Skip to main content

இந்த ரணகளத்திலும் பத்திரப்பதிவு அலுவலகத்தை திறக்கும் தமிழக அரசு! அலறும் ஊழியர்கள்! 

Published on 25/03/2020 | Edited on 26/03/2020

 

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனோ வைரஸ் சிக்கலில் இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு கொண்டு வந்தார் பிரதமர். பிரதமரின் அறிவிப்புக்கு பிறகு பொது வெளியில் வரும் பொதுமக்களை காவல்துறையினர் அன்போடு வீட்டுக்குபோங்க என்று கேட்டுக்கொண்டனர். சில இடங்களில் கட்டாயப்படுத்தி அடித்தும் விரட்டியும் துரத்த ஆரம்பித்தனர். 
 

இந்தியாவில் மிகவும் அவசிய அத்தியாவசிமான அலுவலகங்களை தவிர மற்ற அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் எல்லாமே விடுமுறை விடப்பட்டு இருந்தது.

 

Office - Staff



மளிகைகடைகளுக்கும், பால் மற்றும் உணவகத்திற்கு மட்டும் சென்று வர அனுமதியளித்து இருந்தது. ஆனால் இந்த இடங்களுக்கே பொதுமக்கள் சென்று வருவதற்கு கடுமையான கண்காணிப்பும், கண்டிப்பும் செய்து அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். 
 

இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்து ஒரு நாள் கடந்து விட்ட நிலையில் இன்று பத்திரபதிவுத்துறை அலுவலகத்தை மட்டும் நாளை முழுவதும் திறந்து வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பிட்ட அலுவலர்கள் கட்டாயம் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இந்த அறிக்கை அந்த அலுவலர்களிடையே பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

office-staff



 

தனித்து இருங்கள், பாதுகாப்பாய் இருங்கள் என்று பிரதமர் முதல் முதல்வர் வரை அறிவிப்பு வெளியிட்டு வந்த நிலையில் திடீர் என பத்திரப்பதிவுதுறை அலுவலகம் திறப்பு என்பது பெரிய சந்தேகத்தை ஏற்பட்டுள்ளது. 
 

இது குறித்து பத்திரப்பதிவு துறை ஊழியர்கள் சிலரிடம் பேசியபோது, எந்த அடிப்படையில் எங்களை வேலைக்கு அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை, உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று வீட்டோடு இருங்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில் எங்களை பணிக்கு அழைத்திருப்பது எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நாங்கள் உணர்கிறோம். 
 

பத்திரப்பதிவு அலுவலகம் திறந்து இருக்கிறது என்றால் தற்போது ஆன்லைன் மூலம் பதிவு செய்கிறோம். டோக்கன் முறையில் பதிவு செய்யப்படும் 1 நாளைக்கு 100 டோக்கன் கொடுப்போம். 1 மணி நேரத்திற்கு 20 டோக்கன் பதிவு செய்யப்படும். 5 மணி நேரத்திற்கு 100 டோக்கன் பதிவு செய்யப்படும். 
 

1 டோக்கன் பதிவு செய்வதற்கு 4 முதல் 10 பேர் வருவார்கள். இப்படி பார்த்தால் 400 முதல் 1000 பேர் வருவார்கள். 
 

office-staff


 

ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் 20 டோக்கன்கள் பதிவு செய்தாலே 80 முதல் 200 பேர் வரை வருவார்கள். இவர்கள் அனைவருக்கும் கைரேகை பதிவு செய்ய வேண்டியிருக்கும் இதில் வெளிநாட்டு வாழ் தமிழர்களும் கண்டிப்பாக வருவார்கள். ஒவ்வொரு சார் பதிவாளர்களுக்கும் ஒவ்வொரு பத்திரத்தையும் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டியிருக்கும். இப்போது உள்ள கரோனா வைரஸ் பிரச்சனையில் இது எல்லாம் சாத்தியம் இல்லை. 
 

ஆனால் இதை எல்லாம் தெரிந்திருந்தும் கட்டாயப்படுத்தி எங்களை அலுவலகத்தி்ற்கு வர சொல்வது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், சுகாதாரதுறை அமைச்சர், தலைமைசெயலாளர், முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம் என்றனர்.
 

இது குறித்து பத்திரப்பதிவுத்துறையைச் சேர்ந்த மேலும் சிலர், இந்த ரணகளத்திலும் மக்களின் அத்தியாவசிய தேவை என்று வருமானம் பார்க்க நினைக்கிறார்கள் என்றனர்.
 

உயிரை காக்க வேண்டிய இந்த முக்கியமான நேரம் என்று பிரதமர் நாட்டு மக்களிடம் உருக்கமாக பேசியிருக்கிறார். இந்த ரணகளத்திலும் பத்திப்பதிவு அலுவலகத்தை திறக்க வேண்டிய அவசியம் என்ன என்பதே தற்போது மக்கள் மனதில் உள்ள கேள்வி. விடை சொல்லுவாரா தமிழக முதல்வர். 
 

 

 

Next Story

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; தமிழக அரசு அதிரடி முடிவு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Mullai Periyar Dam Issue TN govt decision

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, “நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இது தொடர்பான அய்வு குழுவினரால் ஆய்வு மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், ‘கேரள அரசு கட்டிவரும் வாகன நிறுத்துமிடம் குத்தகை பகுதிக்குள் இல்லை. நீர்பிடிப்பு மற்றும் நீர் பரவல் பகுதியின் எல்லைகள் பெரியாறு, குமுளி கிராமத்தில் உள்ளன’ என வரைபடத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Mullai Periyar Dam Issue TN govt decision

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பாக இந்திய நில அளவைத் துறை அளித்த ஆய்வறிக்கையை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கடந்த 1924 ஆம் ஆண்டு நீர்வளத்துறையால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை தற்போதைய ஆய்வு குழு கணக்கில் கொள்ளவில்லை. கேரளா கட்டிவரும் மிகப்பெரிய வாகன நிறுத்துமிடத்தின் மூலப்பகுதி, தரைத்தளம் எங்கு உள்ளது என்பதை ஆய்வு குழு ஆய்வு செய்யவில்லை. வாகன நிறுத்துமிடத்தின் எல்லை நிர்ணயிக்கப்பட்ட போது தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

மெகா வாகனம் நிறுத்துமிடம் என்பது உணவகம், வாகன பேட்டரி சார்ஜ் செய்யும் இடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளடக்கியது ஆகும். எனவே வாகன நிறுத்துமிடத்தை அளவிடும் போது அதன் சார்பு வசதிகளை கணக்கில் எடுக்க நில அளவைத் துறை தவறிவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Tamil Nadu government case against central government

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்கவில்லை. இதனையடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஜய் வசந்த்தையும், திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராபர்ட் புரூஸையும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் டாக்டர் தாரஹாய் குத்பர்ட்டினையும் ஆதரித்து நாங்குநேரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 25 ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார்.

Tamil Nadu government case against central government

அப்போது அவர் பேசுகையில், “இரண்டு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்ட போதும் தமிழகத்திற்கு ஒரு காசு கூட பிரதமர் மோடி தரவில்லை. பா.ஜ.க. அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. வெள்ள நிவாரணத்திற்கு நிதி கேட்டால் பிச்சை என்று ஏளனம் செய்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி தராத மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

Tamil Nadu government case against central government

இந்நிலையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமனன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.