Skip to main content

மருத்துவம் படித்தும் ஏன் நான் ஐஏஎஸ் ஆகினேன்... பூஞ்சின் முதல் கலெக்டர்...

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான இளைஞர்கள் யூபிஎஸ்சி தேர்வுகளுக்காக தயாராகின்றனர். தேர்வு முடிவுகள் வரும் அந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முடிவுகளை எதிர்பார்த்து பெரு மூச்சு விடுவார்கள். உலகின் மிக கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றான இந்த சிவில் சர்வீஸ் தேர்வில் வருடா வருடம் பாஸ் ஆகுபவர்கள் மிக குறைந்த அளவிலானவர்கள். இந்த வருடம் இத்தேர்வின் முடிவுகள் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி வெளியானது. இந்த முடிவுக்கு பின் பல இளைஞர்களின் கதை பலருக்கு மோடிவேஷனலாக மாறியிருக்கும். அப்படி காஷ்மிர் மாநிலத்திலிருந்து யூபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்று ஐஏஎஸ் ஆகியிருக்கும் டாக்டர். ரெஹானா பஷீரின் வெற்றி பாதையை பற்றி பார்ப்போம்...
 

rehana

 

 

இந்தியாவின் சிறந்த நிர்வாக பொறுப்பான ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் இவர், ஜம்மு காஷ்மீரிலுள்ள பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அந்த மாவட்டத்திலிருந்த வந்த முதல் ஐஏஎஸ் பெண்ணும் இவர்தான். இந்தியா முழுவதும் நடக்கும் இந்த தேர்வில் இவருடைய தரவரிசை என்ன தெரியுமா 187வது இடம் ஆகும். 
 

இவர் ஜம்முவில் மருத்துவம் பயின்றிருக்கும்போதுதான், மக்களுக்கு எதாவது பணி செய்ய வேண்டும். அதற்கு ஏற்ற அரசாங்க உத்யோகத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணி யூபிஎஸ்சி தேர்வுக்கு தன்னை தயார்படுத்த தொடங்கியிருக்கிறார். தொடக்கத்தில் சுற்றத்தார்கள் ரெஹனாவின் இந்த முடிவிற்கு முட்டுக்கட்டைபோடும் விதமாகவே பேசியுள்ளனர். ஆனால், அவருடைய முயற்சிக்கு துணையாக அம்மாவும், அண்ணனும் இருந்துள்ளனர். இதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் யூபிஎஸ்சி தேர்வை எழுதியுள்ளார். ஆனால், அந்த தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். இருந்தாலும் மனம் தளராமல் அடுத்த முறைக்காக தன்னை ஆயத்தப்படுத்த தொடங்கிவிட்டார்.  யூபிஎஸ்சி நுழைவுத் தேர்விற்காக தயாரகும் சமயத்திலேயே காஷ்மீர் மாநிலத்தின் அரசு பணி தேர்விற்கும், மருத்துவ படிப்பிற்கான பிஜி (pg) நீட் நுழைவுத் தேர்விற்காகவும் இவர் தயாராகியிருக்கிறார். இந்த இரண்டு தேர்விலும் வெற்றியும் பெற்றுவிட்டார். மருத்துவம் பயின்று இருப்பதால் ஒழுங்காக பிஜி (pg)படிக்க நிறையபேர் இவருக்கு அறிவுரை சொல்லியிருக்கின்றனர். ஆனால், இவரோ இந்த இரண்டு வெற்றிகளையும் தள்ளி வைத்துவிட்டு யூபிஎஸ்சியில் வெற்றிபெற வேண்டும் உறுதி எடுத்துவிட்டார். ரெஹனாவின் அண்ணன் ஐஆர்எஸ் பதவியில் இருப்பதால், தன்னுடைய தங்கைக்கு உதவியாக யூபிஎஸ்சி தேர்வை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுக்கொடுத்திருக்கிறார். இந்த தேர்வில் இவர் வெற்றிபெற முழு பக்கபலமாக இவருடன் இருந்தது இவரது அம்மா என்று அனைத்து பேட்டிகளிலும் சொல்கிறார் ரெஹனா.
 

