Skip to main content

சரத்பவாருடன் ஆலோசனை? சிவசேனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக... மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு திருப்பங்கள்? 

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105 தொகுதிகளையும், சிவசேனா 56 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளையும், காங்கிரஸ் 44 தொகுதிகளையும் பெற்றது. இதில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பாண்மைக்கான 145 இடங்களை பெறவில்லை. 
 

இந்தத் தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தல் முடிவுக்கு பின்னர் சிவசேனா தங்கள் கட்சிக்கு இரண்டரை வருடங்கள் முதல் அமைச்சர் பதவி வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இதற்கு பாஜக சம்மதிக்கவில்லை. மேலும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரிடம் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்றும் பாஜக தெரிவித்துவிட்டது. சிவசேனா ஆட்சி அமைக்க 48 மணி நேரம் கால அவகாசம் கேட்டது. ஆனால் அதற்குள் ஆளுநர் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார் குடியரசுத் தலைவர். 

 

 Shiv Sena


 

இதையடுத்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களுடன் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் முதல் அமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தலா ஒரு துணை முதலமைச்சர் பதவி என்றும், சிவசேனா கட்சிக்கு 14 அமைச்சர்கள் பதவி, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 14 அமைச்சர்கள் பதவி, காங்கிரஸ் கட்சிக்கு 12 அமைச்சர்கள் பதவி என பிரித்துக்கொள்வதாக கூறப்பட்டது. 
 

சிவசேனா தலைமையிலான புதிய கூட்டணி விரைவில் ஆளுநரை சந்தித்து தாங்கள் ஆட்சி அமைப்பது தொடர்பாக பேசுவார்கள் என்று செய்திகள் வெளியானது. ஆனால் ஆளுநருடனான சந்திப்பு திடீரென தள்ளிப்போனது. தொடர்ந்து இந்த புதிய கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தியை சரத்பவார் சந்தித்துப் பேசினார். அப்போது, சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது. 


 

இதனிடையே மகாராஷ்டிரா மாநில பாஜக மூத்த தலைவர் நாராயன் ரானே, தங்களிடம் ஆட்சி அமைக்க போதுமான 145 எம்எல்ஏக்கள் ஆதரவு கொண்ட பட்டியல் இருக்கிறது. எப்போது வேண்டுமானலும் ஆட்சி அமைக்க தயாராக உள்ளோம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
 

இந்த பரபரப்பான சூழ்நிலையில் டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, சரத்பவார் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 

இதுகுறித்து நாம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் விசாரித்தபோது, தேர்தல் முடிவுக்குப் பின்னர் நிபந்தனை என்ற பெயரில் ஆட்சி அமைக்க விடாமல் முட்டுக்கட்டை போட்டு வரும் சிவசேனாவுக்கு பாடம் புகட்ட பாஜக தலைவர்கள் திட்டமிட்டனர். அதற்காக அவர்கள் சரத்பவாரை சந்தித்து ஆட்சி அமைப்பது தொடர்பாக பேச முடிவு எடுத்தனர். அதன்படி சரத்பவாரை பாஜக மூத்த தலைவர்கள் சிலர் சந்தித்துப் பேசியுள்ளனர்.


 

அப்போது, நீங்கள் சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க உள்ளதாகவும், அந்தக் கட்சி உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் கிடைத்தது. வாழ்த்துக்கள். அதற்கு முன்பு நாங்கள் சொல்வதையும் ஆலோசனை நடத்துங்கள். சிவசேனா, எங்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. தேர்தலுக்கு பின்னர் நிபந்தனை என்ற பெயரில் ஆட்சி அமைக்க விடாமல் முட்டுக்கட்டை போடுகிறது. எங்களுக்கு செய்த துரோகத்தைப்போல, நாளை உங்களுக்கும் துரோகம் செய்யாதா? காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மூன்று கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துவது சாத்தியமாகுமா? 
 

