Skip to main content

சேலம் மாநகராட்சி திவால்? ஊழியர்களின் 5 கோடி ரூபாய் பி.எப். மாயம்!

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

சேலம் மாநகராட்சி ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 5 கோடி ரூபாய் வரையிலான பி.எப். தொகை பல மாதங்களாகியும் பி.எப். கணக்கில் செலுத்தப்படாமல் உள்ளது, பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் மாநகராட்சியில் அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய நான்கு மண்டல அலுவலகங்களும், முதன்மை அலுவலகமும் இயங்கி வருகிறது. துப்புரவு பணியாளர்கள் முதல் முதன்மை ஊழியரான ஆணையர் வரை ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். ஊழியர்கள் சம்பளம், வாகன எரிபொருள், அலுவலக பராமரிப்பு, மின்கட்டணம் என மாதம் 21 கோடி ரூபாய் வரை அடிப்படை செலவினங்களுக்காக நிதி தேவைப்படுகிறது.

salem corporation corruption pf amount employees shock



ஆனால், இன்றைய நிலவரப்படி ஊழியர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் சம்பளம் கொடுக்கவே சம்பள கணக்கில் போதிய நிதி இல்லை என கைகளை அகல விரித்துள்ளது சேலம் மாநகராட்சி நிர்வாகம். மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் தத்தளித்து வரும் தமிழக அரசைக் காட்டிலும், சேலம் மாநகராட்சி நிர்வாகம் கடன் சுமையால் தடுமாறிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் நிர்வாகத்தின் வரவு செலவு விவகாரங்களைக் கவனிக்கும் ஊழியர்கள்.


அப்படி என்னதான் நிதி நெருக்கடி பிரச்னை? என்று நிர்வாகத்தில் சிலரிடம் கேட்டோம். 


''சார்... கடந்த 2011 முதல் 2016 வரை அதிமுக ஆட்சியின்போது, உள்ளாட்சி அமைப்பில் இருந்த மேயர் முதல் கவுன்சிலர்கள் வரை எல்லோரும் தங்கள் இஷ்டத்திற்கு பொதுக்குடிநீர்க் குழாய்களை பதிக்க வற்புறுத்தி, குழாய்களை பதித்தனர். இதனால் வீடுகளுக்கு பல புதிய குடிநீர்க்குழாய் இணைப்பு மூலம் கிடைக்க வேண்டிய  வருவாய் கணிசமாக குறைந்தது. மாநகராட்சி அங்காடிகள், சந்தைக்கூடங்களை ஏலம் எடுப்பதில் ஆளுங்கட்சியினர் சிண்டிகேட் அமைத்துக் கொண்டதால் குறிப்பிட்ட தொகைக்கு மேல் எந்த ஒரு கடையும் ஏலம் போகவில்லை. அதனாலும் வருவாய் குறைந்தது.


எல்லாவற்றுக்கும் மேல், வரி வருவாய்தான் முதன்மை வருவாய் மூலமாக இருந்து வந்த நிலையில், வரி குறைப்பு பற்றி உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டதால், வரி வசூலிப்பிலும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. மாதத்தில் இரண்டு மூன்று முறை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் வந்து விடுவதால், அவர்களுடன் வரும் அதிகாரிகள் முதல் ஆளுங்கட்சிக்காரர்களின் உணவு உபசரிப்பு, போக்குவரத்துச் செலவினங்கள் வரை எல்லாமே எங்கள் தலையில்தான் கட்டி விடுகின்றனர். இதற்கெல்லாம் எந்த கணக்கு வழக்குகளும் கிடையாது. 


இது மட்டுமின்றி, அம்மா உணவகங்களால் மாநகராட்சிக்கு நிகர நட்டம் ஏற்படுகிறது. யாரோ சிலர் அதிகார மையத்திடம் நல்ல பெயர் எடுக்க இப்படி ஒரு திட்டத்தை அறிவித்து விட்டனரே தவிர, அதற்கென தனியாக நிதி ஒதுக்கீடு எதுவும் வழங்காததால், மாநகராட்சி நிர்வாகம் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. பல்வேறு திட்டங்களுக்காக சேலம் மாநகராட்சி பெற்ற கடன்களுக்காக மாதந்தோறும் வட்டி மட்டுமே 3.50 கோடி ரூபாய் செலுத்தி வருகிறோம். அதனால்தான், ஊழியர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் சம்பளம் கொடுக்க முடியவில்லை. செப். 28ம் தேதி ஆகியும் ஆகஸ்ட் மாத ஊதியம் வழங்கப்படாததற்கும் அதுதான் காரணம்,'' என புலம்பித் தள்ளினர் ஊழியர்கள்.


