Skip to main content

இந்த ரணகளத்திலும் பத்திரப்பதிவு அலுவலகத்தை திறக்கும் தமிழக அரசு! அலறும் ஊழியர்கள்! 

Published on 25/03/2020 | Edited on 26/03/2020

 

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனோ வைரஸ் சிக்கலில் இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு கொண்டு வந்தார் பிரதமர். பிரதமரின் அறிவிப்புக்கு பிறகு பொது வெளியில் வரும் பொதுமக்களை காவல்துறையினர் அன்போடு வீட்டுக்குபோங்க என்று கேட்டுக்கொண்டனர். சில இடங்களில் கட்டாயப்படுத்தி அடித்தும் விரட்டியும் துரத்த ஆரம்பித்தனர். 
 

இந்தியாவில் மிகவும் அவசிய அத்தியாவசிமான அலுவலகங்களை தவிர மற்ற அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் எல்லாமே விடுமுறை விடப்பட்டு இருந்தது.

 

Office - Staff



மளிகைகடைகளுக்கும், பால் மற்றும் உணவகத்திற்கு மட்டும் சென்று வர அனுமதியளித்து இருந்தது. ஆனால் இந்த இடங்களுக்கே பொதுமக்கள் சென்று வருவதற்கு கடுமையான கண்காணிப்பும், கண்டிப்பும் செய்து அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். 
 

இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்து ஒரு நாள் கடந்து விட்ட நிலையில் இன்று பத்திரபதிவுத்துறை அலுவலகத்தை மட்டும் நாளை முழுவதும் திறந்து வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பிட்ட அலுவலர்கள் கட்டாயம் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இந்த அறிக்கை அந்த அலுவலர்களிடையே பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

office-staff



 

தனித்து இருங்கள், பாதுகாப்பாய் இருங்கள் என்று பிரதமர் முதல் முதல்வர் வரை அறிவிப்பு வெளியிட்டு வந்த நிலையில் திடீர் என பத்திரப்பதிவுதுறை அலுவலகம் திறப்பு என்பது பெரிய சந்தேகத்தை ஏற்பட்டுள்ளது. 
 

இது குறித்து பத்திரப்பதிவு துறை ஊழியர்கள் சிலரிடம் பேசியபோது, எந்த அடிப்படையில் எங்களை வேலைக்கு அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை, உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று வீட்டோடு இருங்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில் எங்களை பணிக்கு அழைத்திருப்பது எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நாங்கள் உணர்கிறோம். 
 

பத்திரப்பதிவு அலுவலகம் திறந்து இருக்கிறது என்றால் தற்போது ஆன்லைன் மூலம் பதிவு செய்கிறோம். டோக்கன் முறையில் பதிவு செய்யப்படும் 1 நாளைக்கு 100 டோக்கன் கொடுப்போம். 1 மணி நேரத்திற்கு 20 டோக்கன் பதிவு செய்யப்படும். 5 மணி நேரத்திற்கு 100 டோக்கன் பதிவு செய்யப்படும். 
 

1 டோக்கன் பதிவு செய்வதற்கு 4 முதல் 10 பேர் வருவார்கள். இப்படி பார்த்தால் 400 முதல் 1000 பேர் வருவார்கள். 
 

office-staff


 

ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் 20 டோக்கன்கள் பதிவு செய்தாலே 80 முதல் 200 பேர் வரை வருவார்கள். இவர்கள் அனைவருக்கும் கைரேகை பதிவு செய்ய வேண்டியிருக்கும் இதில் வெளிநாட்டு வாழ் தமிழர்களும் கண்டிப்பாக வருவார்கள். ஒவ்வொரு சார் பதிவாளர்களுக்கும் ஒவ்வொரு பத்திரத்தையும் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டியிருக்கும். இப்போது உள்ள கரோனா வைரஸ் பிரச்சனையில் இது எல்லாம் சாத்தியம் இல்லை. 
 

ஆனால் இதை எல்லாம் தெரிந்திருந்தும் கட்டாயப்படுத்தி எங்களை அலுவலகத்தி்ற்கு வர சொல்வது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், சுகாதாரதுறை அமைச்சர், தலைமைசெயலாளர், முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம் என்றனர்.
 

இது குறித்து பத்திரப்பதிவுத்துறையைச் சேர்ந்த மேலும் சிலர், இந்த ரணகளத்திலும் மக்களின் அத்தியாவசிய தேவை என்று வருமானம் பார்க்க நினைக்கிறார்கள் என்றனர்.
 

உயிரை காக்க வேண்டிய இந்த முக்கியமான நேரம் என்று பிரதமர் நாட்டு மக்களிடம் உருக்கமாக பேசியிருக்கிறார். இந்த ரணகளத்திலும் பத்திப்பதிவு அலுவலகத்தை திறக்க வேண்டிய அவசியம் என்ன என்பதே தற்போது மக்கள் மனதில் உள்ள கேள்வி. விடை சொல்லுவாரா தமிழக முதல்வர். 
 

 

 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“தமிழக அரசுக்கு நன்றி” - குகேஷ் நெகிழ்ச்சி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Thank you to the Government of Tamil Nadu Gukesh 

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் ஆவார்.

அதே சமயம் செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு கனடாவில் இருந்து சென்னை வந்த செஸ் வீரர் குகேஷூக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “இந்த வெற்றி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. இந்த தொடரில் முதல் இடம் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடரை நடத்திய தமிழக அரசுக்கு நன்றி. அதாவது கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடர் உதவியாக இருந்தது. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - 2023, சென்னை லீலா பேலஸில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.