Skip to main content

“ராமநாதபுரம் வறட்சியான பகுதி அல்ல; வணிகத்தால் செழித்த பகுதி..” - தொல்லியல் ஆய்வாளர் பேச்சு 

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

“Ramanathapuram is not a dry region; An area that thrived on trade..” - Archaeologist speaking

 

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியர் முனைவர் சு. தாமரைப்பாண்டியன் ஒருங்கிணைப்பில் கோடைக்காலச் சுவடியியல் மற்றும் கல்வெட்டியல் பயிற்சிப் பட்டறை 28.06.2023 முதல் நடைபெற்று வருகிறது. இது 18.07.2023 வரை நடைபெறும். இதில் கல்வெட்டியல் பயிற்சியில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ‘ராமநாதபுரம் வணிகக்குழு கல்வெட்டுகள்’ எனும் தலைப்பில் பயிற்றுரை வழங்கி பேசியதாவது,

 

ராமநாதபுரத்தில் அஞ்சு வண்ணத்தார், ஐநூற்றுவர், நானாதேசி, பதினெண் விசயத்தார் உள்ளிட்ட பல வெளிநாட்டு, உள்நாட்டு வணிகக் குழுக்கள் இருந்துள்ளனர். ராமநாதபுரம் வறட்சியான பகுதி அல்ல. முல்லை, நெய்தல் நிலப் பகுதிகளைக்  கொண்ட வளமான பகுதி. முற்காலப் பாண்டியர்கள் வைகை நதியை அடிப்படையாக வைத்து நீர்ப்பாசனக் கால்வாய்களையும், கண்மாய்களையும் உருவாக்கி மருத நிலமாகக் கட்டமைத்தனர். இதில் ராசசிம்மமங்கலம், ராமநாதபுரம், களரி, செழுவனூர் போன்ற பெரிய கண்மாய்களையும் வைகையில் இருந்து கால்வாய்களையும் உருவாக்கினர். இதனால் மழைக் காலத்தில் பெய்யும் நீரை முழுமையாகத் தேக்கி வைத்து விவசாயம் செழிக்கச் செய்தனர்.

 

தமிழ்நாட்டின் கால்பகுதி கடற்கரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளதால் இயற்கை துறைமுகங்களும் உப்பங்கழிகளும் நிறைந்த இங்கு கி.பி.9-ம் நூற்றாண்டு முதல் கி.பி.16-ம் நூற்றாண்டு வரை திசையாயிரத்து ஐந்நூற்றுவர், நானாதேசி, அஞ்சுவண்ணம், மணிக்கிராமம், பதிணென் விஷயத்தார் உள்ளிட்ட தெற்காசியா முழுவதும் இயங்கிய வணிகக் குழுக்கள் ராமநாதபுரம் பகுதியில் வணிகம் செய்துள்ளனர்.

 

வணிகக் குழுக்கள், பௌத்தம், சமணம் ஆகியவற்றின் காரணமாக இலங்கைக்கும் ராமநாதபுரத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகமான புத்த மத எச்சங்கள் இங்குதான் காணப்படுகின்றன. அஞ்சுவண்ணம் எனும் இஸ்லாமியர் தலைமையிலான வணிகக் குழுவினர் தீர்த்தாண்டதானம் கோயில் மண்டபத்தை பராமரித்த கல்வெட்டு செய்தி உள்ளது. இன்று அம்மண்டபமும் கல்வெட்டும் அழிந்துள்ளன. தொண்டியும், பெரியபட்டினமும் பிற்காலப் பாண்டியர் காலத்தில் பவித்திரமாணிக்கப்பட்டினம் என அழைக்கப்பட்டுள்ளன. இது நவரத்தின வணிகர்களால் இப்பெயர் பெற்றுள்ளன. தேவிபட்டினத்தில் உள்ள சிவன் கோயிலில் நானாதேசி வாசலும், திருஞானசம்மந்தன் தளம் என்ற வணிகர் தளமும் இருந்துள்ளது.

