Skip to main content

தோல்விக்கு காரணம் மிதப்புதான்’’ -குமுறிய தி.மு.க. நிர்வாகிகள்! 

Published on 15/07/2019 | Edited on 15/07/2019

 

"அந்த ஒன்பது எம்.எல்.ஏ. தொகுதிகளையும் ஜெயித்திருந்தா இப்ப எடப்பாடி இருக்குற இடத்துல தளபதி ஸ்டாலின் இருந்திருப்பார். ஆனா எல்லாம் போச்சே'’என இப்போதுவரை உ.பி.க்கள் குமுறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பரமக்குடி, மானாமதுரை, சாத்தூர், விளாத்திகுளம், அரூர், பாப்பிரெட்டிபட்டி, சூலூர், சோளிங்கர், நிலக்கோட்டை ஆகிய இந்த ஒன்பது தொகுதிகளைத்தான் இடைத் தேர்தலில் பறி கொடுத்தது தி.மு.க.
 

இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆராயவும் விசாரிக்கவும் 8 பேர் கொண்ட குழுவை அமைத்தது கட்சித் தலைமை. இந்தக் குழுவில் விளாத்திகுளம் தொகுதி தோல்வி குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் பரந்தாமனும் ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பாவும் கடந்த 26-ஆம் தேதி விளாத்திகுளம் வந்திறங்கினர். 

 

Jayakumar dmk


 

தூத்துக்குடி வடக்கு மா.செ. கீதாஜீவன், வேட்பாளர் ஜெயக்குமார், நான்கு செயற்குழு உறுப்பினர்கள், ஆறு ஒ.செ.க்கள், எட்டயபுரம், விளாத்திகுளம், புதூர் ந.செ.க்கள் என தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அக்கம்மாள் மண்டபத்தில் விசாரணைக் கூட்டம் ஆரம்பமானது. அனைவரையும் ஒன்றாக அமர வைத்து விசாரணையை ஆரம்பித்தனர் பரந்தாமனும் ஈஸ்வரப்பாவும். 

 "கட்சியின் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை சரியான ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் இல்லை. மா.செ. கீதாஜீவனும் மேம்போக்காகத்தான் நடந்துகொண்டார். சில ஏரியாக்களில் ஒருசார்பு நிலை எடுத்தார்' என கீதாஜீவன் மீது ஓப்பனாகவே குற்றம்சாட்டினார்கள். 
 

 அதன்பின் மறுநாள் அதே மண்டபத்தில் இருந்த தனி அறைக்கு ஒவ்வொரு நிர்வாகியையும் தனித்தனியே அழைத்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.


 

""நான்குமுனைப் போட்டி இருக்கு. அ.ம.மு.க.வும் சுயேட்சையும் ஓட்டைப் பிரிப்பதால் நாம ஈஸியா ஜெயிச்சுரலாம்னு எல்லோரும் மிதப்புல இருந்துட்டோம். அந்த மிதப்பு அதிகமா போனதாலதான் பணப்பட்டுவாடாவும் சரியா நடக்கலை. இந்தத் தொகுதியில் மெஜாரிட்டியாக இருக்கும் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த முக்கியப்புள்ளி ஒருத்தர் விளாத்திகுளம் வந்தபோது, அமைச்சர் கடம்பூர் ராஜு, அவரைச் சந்தித்து கரெக்ட் பண்ணிட்டார். நம்ம நிர்வாகிகள் கோட்டை விட்டுட்டாங்க''’என குமுறியிருக்கிறார்கள் நிர்வாகிகள். அதன்பின் மா.செ. கீதா ஜீவனிடமும் வேட்பாளர் ஜெயக்குமாரிடமும் தனித்தனியே விசாரித்துவிட்டுக் கிளம்பிவிட்டது விசாரணைக் குழு. 
 

இதற்கிடையே திருச்சி மா.செ. கே.என்.நேரு, கடந்த 29-ஆம் தேதி விளாத்திகுளம் அம்பாள் நகருக்கு வந்தார்.  அவரை வரவேற்று அழைத்துச் சென்றிருக்கிறார், விளாத்திகுளம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட அ.தி.மு.க. மாஜி எம்.எல்.ஏ.வான மார்க்கண்டேயன். பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்திருப்பதால், விரைவில் தி.மு.க.வில் மார்க்கண்டேயன் இணையலாம் என்கிறார்கள் உ.பி.க்கள்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.