Skip to main content

இனி அசல் 'தேன்' சாத்தியமா? - பிரபல பிராண்டுகளின் வயிற்றில் புளியைக் கரைக்கும் ஆய்வு முடிவுகள்!

Published on 02/12/2020 | Edited on 03/12/2020

 

Is real honey possible anymore?

 

இயற்கையின் வரப் பிரசாதமாகக் கருதப்படும் தேனில், மிகச் சிறந்த மருத்துவக் குணங்கள் இருப்பதால், தற்பொழுது வரை சந்தையில் உண்மையான 'அசல்' தேன் எது என்பதற்கான போட்டிகள், எப்பொழுதுமே இருந்து வருகிறது. தேன் என்பது அனைவராலும் உட்கொள்ளக் கூடிய மிகச்சிறந்த உணவுப் பொருளாகும். ஆதிகாலம் தொட்டே சித்த மருத்துவ முறைகளில் கூட, சில மருந்துகளைத் தேனில் குழைத்துச் சாப்பிடுவதற்கான அறிவுரைகளை மருத்துவர்கள் வழங்குவர். அந்த அளவிற்கு, தேனிற்கு மருத்துவத்திலும், உடல்நலத்திலும் மிகப் பெரிய பங்கு உண்டு.

 

இந்நிலையில், இந்தியாவில் உண்மையான அசல் தேன் எனப் பிரபல நிறுவனங்களால் விற்கப்படும் தேன்களில், 13 பிராண்டுகளை ஆய்வு செய்ததில், அவற்றில் 8 பிராண்ட்களில் சர்க்கரை பாகு கலக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் உள்ள ஆய்வகம் ஒன்றில் சி.எஸ்.இ எனப்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், புகழ் பெற்ற 13 பிராண்டுகளின் தேன்களைப் பரிசோதனை செய்துள்ளது. அதில், 8 பிராண்டுகளில் சர்க்கரை பாகு கலக்கப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 

'அணுகாந்த ஒத்ததிர்வு' என்ற நவீன சோதனை முறைப்படி சர்க்கரை பாகு கலப்படம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாக, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவற்றை உட்கொள்பவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், தேனுடைய தரம் குறித்த கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகளை மத்திய அரசு மேலும் அதிகப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது சி.எஸ்.இ

 

இது ஒரு பக்கம் இருக்க, இந்தச் சோதனை முடிவுகள் பிரபல நிறுவனங்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. ஆய்வு முடிவுகளை, அந்தக் குறிப்பிட்ட நிறுவனங்கள் மறுத்துவருகிறது. குறிப்பாக, 'டாபர்' நிறுவனம், இந்த ஆய்வு அறிக்கை உள்நோக்கம் கொண்டது. எங்கள் மீது அவதூறு பரப்புவதற்காகவே வெளியிடப்பட்டிருக்கிறது எனக் கூறியுள்ளது. இந்திய அரசின் உணவுத் துறை கட்டுப்பாட்டு அமைப்பின் விதிகளுக்குட்பட்டே நாங்கள் தேன் தயார் செய்கிறோம் எனவும் தெரிவித்துள்ளது. அதேபோல் 'ஜண்டு' நிறுவனமும் தங்கள் மீதான இந்தக் குற்றச்சாட்டுப் போலியானது, உள்நோக்கம் கொண்டது எனக் கூறியுள்ளது. அதேபோல், 'பதஞ்சலி' நிறுவனமும், அவர்கள் மீதான புகாரை மறுத்துள்ளது. இயற்கை உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் தங்களைக் கலங்கப்படுத்த தங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சதி இது எனக் கூறியுள்ளது. 

 

cnc

 

என்ன இருப்பினும் உண்மையான தேன் என விளம்பரங்கள் மூலம் வீடுகளை எட்டிய பிரபல பிராண்டுகளின் தேன்கள், உண்மையிலேயே 'அசலா?' அல்லது 'போலியா?' எனக் குழப்பும் நிலையை ஏற்படுத்தியுள்ளது, இந்த ஆய்வு. சி.எஸ்.இ ஆய்வின்படி பார்த்தால், இனி அசல் தேன் சாத்தியமா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உங்கள் குழந்தை செர்லாக் பேபியா?' -எச்சரிக்கை மணி அடித்த உலக சுகாதார அமைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Is your child a Cerelac baby?'-World Health Organization has sounded the alarm

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக் என்பது ஊட்டச்சத்து உணவு எனப் பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் நீண்ட நெடும் காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனம் இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகின்ற நிலையில், நெஸ்லேவின் குறிப்பிடத் தகுந்தத் தயாரிப்பில் ஒன்றாக உள்ளது செர்லாக்.

இந்தநிலையில் IBFAN எனப்படும் Baby Food Action Network என்ற ஐரோப்பிய அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்கப்படும் செர்லாக் எனும் குழந்தைகளுக்கான  ஊட்டச்சத்து உணவை ஆய்வு செய்தது. ஊட்டச்சத்து பொருள் என்று கூறப்படும் செர்லாக்கில் சுவைக்கு அடிமையாக்கி அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் என்பது சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது நெஸ்லேவின் முக்கிய சந்தையாக கருதப்படும் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் மட்டும் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் செர்லாக்கை  குழந்தைக்கு ஒரு முறை ஊட்டுகையில் 2.2 சதவீதம் அடிக்டிவ் சுகர் குழந்தையின் உடலுக்கு செல்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தியாவை விட எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகரின் அளவு 5.2 கிராமாக உள்ளது. நெஸ்லேவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கும், குழந்தைகள் பார்ப்பதற்கு அளவுக்கு மீறி குண்டாக இருப்பதற்கும் இவையே காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.