 

தனுஷ்கோடியில் கிடைத்த வட்டெழுத்து கல்வெட்டில் கி.பி.8-ம் நூற்றாண்டில் திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், வளஞ்சியர், முன்னூற்றுவர்  ஆகியோர் ராமேசுவரத்தில் செய்த தர்மத்தைப் பற்றிச் சொல்கிறது. வாலாந்தரவையில் கிடைத்த கல்வெட்டு, பெரியபட்டினத்தில் யூதர்களுக்கு ஐந்நூற்றுவர் கட்டிய சூதப்பள்ளியான ஐந்நூற்றுவன் பெரும்பள்ளியைக் குறிப்பிடுகிறது. கமுதியில் கிடைத்த 10-ம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு ஐந்நூற்றுவர் எனும் வணிகக் குழுவின் புகழ் பாடுகிறது.

 

திருவாடானைப் பகுதியில் அறுநூற்றுவர், தனுஷ்கோடி பகுதியில் முன்னூற்றுவர், சாயல்குடி பகுதியில் முனைவீரர் ஆகிய வணிகக்குழு பாதுகாவல் வீரர்கள் இருந்ததை கல்வெட்டுகள் சுட்டுகின்றன. உப்பங்கழிகளால் உருவான இயற்கைத் துறைமுகங்கள், நெல் விளைச்சல், பெரிய ஆறுகள் குறுக்கிடாமை, இயற்கைத் தடைகள் இல்லாமை, அதிகளவிலான வணிகப் பாதைகள், பாதுகாப்பு ஆகிய பல காரணங்களால் 2000 ஆண்டுகளாக வெளிநாட்டு, உள்நாட்டு வணிகர் குழுக்கள் ராமநாதபுரம் பகுதிக்கு வந்திருக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

 

 

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

''குசும்ப பாருங்க... வாட்ஸ் அப்பில் இப்படியெல்லாம் பரப்புகிறார்கள்''-ஓபிஎஸ் ஆதங்கம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
They are spreading all this on WhatsApp" - OPS

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சின்னத்தை திராட்சை கொத்து என பலர் வாட்ஸ் அப்பில் தவறாக பரப்புவதாக குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ராமநாதபுரத்தில் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர்கள் மூன்று சின்னங்களைக் குறிப்பிட வேண்டும். நான் மூன்று சின்னங்களைக் குறிப்பிட்டு கொடுத்திருந்தேன். இப்பொழுது நிறைய பன்னீர்செல்வங்கள் வந்து விட்டார்கள். என்னுடன் சேர்த்து ஆறு பன்னீர்செல்வம். மற்ற ஐந்து பேரும் நான் என்னென்ன சின்னம் எழுதிக் கொடுத்தேனோ அதே சின்னத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஒரு குழப்ப சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அப்படி செய்துள்ளார்கள். இப்பொழுது என்ன செய்திருக்கிறார்கள் என்றால், குசும்பு பாருங்க, ஓபிஎஸ் சின்னம் வாளி என வாட்ஸ் அப்பில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் சின்னம் திராட்சை கொத்து என வாட்ஸ் அப்பில் பரப்புகிறார்கள்.

நான் எழுதிக் கொடுத்த மூன்று சின்னங்களையும் ஓபிஎஸ் சின்னம் ஓபிஎஸ் சின்னம் என்று செல்லில் இன்று பறக்கவிட்டு வருகிறார்கள். இது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல். ஒரு சின்னத்தை இரண்டு வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கள் முறையில் கொடுப்பார்கள். சின்னம் ஒதுக்குவது குறித்து நேரம் காலம் ஒதுக்கப்பட்டது. உங்களுடைய வாழ்த்துக்களால், ஆசிர்வாதத்தால் நீங்கள் தந்த வரத்தினால் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அது உங்களால் தான் கிடைத்தது. உங்கள் ஆசியால் எனக்கு இந்தச் சின்னம் கிடைத்தது''என்றார்.