திருப்பமாக தற்போது பிரதமர் மோடி, மற்றும் உள்துறை அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அவர் பிஜேபியில் இணைவாரா அல்லது அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று பாஜக சார்பாக முதல்வர் பதவியில் அமர்வாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும். இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு இத்தகைய துரோகங்கள் புதிதல்ல. பிரணாப் முகர்ஜி ஏற்றி வைத்த இந்த அரசியல் நெருப்பு இன்று சிந்தியா வரை காங்கிரஸை எரித்தும், கரைத்தும் வருகின்றது. இதனை மிக சரியாக புரிந்துகொள்ள 40 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். 
 

h



1978ம் ஆண்டு மராட்டிய மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சி இரண்டு பிரிவுகளாக போட்டியிட்டது. சரத்பவார் 'தேவராஜ் காங்கிரஸ் அர்ஸ்' என்ற பெயரில் தேர்தலி்ல் களம் இறங்கி 62 இடங்களை பிடித்தார். இந்திரா காங்கிரஸ் கட்சி 69 இடங்களை பிடித்தது. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த ஜனதா கட்சி 99 இடங்களை பிடித்தது. சில மாதங்களுக்கு முன்பு அஜித்பவார் திடீரென பாஜக கூட்டணிக்கு சென்று துணை முதல்வர் பதிவியில் அமர்ந்தது போல, தேவராஜ் காங்கிரஸ் அர்ஸ் கட்சியில் இருந்து 40 எம்எல்ஏக்களை பிரித்து சென்று ஜனதா உடன் கூட்டணி அமைத்து முதல்வராக பொறுப்பேற்றார் சரத்பவார். அடுத்த சில ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரவே, சரத்பவாரின் ஆட்சியை டிஸ்மிஸ் செய்தார் இந்திரா. ஆனால் மராட்டியத்தில் பலமான இருந்த காங்கிரஸ் கட்சி அதனை பிறகு தேய ஆரம்பித்தது. மாறாக சிவசேனா மற்றும் பாஜக அதீத வளர்ச்சி கண்டது. இவ்வாறு காங்கிரஸின் கோஷ்டி பூசலுக்கு முதல் அச்சாரம் போட்டது சரத்பவர் என்றால் மிகையல்ல.

 

jh



இந்த சம்பவம் நடந்த சில வருடங்களுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பூசல் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பமானது 1984ம் ஆண்டு இந்திராவின் மறைவுக்கு பிறகுதான். இந்திரா மறைவுக்கு பிறகு பிரதமர் பதவி தனக்குதான் என்று நினைத்துக் கொண்டிருந்த பிரணாப் முகர்ஜிக்கு, திடீரென ராஜிவ் அரசியல் களத்துக்கு வந்தது பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அவரை பிரதமர் பதவியில் அமராத வண்ணம் பல்வேறு அரசியல் உள்ளடி வேலைகளை தன்னுடைய அரசியல் சாணக்கியத்தால் செய்யத் தொடங்கினார் பிரணாப். ஆனால், அம்மாவின் (இந்திரா) அரசியலை அருகில் இருந்து பார்க்காவிட்டாலும், வியூகம் வகுப்பதில் அப்போதே வல்லவரான ராஜிவ், பிரணாப்பின் தந்திரங்களை முடியடித்து ஆட்சி கட்டிலில் அமர்ந்தார்.

உள்ளடி வேலைகளில் ஈடுபட்ட பிரணாப்பை ஆறு ஆண்டுகள் கட்சியை விட்டு நீக்கம் செய்தார். பிறகு அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அமைச்சர் பதவி, பிறகு குடியரசுத்தலைவர் பதவி ஏற்றது எல்லாம் வரலாறு. இவ்வாறு காங்கிரஸில் கோஷ்டி பூசல் என்பது எல்லாம் காலங்காலமாக காங்கிரஸில் இருந்து வரும் ஒன்றுதான் என்றாலும் தற்போது பதவிக்காக மாநிலத்தின் ஆட்சியை பலி கொடுக்கும் அளவுக்கு செல்கிறார்கள் என்பதுதான் ஜனநாயகத்துக்கு கொடுக்கப்படும் உச்சபட்ச தண்டனையாக உள்ளது!

 

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.