Skip to main content

எல்லைமீறிய ரவுடித்தனம்! காக்கிகளின் புதுப்புது டெக்னிக்!

Published on 15/09/2018 | Edited on 15/09/2018

தமிழ்நாடு காவல்துறை, திருடர்கள் மற்றும் ரவுடிகளிடம் விசாரணை நடத்தும்போது,   புதுப்புது டெக்னிக்குகளைக் கையாள்கிறது. 

 

police vs rowdies


 

பொம்மைகள் ஆன திருடர்கள்!

கெட்டதைப் பார்க்காதே; பேசாதே; கேட்காதே! மூன்று குரங்கு பொம்மைகளைக் காண்பித்து, மகாத்மா கூறிய தத்துவம் நாம் அறிந்ததே!  இதே காந்தி ஸ்டைலுக்கு சென்னை காவல்துறையினர் மாறியிருக்கின்றனர். 
ஒரு வாரத்துக்கு முன், சென்னை மந்தைவெளியில் சீருடையில் இருந்த மணிமாறன் என்ற ஆயுதப்படை காவலரிடம் செல்போனை லபக்கிவிட்டான். இந்த விஷயம் லீக் ஆக,  ‘போலீஸ்கிட்டயே செல்போனை அடிச்சிட்டான்னா, அவன் பெரிய கில்லாடிதான்!’ என்று பரவலாகப் பேச ஆரம்பித்தார்கள். அதனால், இதை ஒரு கவுரவப் பிரச்சனையாக எடுத்துக்கொண்ட அபிராமபுரம் போலீசார், செல்போனை லபக்கிச் சென்றவனையும், அவனுடைய கூட்டாளிகள் இருவரையும் பிடித்து, மாவுக்கட்டு போடச் செய்தனர்.  அந்த நிலையிலும், அம்மூவரையும் காந்தி பொம்மைகள் ஆக்கி, சைகை காட்ட வைத்து, போட்டோ எடுத்தனர். எதற்காக இந்த நடவடிக்கையாம்? சிட்டிக்குள் அட்ராசிட்டி பண்ணும் ரவுடிகளுக்கும் வழிப்பறியில் ஈடுபடுபவர்களுக்கும் இது ஒரு பாடமாம்!


ரவுடிகளுக்கு ‘பட்டி பார்த்த’ காக்கிகள்!

2007 காலக்கட்டத்தில், திருச்சி மண்டலத்தில், ரவுடிகளின் ரவுசு எல்லை மீறிப்போனது. இன்றைய ஏடிஜிபி ஜாபர் சேட் அப்போது ஐ.ஜி.யாக இருந்தார். ரவுடிகளை ஒடுக்குவதற்கென்றே, ‘டெல்டா ஃபோர்ஸ்’ என்ற பெயரில் படை ஒன்றை வைத்திருந்தார். நள்ளிரவில் ரவுடிகளைக் குறிவைத்து அள்ளும் இந்தப் படையினர், பக்கத்து மாவட்டத்துக்கு தூக்கிச்சென்று துவைத்து எடுப்பார்கள். பிறகு, கை, கால்களில் மாவு கட்டுப் போட்டு, ஏதாவது ஒரு வழக்கு பதிவுசெய்து, சிறைக்கு அனுப்புவார்கள். ரவுடித்தனம் யார் செய்தாலும், அவனைப் பட்டி பார்த்து அனுப்பிவை என்பார் ஜாபர் சேட். மெக்கானிக் ஷெட்டுக்களில் வாகனத்துக்கு புதுப் பெயின்ட் அடித்துக் கொடுப்பதைத்தான் பட்டி பார்த்தல் எனச் சொல்வார்கள். ரவுடிகளுக்கும் இதே ட்ரீட்மென்ட் தான்!
 

அந்த நேரத்தில், ஜாபர் சேட் ஐ.ஜி.யாக இருந்தபோது, பிரேம் ஆனந்த் சின்கா எஸ்.பி.யாக இருந்தார். அவர்தான் இப்போது சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர். இவர் தலைமையில் இயங்கிய காக்கிகள்தான்,  ரவுடி தனசேகரனுக்கு ‘கைக்கட்டு’ போட்டு சிறைக்கு அனுப்பி வைத்தனர். 


 

police vs rowdies


 

என்கவுன்டர் பின்னணியில் இன்ஸ்பெக்டர் – ரவுடி கூட்டணி! 

காவல்துறை அதிகாரிகள் சிலர் ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் இதே துறையில்,  ரவுடிகளோடு கூட்டணி அமைத்து, பாதகச் செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளும் இல்லாமல் இல்லை.  கடந்த ஜூலை 2-ஆம் தேதி, சென்னை ராயப்பேட்டையில் பிரபல ரவுடி ஆனந்தனும், அவனுடைய கூட்டாளிகளும் சேர்ந்து முதல்நிலைக் காவலர் ராஜவேலுவை சரமாரியாக வெட்டினர். இச்சம்பவம், காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனால், அடுத்த சில தினங்களிலேயே, கோட்டூர்புரம் ஏ.சி. சுதர்சன் தலைமையிலான போலீஸ் டீம், ரவுடி ஆனந்தனை என்கவுன்டர் செய்து பழி தீர்த்துக்கொண்டது. இந்த சம்பவத்தில், இப்போது புதிய தகவல் ஒன்று லீக் ஆகியிருக்கிறது. அதாவது, சம்பந்தப்பட்ட காவல் சரக இன்ஸ்பெக்டருக்கும் தாக்குதலுக்கு ஆளான காவலர் ராஜவேலுவுக்கும் ஆகவே ஆகாதாம்.  அதனால், அவரைப் பழி வாங்க வேண்டும் என்ற  நோக்கத்தில், ரவுடி ஆனந்தனிடம் அந்த இன்ஸ்பெக்டர் ‘அவனை (ராஜவேலு) ஊமக்குத்தா குத்திவிடுடா’ என்று கூறியதாகவும், அதன்பிறகே, தாக்குதல் நடந்ததாகவும், நிலைமை விபரீதமானதால், என்கவுன்டர் வரை சென்றுவிட்டதாகவும் காவல்துறை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. 
 

காவல்துறை அதிகாரிகள் ‘அப்படியும் இப்படியுமாக’ இருப்பதால், தமிழகத்தில் ரவுடிகளின் தலை நிமிர்ந்தே இருக்கிறது! ரவுடித்தனமும் ஒழிந்தபாடில்லை!

 

 


 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.