எங்களிடம் 105 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். உங்களிடம் 54 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். நாம் இருவரும் இணைந்து ஏன் ஆட்சி அமைக்கக்கூடாது?. நாம் ஏன் புதிய முயற்சி எடுக்கக்கூடாது?. உங்கள் கட்சிக்கு துணை முதல் அமைச்சர் பதவி உள்பட அமைச்சரவையில் கணிசமான பதவிகளும் தர தயாராக இருக்கிறோம்.  இல்லையென்றால் வேறு ஏதேனும் திட்டமிருந்தாலும் சொல்லுங்கள். சிவசேனாவுக்கு பாடம் புகட்ட நாங்கள் சில அரசியல்களை முன்னெடுக்க வேண்டியதாகியிருக்கிறது. அதனால் பாஜகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் முதல் அமைச்சர் பதவியை இரண்டரை ஆண்டுகாலம் பகிர்ந்து கொள்ளலாம். ஒருவேளை முதல் இரண்டரை ஆண்டு காலம் முதலமைச்சர் பதவியில் இருக்க நீங்கள் விரும்பினால் அதனை விட்டுக்கொடுக்க பாஜக தலைமை தயாராக உள்ளது என்கிற ரீதியில் சரத்பவாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. இதையடுத்து தங்கள் கட்சி எம்எல்ஏக்களுடன் சரத்பவார் ஆலோசனை நடத்தி சொல்வதாக தெரிவித்திருக்கிறாராம்.
 

சரத்பவார் இதுபற்றி தங்களது கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். எந்த நேரத்திலும் பரபரப்பு திருப்பங்கள் மகாராஷ்டிரா மாநில அரசியலில் ஏற்படலாம் என்கிறார்கள்.
 

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களிடம் விசாரித்தபோது, பிரதமர் மோடியை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பும், அதற்கு பின்னரும் மகாராஷ்டி மாநில மக்களின் நலனுக்காக சரத்பவார் சந்தித்துப் பேசியிருக்கிறார். இப்போதைய சந்திப்பில் எந்த அரசியலும் கிடையாது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பாகவும், மகாராஷ்டி மாநில மக்களின் நலனுக்காகவும் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. மற்றப்படி எந்த அரசியலும் இதில் கிடையாது என்றனர். 

 

Rajapaksha



 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வங்கி மோசடி புகார்; அஜித் பவார் மனைவி மீதான வழக்கு மூடிவைப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Closing the case against Ajitpawar's wife on Complaint of bank fraud

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அதன்படி, மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே முதற்கட்டமாக மகாராஷ்டிராவில் 5 தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதி நடத்தப்பட்டது. இதனையடுத்து, மீதமுள்ள 8 தொகுதிகளுக்கு வரும் 26ஆம் தேதி அன்று இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாய் நடைபெற்ற வந்த நிலையில், இன்று (24-04-24) மாலை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. 

மகாராஸ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அக்கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஸ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டனர். துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை வழங்கப்பட்டது. அதேபோல், அவரது அணியைச் சேர்ந்த 8 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்ட நிலையில் தங்களுக்கே கட்சி சொந்தம் எனத் தேர்தல் ஆணையத்தில் சரத்பவார், அஜித் பவார் தரப்பில் முறையிடப்பட்டது. இதனையடுத்து, அஜித் பவார் தலைமையிலான கட்சியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் எனத் தேர்தல் ஆணையம் அங்கிகரித்துள்ளது. அதேபோல் கட்சியின் கடிகாரம் சின்னத்தை அஜித்பவார் பயன்படுத்திக் கொள்ளவும் எனவும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதே வேளையில், நடைபெறவிருக்கிற மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா, பாராமதி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் இருக்கிற அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் போட்டியிடுகிறார். இதற்கிடையே, ரூ.25,000 கோடி கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை குற்றப்பிரிவு காவல்துறை நடத்தி வந்தது. இந்நிலையில், வங்கி மோசடி வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சுனேத்ரா பவார் மீது எந்தவித ஆதாரம் இல்லை என்றும், அவர் மீது குற்றமில்லை என்றும் வங்கிகளுக்கு பணம் இழப்பே இல்லை எனவும் மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிக்கை சமர்பித்து வழக்கை மூடியுள்ளது. 

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.