Skip to main content

"பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது; அதனால் கன்னியாகுமரியை குறி வைக்கிறார்" - ராம சுப்பிரமணியன் ஓபன் டாக்

Published on 27/10/2022 | Edited on 27/10/2022

 

பக

 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு  தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல்வரிடம் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட சில நாட்களாகவே பரபரப்பைக் கிளப்பி வந்த அந்த அறிக்கை கடந்த வாரம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவையில் வைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அன்றைய முதல் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்தே நடைபெற்ற ஒன்று, அவருக்கு நொடிக்கு நொடி காவல்துறை சார்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்த நிலையில் இந்த விவகாரம் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

 

இதற்கிடையே கடந்த வாரம் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழக அரசியலில் தான் கை, கால், தலை என அனைத்தையும் நுழைப்பேன். அதை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று தெரிவித்திருந்தார். இந்த இரண்டு சம்பவம் தொடர்பாகவும் மூத்த அரசியல் விமர்சகர் ராம சுப்பிரமணியன் அவர்களிடம் நாம் சில கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு:

 

"தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் எடப்பாடி தரப்பு கூறியது போல் தனக்குத் தெரியாமல் நடந்து விட்டது என்று கூறியதையெல்லாம் அப்போதே யாரும் நம்பவில்லை. இந்த சம்பவம் திட்டமிட்டு நடைபெற்ற ஒன்று. முதல்வரிடம் கேட்டே காவல்துறையினர் இதைச் செய்திருப்பார்கள். இதையே தற்போது விசாரணை ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தொலைக்காட்சியைப் பார்த்துதான் துப்பாக்கிச்சூட்டைப் பற்றித் தெரிந்து கொண்டேன் என்று சொல்வதெல்லாம் எவ்வளவு பெரிய அபத்தம். அப்படி அது உண்மையாக இருந்தால் இவர் எதற்காக முதல்வராக இருக்க வேண்டும். அந்தப் பதவியை அசிங்கப்படுத்துவதைப் போல் இவரின் பேச்சு அமைந்துள்ளதாகவே நான் கருதுகிறேன். 

 

இந்த விவகாரத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நமக்கு ஏற்கனவே தெரிந்த உண்மையாக இருந்தாலும் விசாரணை ஆணையம் தீவிர விசாரணைக்குப் பிறகு அதனை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே இந்த விசாரணை ஆணையம் தெரிவித்துள்ள நபர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுத்து அவர்களை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும். அதுவே பலியான மக்களுக்கு அரசு செய்கின்ற நேர்மையான உதவியாக இருக்கும்" என்றார்.

 

தமிழிசை தொடர்பாக பேசிய அவர், "தமிழிசை எங்கே இருக்க வேண்டும்,அவர் எங்கே இருந்து கொண்டு இருக்கிறார். தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர் முழு நேரமும் பாண்டிச்சேரியிலிருந்து வருகிறார். ஏனென்றால் தெலுங்கானா அரசு இவரை எதற்கும் அழைப்பதில்லை. ஆளுநர் உரையாற்றக் கூட இவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. உப்புக்குச் சப்பாணியாக அங்கு அவர் ஆளுநராக இருந்து வருகிறார். மேலும் இன்னும் சில காலத்தில் ஆளுநர் பதவி முடிவடையப் போகிறது. எனவே அவருக்கு தீவிர அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதற்கு அச்சாரமாகத் தமிழகத்தில் உள்ள பத்திரிக்கையாளர்களை எல்லாம் அழைத்து புத்தகம் போடுகிறேன் என்ற வகையில் அவர்களோடு நட்புறவை ஏற்படுத்துகிறார். 

 

இதை விடப் பெரிய பதவி, ஏன் பிரதமர் பதவியில் அமர வேண்டும் என்ற எண்ணம் கூட அவருக்கு இருக்கலாம். இல்லை பெரிய அமைச்சர் பதவியைப் பெற வேண்டும் என்ற எண்ணம் கூட அவருக்கு இருக்கலாம். அதற்கான முயற்சியாகவே இதனை நாம் பார்க்க வேண்டும். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அவர் போட்டியிட விரும்புகிறார். குறிப்பாக தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட அவர் விரும்புகிறார்.அங்கு பாஜக சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் அடிக்கடி தோல்வி அடைவதால் இவர் அங்கு எளிதில் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறார். இல்லை என்றால் தென் சென்னையில் போட்டியிடும் திட்டமும் அவருக்கு இருக்கிறது. இதற்காகவே அவர் காய் நகர்த்தி வருகிறார். இதில் அரசியல் இல்லாமல் இல்லை" என்றார். 

 

 

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

அத்துமீறிய அதிமுக, பாஜக - காவல்துறை வழக்குப் பதிவு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 Violating AIADMK, BJP- Police case registered

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று திமுக, அதிமுக, பாஜகவினர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த இடங்களில் மோதிக்கொண்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில், நேற்று நீலகிரியில் அதிமுக வேட்பாளர்களும் பாஜக வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் நடத்தை வழி முறைகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். அப்போது தேர்தல் நடைமுறையை மீறி பெருங்கூட்டத்துடன் வந்ததால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறைக்கும் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தேர்தல் நடத்தை வழிமுறைகளையும் மீறி பட்டாசு வெடித்தது; அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்து கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியது; காவல்துறையினரைப் பணி செய்ய விடாமல் தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக பாஜக மற்றும் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.