இது ஒருபுறம் இருக்க, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, ஊழியர்களிடம் அவர்களின் சம்பளத் தொகையில் இருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்யப்பட்ட பிஎப் தொகையும் இன்னும் அவர்களின் பிஎப் கணக்கில் செலுத்தப்படாமல் உள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வகையில் மட்டும் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் பிஎப் தொகை பிடித்தம் செய்யப்பட்டு கணக்கில் செலுத்தப்படாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.


சேலத்தைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலரும், பாஜக முன்னாள் கிளைத்தலைவருமான தாதை சிவராமன், ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல்களின்படி, அம்மா உணவகம், கொசு ஒழிப்புப்பிரிவு, திடக்கழிவு மேலாண்மை ஆகிய பிரிவுகளில் பணியாற்றி வரும் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 3.36 கோடி ரூபாய் பிஎப் தொகை, இதுவரை பிஎப் கணக்கில் செலுத்தாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. சூரமங்கலம் மண்டல ஊழியர்கள் நீங்கலாக மட்டுமே இவ்வளவு தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் சூரமங்கலம் மண்டலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையையும் சேர்த்தால் 5 கோடி ரூபாய்க்கு மேல் பிஎப் தொகையை ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்காமல் ஏமாற்றி வருவது தெரிய வந்துள்ளது.

salem corporation corruption pf amount employees shock


''சேலம் மாநகராட்சி நிர்வாகம் ஊழியர்களிடம் பிடித்தம் செய்த 5 கோடி ரூபாய் பிஎப் தொகையை, பல ஆண்டுகளாக ஊழியர்களின் பிஎப் கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்திருக்கிறது. அந்தத் தொகை என்ன ஆனது? அதிகாரிகள் சுருட்டி விட்டார்களா? என்ற விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இது மட்டுமின்றி, 2014 முதல் 2018 வரை துப்புரவு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வந்த சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம், கொசு ஒழிப்புப் பணிகளை ஒப்பந்தம் எடுத்திருந்த ஐலேக் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனமும் ஊழியர்களிடம் பிடித்த செய்த பிஎப் தொகையை முறையாக அவர்களின் கணக்கில் செலுத்தாமல் ஸ்வாகா செய்திருக்கின்றன. 


எனது புகார்களின்பேரில் இந்த மூன்று நிறுவனங்கள் மீதும் இபிஎப் அலுவலகத்தில் விசாரணை நடந்து வருகிறது. மாநகராட்சியின் அலட்சியத்தால் பணியின்போது இறந்த தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள் பிஎப் பணத்தை எடுக்க முடியாமலும், பென்ஷன் பலன்களைப் பெற முடியாமலும் அல்லல் படுகின்றனர். இப்படி செயல் திறனற்ற மாநகராட்சிக்குதான் சிறந்த மாநகராட்சி விருது என்று தமி-ழக அரசு விருது கொடுத்துள்ளது வெட்கக்கேடு,'' என்று கொதித்தார் தாதை சிவராமன். 


நம்முடைய கள விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்களும் கிடைத்துள்ளன.


அதாவது, 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வரும் தொழிலகங்களில் ஊழியர்களின் சம்பளத் தொகையில் இருந்து பிஎப் (தொழிலாளர் வருங்கால வைப்புநிதி) கணக்கில் மாதந்தோறும் 12 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படும். அத்தொகைக்கு நிகராக வேலை அளிப்பவரும் (இங்கே சேலம் மாகராட்சி நிர்வாகம்) 12 சதவீதம் அந்த ஊழியரின் கணக்கில் செலுத்த வேண்டும். வேலை அளிப்பவர் செலுத்தும் 12 சதவீத தொகையில் 8.33 சதவீதம், ஊழியர்களின் பென்ஷன் கணக்கில் தனியாக வரவு வைக்கப்படும். இவ்வாறு செலுத்தப்படும் பிஎப் தொகைக்கு தற்போது 8.50 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த கணக்கில் இருந்து தொழிலாளர்கள் கடன் பெறும் வசதியும் உண்டு.


