Skip to main content

சேலத்தில் பிரபல ரவுடிகளின் புகலிடமாகும் அதிமுக! குண்டர்கள் அடுத்தடுத்து ஐக்கியம்!!

Published on 01/02/2020 | Edited on 01/02/2020

சேலத்தில் குண்டர் சட்டத்தில் அடிக்கடி உள்ளே சென்று வந்த பிரபல கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் ரவுடிகள் ஆளும் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளது, கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த பரமசிவம் மகன் குமார் என்கிற வளர்த்தி குமார் (50). பிரபல ரவுடி. கடந்த பத்தாண்டுகளில் வெளியில் நடமாடியதைவிட சிறையில் இருந்தது அதிகம்.

 

kumar5




ரேஷன் அரிசி கடத்தல் மன்னனான வளர்த்தி குமார், ரேஷன் ஊழியர்கள், ரவுடிகளை கூட்டணி சேர்த்துக்கொண்டு அதை முழு நேரத் தொழிலாகவே செய்து வந்தார். பணம் கொட்டுவதை அறிந்த அவருடைய கூட்டாளி மோகன், வளர்த்தி குமாருடன் நேரடியாக மோதத் தொடங்கினார். இந்த மோதலில் மோகன் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் வளர்த்தி குமார் கைது செய்யப்பட்டார்.
 


மோகன் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த சண்முகம் என்பவரும் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கும் வளர்த்தி குமார் மீது பாய்ந்தது. அரிசி  கடத்தல், ஆள் கடத்தல், கொலை, வழிப்பறி என முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் சேலம் மாநகர காவல்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 


வளர்த்தி குமார் தொடர்ந்து வெளியே இருப்பது பொதுச்சமூகத்திற்கு ஆபத்து என்பதை உணர்ந்த காவல்துறையினர், அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க ஆரம்பித்தனர். இதுவரை ஆறு முறை குண்டர் தட்டுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார். சேலம் மாநகர காவல்துறை மட்டுமின்றி, உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினரும் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். 


 


அதேநேரம், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி காவல்துறையிலும் வளர்த்தி குமாருக்கு செல்வாக்கு இருந்ததால், வெளியே இருக்கும்போது அவருக்கு அச்சுறுத்தல் இருக்குமேயானால், உடனடியாக குண்டர் சட்டத்தில் உள்ளே சென்று விடுவார். இதில் வியப்புக்குரிய சங்கதி என்னவெனில், எந்த ஒரு குண்டர் சட்ட வழக்கிலும் இதுவரை அவர் ஆறு மாதத்திற்கு மேல் சிறையில் இருந்தது இல்லை.
 


இந்நிலையில், சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாஜலம் முன்னிலையில் வளர்த்தி குமார், வியாழக்கிமை (ஜன. 30) திடீரென்று அதிமுகவில் இணைந்தார். 
 


இது ஒருபுறம் இருக்க, சேலத்தின் மற்றொரு பிரபல ரவுடியும், ஆள்கடத்தல் புள்ளியுமான அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த ஜவஹர் (35) என்பவரும் ஆளுங்கட்சியில் ஐக்கியமானார். இவர் மீது கொலை, வழிப்பறி, ஆள் கடத்தல் என 25க்கும் மேற்பட்ட வழக்குகள் சேலம் மாநகர காவல்துறையில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவரும் இரண்டு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
 


சில மாதங்களுக்கு முன்பு, ஒரு முதியவரை மிரட்டி பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயன்றதாக அன்னதானப்பட்டி காவல்துறையில் ஜவஹர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த அவர், திடீரென்று அதிமுகவில் இணைந்தது, காவல்துறை வட்டாரத்தில் மட்டுமின்றி, அதிமுகவிலும் சலசலப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. 


 


மேலும், ஜவஹரின் நான்காவது மனைவி நளினி என்பவர், ஜவஹர் சேலம் மாநகரில் பல இடங்களில் விபச்சார விடுதிகள் நடத்தி வருவதாகவும், குடும்பப் பெண்களை திருமணம் செய்து, அவர்களையும் பலான தொழிலில் கட்டாயப்படுத்தி தள்ளி விடுவதாகவும் கடந்த 2014ம் ஆண்டில் சேலம் மாநகர காவல்துறை ஆணையரிடம் நேரில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 
 


உள்ளாட்சி தேர்தல் நெருக்கத்தில் ரவுடிகள் அதிமுகவில் இணைந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதேநேரம், காவல்துறை வசம் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும், ஆளுங்கட்சியில் அவர்கள் ஐக்கியமாகி வருவதாகவும் சொல்கிறார்கள் உள்ளூர் ர.ர.க்கள்.
 


மறைந்த முதல்வர் ஜெயலலிதா, குற்றவாளிகள், ரவுடிகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு அதிமுகவில் ஒருபோதும் இடமில்லை என்று அடிக்கடி முழங்குவார். ஆனால் தற்போது நிலவரம் தலைகீழாக மாறி விட்டது. அதன் விளைவுதான் அதிமுகவில் ரவுடிகள் அடுத்தடுத்து சேர்க்கப்பட்டு வருகிறார்கள் என்கின்றனர் ர.ர.க்கள்
 

சார்ந்த செய்திகள்

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.