Skip to main content

மோடியை சந்தித்த ஓ.பி.எஸ்.? சம்மந்தமே இல்லாமல் தேனிக்கு வந்த 50 வாக்குப்பெட்டிகள்!!!

Published on 09/05/2019 | Edited on 09/05/2019

வாரணாசியில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தபோது, அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகனும், தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருமான ரவீந்திரநாத்தும் சென்றிருந்தனர்.
 

ops modi


அந்த பயணம் பற்றி அப்போது பல கருத்துகள் எழுந்தன. அவர்கள் குடும்பத்தோடு பாஜகவில் இணைய போகிறார்கள், ரவீந்திரநாத்தை ஜெயிக்க வைக்கதான் அவர் போய் பார்த்துள்ளார். இப்படியாக பல கருத்துகள் எழுந்தன. அதை உறுதிசெய்யும் விதத்தில் தற்போது வாக்குப்பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளது என்ற சந்தேகமும் எழுகிறது. 

கள்ள ஓட்டு போட்டது, மாதிரி வாக்குகளை அழிக்காமல் விட்டது இவையே மறுவாக்குப்பதிவு நடப்பதற்கு தேர்தல் ஆணையம் கூறிய காரணங்கள். அதன்படி மொத்தம் 13 வாக்குச்சாவடிகளில் தேனியில் இரண்டு வாக்குச்சாவடிகளுக்கு மட்டுமே மறுவாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கு இரண்டு செட் இயந்திரங்கள் இருந்தாலே போதுமானது, ஆனால் இறங்கியதோ 50.

கூடுதலாக இரண்டு பெட்டிகள்கூட இல்லாமல் எப்படி அங்கு தேர்தல் நடந்திருக்கும் என்பதும் ஒரு கேள்வி. ஈரோட்டிலும் அதேபோல் ஒரே ஒரு வாக்குச்சாவடிதான் ஆனால் அங்கு இறங்கியதோ 20 விவிபேட்கள். அங்கிருந்து மற்ற வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் என வைத்துக்கொண்டாலும், மறுவாக்குப்பதிவு நடக்கும் மற்ற மாவட்டங்களான தர்மபுரி, கடலூர், திருவள்ளூர் ஆகிய ஊர்களும் அவ்வளவு அருகில் இல்லை. அதனால்தான் இவ்வளவு தூரம் சந்தேகம் நீள்கிறது.

இந்த சந்தேகங்களுக்கு வலுசேர்க்கும் முக்கிய புள்ளியாக இன்னொரு சம்பவமும் இருக்கிறது. அதுதான் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்ததற்கும், தேர்தல் நடந்ததற்கும் இடையே உள்ள காலம். பொதுவாக இப்படி மறுவாக்குப்பதிவு நடத்துவதாக இருந்தால் அது ஒன்று, இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்பட்டுவிடும். ஆனால் இந்தமுறை 20 நாட்கள் கழித்துதான் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதில் தவறுசெய்த அதிகாரிகள்மீதும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.  

இதுபோன்ற கேள்விகள்தான், தேர்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா, ரவீந்திரநாத்-ஐ ஜெயிக்கவைக்கதான் இப்படியான முயற்சிகள் நடக்கிறதா என்ற சந்தேகங்களை அனைத்து தரப்பிலும் ஏற்படுத்தியுள்ளது. எதிர்கட்சிகளும் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின்மீது குற்றம் சுமத்துகிறது. 
 

 

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

சென்டினலை அடுத்த சோம்பன்; வாக்களிக்க வைத்த தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Somban next to Sentinel; The Election Commission held the vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 

தமிழகம் மட்டுமல்லாது அந்தமான் தீவிலும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. அதில் மிகவும் குறிப்பிடத் தகுந்த ஒன்றாக அந்தமான் தீவில் மிகவும் ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவது சென்டினல் மற்றும் சோம்பன் இன பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியாகும்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு அந்தமானில் வடக்கு சென்டினல் தீவு பகுதிக்குச் சென்ற 26 வயது மத போதகர் ஜான் ஆலன் சாவ் சென்டினல் பழங்குடியின மக்களால் அம்பு எய்து கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது .தற்போதுவரை அவரின் உடல் கண்டெடுக்கப்படவில்லை.  சென்டினல் மக்கள் வெளி உலகத் தொடர்புக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களை அணுகும் மக்களை அவர்கள் கொடூரமாக கொள்வது வழக்கம்.  வெளி உலக தொழில் நுட்பங்கள், வெளி மனிதர்களின் கலாச்சாரம் ஆகியவை எதுவும் தற்போது வரை சென்டினல் மக்களைச் சென்றடையவும் இல்லை. மீறி எடுத்துச் சென்றால் அந்த மக்கள் ஏற்றுக் கொள்ளவும் விரும்பவில்லை.

அடர்ந்த காட்டில் தனிமையாக வாழும்  அந்தப் பழங்குடியின மக்களின் மக்கள் தொகையே 80 தான் என்று சொல்லப்படுகிறது. சென்டினல் போன்றே அந்தமானில் மற்றொரு பழங்குடியின இனக்குழுவும் உள்ளது. அதன் பெயர் சோம்பன். இந்தக் குழுவில் மொத்தம் 229 பேர் வசிக்கின்றனர். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம்  சோம்பன் மக்களிடம்  வாக்களிப்பதின்  அவசியத்தை  உணர்த்தியிருந்தனர். அவர்களுக்கு பயிற்சி கொடுத்து ஓட்டு போட வைக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்த நிலையில், 229 பேரில் ஏழு சோம்பன் பழங்குடியின மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர். இதனை வரலாற்றுச் சாதனை என இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.