Skip to main content

குஜராத் தொடர் வெற்றிக்குக் காரணம் - சித்தாந்தமா? மோடியா?

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

ghk

 

இந்த ஆண்டிற்கான உச்சக்கட்ட பரபரப்பு இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் அரசியல் கட்சிகள் எல்லாம் இந்த முறையாவது ஏதாவது மாற்றம் நடைபெறுமா அல்லது எப்போதும் போலவே பாஜகதானா? என்கிற ஆவலோடு காத்திருக்கிறார்கள் குஜராத் சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கி. கிட்டதட்ட 24 வருடங்களாக ஆறு சட்டப்பேரவை தேர்தல்களாக பாஜகவே இங்குத் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறது.

 

கடந்த முறை பாஜகவின் வெற்றி என்பது எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று கூறப்பட்டாலும், அதன் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிடத் தகுந்த வெற்றியை மாநில பாஜக பதிவு செய்தது. இந்நிலையில் மாநிலத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. 

 

இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட இருக்கிறது. இந்தியாவில் சில மாநிலங்களில் மட்டுமே இத்தனை ஆண்டுகள் ஒரு கட்சி தொடர்ந்து ஆட்சி செய்வது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் ஜனநாயக கட்சித் தலைவர் பவன் குமார் சாம்லிங் தொடர்ந்து 24 வருடம் 165 நாட்கள் முதல்வராக இருந்து சாதனை படைத்துள்ளார். இதற்கு அடுத்தாக மேற்கு வங்கத்தில் ஜோதி பாசு 23 வருடம் 137 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார். 

 

இவர்கள் இருவரும் தற்போது பதவியில் இல்லாத நிலையில் 22 வருடம் 249 நாட்களாக முதல்வராகத் தொடர்ந்து இருந்து வருபவர் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக். இவர் மட்டுமே தற்போது 20 வருடத்தைக் கடந்து முதல்வராகப் பதவியில் இருக்கும் ஒரே நபர். இந்த பதவிக்காலம் 2024ம் ஆண்டு வரை இருப்பதால் ஆட்சிக் காலம் நிறைவடையும்போது இந்தியாவில் அதிக காலம் முதல்வராக இருந்தவர் என்ற சாதனை அவர் படைத்திருப்பார்.

 

இந்த சாதனைகள் எல்லாம் இந்த குறிப்பிட்ட மூன்று முதல்வர்களை முன்னிறுத்திப் பெற்றதாக இருந்தாலும், குஜராத்தில் அரசியல் நிலைமை என்பது முற்றிலும் வேறாகவே இன்றளவும் இருக்கிறது. 2001ம் ஆண்டு கேஷூபாய் பட்டேல் குஜராத் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததை அடுத்து தற்போதைய பிரதமர் மோடி அப்போது முதல்வராகப் பதவியேற்றார்.

 

அன்றிலிருந்து கிட்டதட்ட 13 ஆண்டுகள் அவர் முதல்வராகத் தொடர்ந்து நீடித்து வந்தார். மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு நடைபெற்ற அடுத்த இரண்டு சட்டப்பேரவை தேர்தல்களிலும் பாஜகவைச் சேர்ந்தவரே முதல்வராக வெற்றி பெற்றுள்ளார். தனிப்பட்ட நபரையும் தாண்டி சித்தாந்தமாகவே குஜராத் மக்கள் பாஜகவை விரும்புகிறார்களோ என்ற கேள்வியையும் தொடர்ச்சியாக அவர்கள் பெறும் வெற்றி எழுப்பி வருகிறது.

 

 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.