Skip to main content

ரோல்ஸ் ராய்ஸ் வாங்க இதெல்லாம் ஒரு காரணமா? சேட்டைக்கார சீக்கியர்

Published on 07/02/2019 | Edited on 07/02/2019
reuben singh


மஹாராஜா ஜெய் சிங் லண்டனுக்கு ஒரு முறை பயணம் மேற்கொண்டார், அப்போது சாதாரணமான உடையை அணிந்துகொண்டு எந்தவித அல்டாப்பும் இல்லாமல் வீதியில் நடந்து சென்றுள்ளார். அச்சமயத்தில் ரோல்ஸ்-ராய் கார் ஷோரூம் முன் நின்று பார்த்திருக்கிறார். பின்னர், உள்ளே சென்று இந்த காரின் சிறப்பு என்ன என்று கேட்கலாம் என யோசித்து நகர்ந்திருக்கிறார். அங்கு இருந்த செக்கியூரிட்டி அவர் இந்தியர், அதுவும் பார்க்க சாதராணமானவராக இருக்கிறார் என்பதால் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த மஹாராஜா அந்த ரோல்ஸ் ராய் ஷோரூமில் உள்ள அனைத்து கார்களையும் வாங்கிகொண்டு இந்தியாவிற்கு வந்துவிட்டார். பின்னர், அவருடைய சமஸ்தானத்தில் குப்பை அள்ள இந்த கார்களை பயன்படுத்தினார் என்ற கதை சமூக வலைதளங்களில் பரவலாக பரவி இருக்கிறது. இப்போதும் கூட இது உண்மை கதை என்று பலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது உண்மை இல்லை. 90ஸ் கிட்ஸ்கு சொல்லப்பட்ட பல புரளிகளில் இதுவும் ஒன்று. 
 

rolls royce


இந்த கதையை போலவே நிஜத்தில் ஒன்று நடந்துள்ளது. ரூபன் சிங் என்ற லண்டன் தொழிலதிபரின் டர்பனை வேறொருவர் கிண்டலடித்ததால், அவர் அணியும் டர்பன் நிறத்திற்கு ஏற்றவாறு ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி சென்றுள்ளார். 7 நாட்களுக்கு 7 விதமான டர்பன், 7 விதமான நிறங்களில் ரோஸ்ஸ்-ராய்ஸ் காரில் சென்று அதை ஒரு சேலஞ்சாக கடந்த வருடம் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருந்தார். இதனால் ரூபன் சிங் உலகம் முழுவதும் பிரபலமாகி இருந்தார்.  ‘ஆல்டே பிஏ’ என்ற நிறுவனத்தின் சிஇஒ வாக இருக்கிறார். மேலும் இஷர் கேபிடல் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவரை பிரிடிஷின்  ‘பில் கேட்ஸ்’ என்று அழைக்கப்படுகிறார். சுமார் 750 கோடிகளுக்கு மேல் இவருக்கு சொத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பல விதமான உயர் ரக கார்களை வாங்குவதில் இவருக்கு நாட்டம் உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் மட்டும் 20 கார்கள் வைத்திருக்கிறார். இது இல்லாமல் புகாட்டி வெய்ரான், ஃபெராரியில் லிமிடெட் எடிஷன் கார்கள் என்று விலை உயர்ந்த கார்களை வாங்கி இருக்கிறார்.

 

இதுபோல தன் திறமையாலும், ஆடம்பரத்தாலும் வெளியுலகுக்கு தெரியும் ரூபன் சிங், மீண்டும் ஆறு ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி பிரபலமடைந்துள்ளார். இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்தது. இந்த முறை நகை கலெக்‌ஷன்ஸ் என்று மரகதம், மாணிக்கம், நீலக்கல் ஆகிய நிறத்தில் மூன்று ரோல்ஸ்ராய்ஸ் பேந்தோம் சிடேன்களும் மூன்று குலினல் எஸ்யூவி கார்களும் வாங்கியிருக்கிறார். ரோல்ஸ்ராய்ஸ் பேந்தோம் செடனின் விலைசராசரியாக பத்து கோடி இருக்கும். ரோல்ஸ்ராய்ஸ் குலினன் எஸ்யூவியின் விலை சுமார் 7 1/2 கோடி இருக்கும்.

 

 

Next Story

'ரோல்ஸ் ராய்ஸ்' விவகாரம்- நடிகர் விஜய் மேல்முறையீடு!

Published on 16/07/2021 | Edited on 16/07/2021

 

 

RollsRoyce car tax actor vijay appeal the chennai high court

 

வெளிநாட்டு சொகுசு காரான 'ரோல்ஸ் ராய்ஸுக்கு' நுழைவு வரி வசூலிக்க தடைக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார்.

 

இங்கிலாந்தில் இருந்து ரூபாய் 1.88 கோடிக்கு வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி வசூலிக்கத் தடைக்கோரி நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதி, "வரி என்பது நன்கொடை அல்ல; கட்டாய பங்களிப்பு. மேலும், நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக இல்லாமல், ரியல் ஹீரோக்களாக இருக்கவும்" அறிவுறுத்தியிருந்தார். அத்துடன் நடிகர் விஜய்க்கு ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார். 

 

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவாகவும், விமர்சனங்களையும் சமூக வலைதளங்களில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பதிவிட்டு வந்தனர். 

 

இந்நிலையில், தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கருத்து மற்றும் ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், தனி நீதிபதி பிறப்பித்தத் தீர்ப்பின் நகலின்றி மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு பட்டியலிடக் கோரிக்கை விடுத்துள்ளார். 

 

இந்த நிலையில், நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் மஞ்சுளா அமர்வில் வரும் திங்கள்கிழமை (ஜூலை 19) நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு மனு பட்டியலிடப்பட்டுள்ளது. 

 

Next Story

தனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

ஆஃப்ரிக்கா கண்டத்திலுள்ள மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஸ்வாசிலேண்ட் எனப்படும் சிறிய நாட்டின் அரசராக இருப்பவர் ‘ஸ்வாடி 3’. இவர் மற்றவர்களுக்கும் தனக்கு தானே கொடுத்துக்கொள்ளும் பரிசுகள் உலக செய்திகளில் கண்டிப்பாக இடம் பிடிக்கும் அந்தளவிற்கு காஸ்ட்லி கிஃப்ட் கொடுப்பார் ஸ்வாசி.
 

swati

 

 

கடந்த வருடம் இவருடைய ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக அந்த குறுகிய நாட்டின் பெயரை ஸ்வாசி லேண்ட் என்று மாற்றிக்கொண்டார். பின்னர் தனக்கு தானே ஒரு பிரைவேட் ஜெட்டை பரிசாக வழங்கிக்கொண்டார். ஏற்கனவே பல நூறு கோடி மதிப்பிலான பிரைவேட் ஜெட் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திடீரென ஸ்வாடி அரசர் 19 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கியுள்ளார். அதில் தனது மனைவி 15 பேருக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். மேலும் 120 பி.எம்.டபுள்யு கார்களை தனது அணிவகுப்பிற்காக வாங்கியிருக்கிறார். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியிலும், பஞ்சம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும்போது தனது மனைவிகளுக்கு ரூ.175 கோடி மதிப்பில் கார்கள் வாங்கிக்கொடுக்கும் அரசர் என்று சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.  

முன்னதாக தனது 23 குழந்தைகளுக்கு பரிசாக தல ஒரு மெர்சிடஸ் கார் வாங்கிக்கொடுத்திருக்கிறார் இந்த ஏழை நாட்டின் பணக்கார அரசர்.