Skip to main content

ரோட் ஷோ நடத்தி டேபிள் சேர் போட்டதைப் பெரிய சாதனையாகப் பேசுகிறார்கள்... முரளி அப்பாஸ் பதிலடி... 

Published on 16/09/2020 | Edited on 16/09/2020

 

ssss

 

நீட் தேர்வு விவகாரம், விவசாயிகளுக்கான மத்திய அரசின் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு, ஆன்லைன் கல்வி முறைப்படுத்துதல், கரோனா முறைகேடுகள், எட்டு வழிச்சாலை விவகாரம், மீனவர்கள் பாதுகாப்பு, வேலைவாய்ப்பின்மை, ஜி.எஸ்.டி பங்குகள் பெறுவதில் உள்ள தாமதம், டாஸ்மாக் விவகாரம், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என பத்து கேள்விகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குறிப்பிட்டு, இதுபோன்ற மக்கள் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்காமல், மூன்றே நாட்களில் கண்துடைப்பாக சட்டமன்றத் தொடரை நடத்தி முடிப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

 

இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், கரோனாவுக்கு பயந்து பிக்பாஸ் போல வீட்டுக்குள் இருந்தபடி, அரசை விமர்சனம் செய்வதாகக் குற்றம் சாட்டினார். மார்ச் மாதம் கோவிட் வந்ததில் இருந்து மக்களைத் தினந்தோறும் சந்தித்து வருகிறோம். களப்பணியில் இருக்கிறோம். பிக்பாஸ் -3 நிகழ்ச்சியின் முன்னோட்டமாக கமல் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார் என்றார். 

 

கமல் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார். கரோனா வந்ததில் இருந்து நாங்கள் களத்தில் இருக்கிறோம் என்று ஜெயக்குமார் பதில் அளித்திருக்கிறாரே என்று மக்கள் நீதி மய்யம் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் கேட்டோம். 

 

அதற்கு அவர், தேவையில்லாமல் வெளியே வராதீர்கள் என்று சொல்லிவிட்டு வெளியேவருவது தியாகம் என்று சொல்கிறார்களே அதுவே முட்டாள்தனம் இல்லையா? ஒரு அரசு நிர்வாகத்தில் இருக்கும் நீங்கள் வெளியே வந்துதான் ஆகவேண்டும். மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக கமலின் பொறுப்பு, நிர்வாக ரீதியாகச் சரியாக நடக்கிறதா என்று கேள்வி கேட்கலாம், மக்களுக்கு தேவையானவற்றை செய்துகொடுக்க வேண்டும். 'நாமே தீர்வு' என்று நாங்கள் செய்துகொண்டுதான் இருக்கிறோம். அவர் அச்சப்படவில்லை என்பதற்கு உதாரணம்தான் நிதியுதவி கொடுத்துவிட்டுப் போனது. இவர்கள் இன்று பார்க்கும் பிக்பாஸ் ப்ரமோ வெளியே வராமலேயே எடுத்ததா? அவருக்குப் பயம் என்பதே கிடையாது. மற்றவர்களுக்கு முன் உதாரணமாக தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று எங்களுக்குச் சொல்லியிருக்கிறார். 

 

தம்பி ஸ்னேகன், ‘ஒரு ஊரிலிருந்து 100 பேர் சேரவேண்டும் என்கிறார்கள்’ என்றார். அதற்கு “ஸ்னேகன், எனக்கு நிறைய ஸ்னேகன்கள் தேவைப்படுகிறார்கள் அதற்காக நீங்கள் இப்படிப் போகக்கூடாது. ஒருவேளை போவதென்றால் உங்களைப்போல ஒரு ஸ்னேகனை எனக்குத் தயார் பண்ணி கொடுத்துவிட்டுப் போங்கள்” என்று எங்களுக்கே அன்பாகக் கட்டளையிட்டிருக்கிறார். அவர் பாதுகாப்பாகவும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கச் சொன்னரே தவிர, வரவேண்டியவைகளுக்கு வராமல் இருந்ததில்லை. இவர்களைப் போல் தங்களுக்கு ஒரு பாதுகாப்பு வைத்துக்கொண்டு ரோட் ஷோ நடத்தி ஏமாற்றும் வேலையை எல்லாரும் செய்ய மாட்டார்கள். 