சேலம் மாநகராட்சி நிர்வாகம் பிஎப் தொகை செலுத்தாமல் உள்ளதை சுட்டிக்காட்டி, பலமுறை நினைவூட்டல் கடிதங்களை அனுப்பியும் கண்டும்காணாமலும் இருந்துள்ளது. இதனால் வெறுத்துப்போன சேலம் மண்டல பிஎப் அலுவலக அதிகாரிகள், நேரடியாக மாநகராட்சி அலுவலகத்தில் சென்று அங்குள்ள கணக்குவழக்கு ஆவணங்களை ஆய்வுக்காக கேட்டபோது அவர்களை உள்ளே விடாமல் மாநகராட்சி ஊழியர்கள் தகராறிலும் ஈடுபட்டுள்ள சம்பவமும் நடந்துள்ளது. 


இது தொடர்பாக சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸிடம் விளக்கம் பெற முயன்றோம். அவர் நம் செல்போன் அழைப்பை எடுப்பதை தவிர்த்தார். அவருக்கு அடுத்த நிலையில் இருந்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''மாநகராட்சி நிர்வாகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் பிஎப் தொகையை உரியவர்களின் கணக்கில் செலுத்த முடியாமல் தடுமாறி வருகிறோம். இப்போது பலவகையிலும் செலவினங்களைக் குறைத்தும், வரி வசூலை தீவிரப்படுத்தியதாலும்தான் தாமதம் ஆனாலும் ஊழியர்களுக்கு சம்பளமாவது கொடுக்க முடிகிறது,'' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார். 

salem corporation corruption pf amount employees shock


இதையடுத்து நாம் சேலம் மண்டல இபிஎப் அலுவலக அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம்.


''ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பிஎப் தொகையை, பிரதி மாதம் 15ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட ஊழியரின் பிஎப் கணக்கில் செலுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் மீது, இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் மோசடி செய்ததாக புகார் அளிக்க முடியும். சேலம் மாநகராட்சி நிர்வாகம் பிஎப் தொகை செலுத்தாமல் இருப்பது குறித்து பலமுறை அறிவுறுத்தப்பட்டும் கண்டுகொள்ளவில்லை. பிஎப் சட்டப்பிரிவு 7 (ஏ)-ன் கீழ் மாநகராட்சி அதிகாரிகளிடம் இப்போது விசாரணை நடந்து வருகிறது. 


கடைசியாக செப். 24ம் தேதி மாநகராட்சி உதவி ஆணையர் ரமேஷ்பாபு என்பவர் விசாரணைக்கு ஆஜரானார். அவரோ, மாநகராட்சி செலுத்த வேண்டிய பிஎப் தொகையை தள்ளுபடி செய்யும்படி கடிதம் அளித்தார். பிஎப் தொகை என்பது ஊழியர்களின் பணம். அதை எந்தக்காரணம் கொண்டும் தள்ளுபடி செய்ய முடியாது. அவர்கள் அடிப்படை புரிதல்கூட இல்லாமல் நடந்து கொள்கின்றனர். விசாரணை முடிவில், மாநகராட்சியின் வங்கிக் கணக்கு, பிஎப் அலுவலக கணக்குடன் இணைத்துக் கொள்ளவும் சட்டத்தில் இடமிருக்கிறது. இப்படி பிஎப் பணத்தைச் செலுத்தாமல் இருப்பதும் மோசடி குற்றமே,'' என்றார்.


பிஎப் நிதி என்பது ஊழியர்களின் செங்குருதி என்பதை சேலம் மாநகராட்சி உணர வேண்டும். குருதியையே உணவாகக் கொள்வோரால் மட்டுமே பிஎப் தொகையிலும் மோசடி முடியும்.




 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.