rehana

 

 

இதை படிப்பவர்கள் அவர்தான் மருத்துவம் பயின்றிருக்கிறாரே, அதை வைத்தே மக்களுக்கு நல்லது செய்யலாமே எதற்காக யூபிஎஸ்சி தேர்வு எழுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என அவர் நினைக்கிறார் என்று கேட்கலாம். அதற்கும் அவரிடம் பதில் இருக்கிறது. இப்போது நான் மருத்துவம் பார்த்தால் உடல்நலத்தை மட்டும்தான் சரிசெய்ய முடியும். ஆனால், இதுவே அரசாங்க பொறுப்பில் இருந்தால். மக்களுடைய அனைத்து பிரச்சனைகளையும் என்னால் சரி செய்ய முடியும். நான் கல்லூரியில் படிக்கும்போது படிப்பு படிப்பு என இருந்துவிட்டதால் எனக்கு உலகம் தெரியாமல் வளர்ந்துவிட்டேன். ஆனால், நான் எப்போது வேலை செய்ய தொடங்கினேனோ அப்போதிலிருந்துதான் சமூக பிரச்சனைகள் பக்கம் என் கண்கள் திரும்பியது. உடல்நலத்தை காப்பாற்ற நல்ல குடிநீர், நல்ல சாலை வசதி, நல்ல உணவு, சுத்தம், சுகாதாரம் என அனைத்து பிரச்சனைகளையும் இதுபோன்ற வேலையில் நான் இருந்தால்தான் சரி செய்ய முடியும். இதை சரி செய்தாலே மக்களுக்கு அதிகமாக மருத்துவம் தேவைப்படாது என்று பக்குவமான பதிலை தருகிறார் ரெஹனா. 
 

“நான் காஷ்மீரை தாண்டி எந்த மாநிலமாக இருந்தாலும் வேலை செய்ய தயாரக இருக்கிறேன். நான் காஷ்மீருக்குள் மட்டும் என்று என்னை அடைத்துகொள்ள விரும்பவில்லை. நாட்டிற்காக சேவை செய்வதுதான் என்னுடைய முதல் விருப்பம்” என்று ரெஹனா கூறுகிறார்.
 

காஷ்மிரில் நடக்கும் பல குழப்பங்களால் அங்கிருக்கும் இளைஞர்கள் கல்வியை தாண்டி பல அரசியலையும் சமூக பிரச்சனைகளையும் பற்றி தெரிந்துகொள்கின்றனர். அதில் ஒரு சிலர் வேறு தவறான பாதைக்கு திரும்புகின்றனர். ரெஹனா போன்றவர்கள் சரியான பாதையை தேர்வு செய்து, நாட்டையும், சமூகத்தையும் மாற்ற முன்னேறுகின்றனர். 

 


 

Next Story

“நான் முதல்வன் திட்டம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Chief Minister M.K. Stalin's Pride

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற குடிமைப் பணிகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC - யு.பி.எஸ்.சி.) சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வானது, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தமாக 1016 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுப்பிரிவில் 347 மாணவர்களும், இதர பிற்படுத்தப்பட்டவர் (OBC) பிரிவில் 303 மாணவர்களும் இ.டபிள்யூ.எஸ். 115 மாணவர்களும், எஸ்.சி. 165, எஸ்.டி. 86 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் ஆதித்யா ஸ்ரீ வஸ்தா என்பவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த தேர்வில் அகில இந்திய அளவில் 78 ஆவது இடமும், தமிழ்நாட்டில் இரண்டாமிடமும் பிடித்து, சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மருத்துவ மாணவர் பிரசாந்த் சாதனை படைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுவையில், “மத்திய அரசின் குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற நான் முதல்வன் திட்டம் உதவியாக இருந்தது” எனத் தெரிவித்திருந்தார். 

Chief Minister M.K. Stalin's Pride

இதனை மேற்கோள்காட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “நான் முதல்வன் திட்டம்: என் கனவுத்திட்டம் மட்டுமல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம். நேற்று வெளியான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முடிவுகளே அதற்கு சாட்சி” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.