 

ம.நீ.ம. கேட்ட ஒரு பத்து கேள்விகளுக்கு அவர்களிடம் ஒழுங்கான பதில் இல்லை. இன்று எங்கள் அறிக்கைக்கு தி.மு.க, அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் பதில் சொல்லியுள்ளது. ஆளும்கட்சியைப் பார்த்து கேட்ட கேள்விக்கு இவர்கள் எல்லாம் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் எப்படி வந்தது என்றால் நாம் கேட்ட கேள்வியில் நியாயம் இருந்தது. 

 

Ad

 

டெல்லியிலேயே 10 நாட்கள் கூட்டம் நடத்துகிறார்கள். இவர்கள் ஏன் மூன்று நாட்கள் மட்டுமே சட்டசபைக் கூட்டத்தை நடத்துகிறார்கள். முதல் நாள் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பது. அது எப்போதும் நடந்து வருவது. மற்றொருநாள், நீட் விவகாரத்தில் நீங்கள்தான் குற்றவாளி, நீங்கள்தான் குற்றவாளி என இரண்டுபேரும் மாறிமாறிச் சொல்லிக்கொண்டார்கள் அவ்வளவுதான். இதைத் தவிர்த்து எந்தப் பிரச்சனையும் அவர்கள் பெரிதாகப் பேசவில்லை. வெறும் சலுகைகள் அறிவிப்பு, கண்துடைப்பு மட்டும் செய்தனர். இன்றும் தினசரி 6,000 நபர்களுக்கு தொற்று உறுதியாகிக்கொண்டே வருகிறது. அதைக் கட்டுப்படுத்தக்கூடிய எந்த ஆலோசனையும் இல்லை.

 

ddd

 

இங்கு பத்து கேள்வி என்பது விஷயமே இல்லை. இத்தனை பிரச்சனைகளை வைத்துக்கொண்டு மூன்று நாட்கள் மட்டும் கூட்டுகிறீர்களே என்பதுதான் விஷயம். அடுத்தது பருவமழை காலம் வந்துவிட்டது. இப்போதெல்லாம் அதிக வெள்ளம் வருகிறது அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்திருக்கிறீர்கள். 

 

கலைவாணர் அரங்கத்தில் 234 பேருக்கு கார்ப்பட் விரித்து டேபிள் சேர் போட்டது பெரிய சாதனையாகப் பேசுகிறார்களேயொழிய ஒருவாரம் பேச உங்களுக்கு நேரமில்லையா? அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் சபாநாயகர் முடிவு எடுக்கும்போது அதிக நாட்கள் கூட்டச்சொல்லி போராடியிருக்கலாமே இவர்கள். 

 

சட்டசபைக்கு வெளியே நீங்கள்தான் காரணம் எனக் கடுமையாகப் பேசும் தி.மு.க., சட்டசபைக்குள் நீங்கள்தான் காரணம் என முதலமைச்சர் பேசும்போது எந்த அளவிற்குச் சமாளித்தார்கள். காங்கிரஸ் இராமசாமி, ‘நாங்கள் இவ்வளவு கோரிக்கைகள் கொடுத்திருக்கிறோம் சட்டசபை இரண்டு நாட்கள்தான் நடக்கிறது’ என இப்போது கவலைப்படுகிறார். சபாநாயகர் அலுவல் ஆய்வுக் கூட்டம் கூட்டும்போது அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்களையும் வைத்துத்தானே கூட்டுகிறார் அப்போதே எங்களுக்கு அதிகநாட்கள் வேண்டுமென்று கேட்க வேண்டியதுதானே. 

 

Nakkheeran

 

சந்தோஷப்படக்கூடிய ஒரு விஷயம், சட்டசபைக்குள் ஒழுங்காகக் கேள்வி- பதில் நேரம் நடக்கவில்லை என்றாலும் வெளியில் இருந்து கேட்ட கேள்விகளுக்கு மூன்று கட்சிகளும் பதில் சொல்லியிருக்கிறார்கள். சப்பை பதிலோ இல்லை சமாளிப்பு பதிலோ இனிமேல் இப்படித்தான் வரிசை கட்டி வந்து பதில் சொல்லி ஆகணும் என்றார். 

 

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.