Skip to main content

வழிப்பறியா? பாலியல் கொடூரமா? -சேலம் சந்தேகம்!

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

மார்ச் 22, 2019 இரவு. பவானியைச் சேர்ந்த இளவரசி யும், அவரது உறவினர் மூர்த்தியும் சேலம் கொண்டலாம்பட்டி அருகே கோவை பிரதான சாலையில் ஒரு டூவீலரில் சென்றுகொண்டிருந்தனர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பட்டர்ப்ளை பாலத்தருகே அவர்கள் வந்தபோது இருளிலிருந்து எதிர்ப்பட்டு வழிமறித்த கும்பல், கத்திமுனையில் இளவரசி அணிந்திருந்த நாலரைப் பவுன் தங்கத்தைப் பறித்துக்கொண்டு தலைமறைவானது.

 

salem



நகையைப் பறிகொடுத்த இளவரசி, கொண்டலாம்பட்டி காவல்துறையில் புகார் கொடுத்தார். அதன்பேரில் புத்தூரைச் சேர்ந்த மணிகண்டன், அவனது கூட்டாளிகள் சுபாஷ், இளங்கோ, தினேஷ் ஆகிய நான்குபேரை கைதுசெய்தது காவல்துறை. கும்பலிடமிருந்து 40 பவுன் தங்கநகைகளும் சிக்கியது. இதைத்தொடர்ந்து, பிடிபட்ட கும்பல் பல பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாகவும், அவர்களை வன்புணர்வு செய்து செல்போனில் படமெடுத்து மிரட்டியதாகவும் பரபரப்பு செய்திகள் வெளியாகின. அதாவது, பொள்ளாச்சி போலவே தமிழ்நாட்டின் பல இடங்களிலும் இத்தகைய கொடூரங்கள் நடக்கின்றன என்பதாகவும், பொள்ளாச்சி விவகாரத்தை வைத்து அ.தி.மு.க. மீது குற்றம்சாட்டுவது கூடாது என்பது போலவும் சித்தரிக்கப்பட்டது.

"இவர்கள் கடந்த மூன்றாண்டுகளாக செயின்பறிப்பு குற்றத்தில்தான் ஈடுபட்டு வந்துள்ளனர்''’என்கிறார் கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் புஷ்பராணி. பிடிபட்டவர்களில் மணிகண்ட னும் சுபாஷுமே முக்கிய குற்றவாளிகள். மல்லூர் காவல்துறையினர் மணிகண்டன் மீது பலமுறை செயின்பறிப்பு வழக்கு பதிவுசெய் திருக்கின்றனர். குண்டாஸ் வழக்கிலும் கைதாகியிருக்கிறார். மல்லூர் சரகத்தில் சாலையோரத் தில் ஒதுங்கிய ஒரு ஜோடியில், ஆணை விரட்டிவிட்டு பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர் மணிகண்டன். கொண்டலாம்பட்டி காவல்துறையில் தற்போதைய வழக்கில் அந்த பழைய குற்றப் பின்னணிகளை பதிவுசெய்யவில்லை. 

தற்போது நகையைப் பறிகொடுத்த இளவரசியும் மூர்த்தியும் தனிமையில் ஒதுங்க நினைத்தபோதுதான், இந்தக் கும்பலிடம் சிக்கியதாக காவல் துறை சோர்ஸ்கள் தெரிவிக்கின் றன. நகைகளைப் பறித்துக் கொண்டதோடு, பலவந்தப்படுத்தி இருவரையும் நெருக்கமான நிலையில் முத்தமிட வைத்து படம்பிடித்துக்கொண்டு, காவல்நிலையம் சென்றால் இந்தப் புகைப்படங்களை வெளியிட்டுவிடுவதாக மிரட்டியிருக்கிறான். 

எனினும் இளவரசி தனது வாக்குமூலத்தில் மணிகண்டனோ அவனது கூட்டாளிகளோ பாலியல்ரீதியாகத் துன்புறுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய மணிகண்டனின் நண்பரான வெங்கடேசன் தலைமறைவாகிவிட்டார்.  தேர்தல் நேரமென்பதால் ஆளுந்தரப்புக்கு கெட்டபெயர் வந்துவிடக்கூடாது என காப்பாற்றும் வகையிலேயே காவல்துறையினர் பல உண்மைகளை மூடி மறைப்பதாகக் கூறப்படுகிறது.
 

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.