Skip to main content

முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது! - ரெட் அலர்ட் குறித்து ரமணன்  

Published on 05/10/2018 | Edited on 05/10/2018
ramanan

 

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து வரும் 7ம்தேதி (07.10.2018) ‘ரெட் அலர்ட்’ இந்திய வானிலை ஆய்வு மையத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ரெட் அலர்ட் குறித்தும், மழை அறிவிப்பு குறித்தும் சென்னை மக்கள் மத்தியில் பல்வேறு தகவல்கள் பரப்பப்படுகின்றன. எது உண்மை, ரெட் அலெர்ட் எவ்வளவு சீரியஸானது என்பது குறித்து சென்னை வானிலை மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணனிடம் கேட்டோம்... 

 

நேற்று ரெட் அலர்ட் விடப்பட்டிருந்தது. அதில் இன்று ஏதும் மாற்றமிருக்கிறதா?

 

இன்றைக்கு கிடைத்த தகவல்களின்படி, அதில் ஏதும் மாற்றமில்லை. அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால்தான் ரெட் அலர்ட் விடப்பட்டிருக்கிறது.

 

ஒருவேளை 7ம்தேதி ரெட் அலர்ட் உண்மையானால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

 

ரெட் அலர்ட் என்பது அதிகனமழைக்கான எச்சரிக்கைதான், வேறொன்றுமில்லை. முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

 

7ம் தேதி பயங்கரமான மழை பெய்யும். அதனால் தங்களுக்கு தேவையானவற்றை முன்னரே வாங்கிக்கொள்ளுங்கள் என வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் பரவி வருகிறது. அவ்வளவு வலிமையானதாக இருக்குமா? 

 

ஒரு சில இடங்களில் அதிகனமழை வர வாய்ப்பு இருக்கிறது. அதற்கேற்றார்போல் நாம் நடந்துகொள்ளவேண்டும், அவ்வளவுதான். வாட்ஸ் அப் என்பது அதிகாரப்பூர்வமில்லாத ஒரு செயலி. அதனால் அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டும் நம்புங்கள். வானிலை ஆராய்ச்சிக் கழகமோ, பேரிடர் மேலாண்மை குழுவோ அல்லது ஆணையரோ (CRI) கூறியிருந்தால் மட்டும் நம்புங்கள்.

 

2015ல் வெள்ளம் ஏற்பட்டபோது உண்டான பாதிப்புகள் போன்று இருக்க வாய்ப்பிருக்கிறதா?

 

இத்தனை நாட்கள் மழை இல்லாததால் பூமி காய்ந்திருக்கும். மழை வரும்போது பூமியை அதை உள்வாங்கிக்கொள்ளும். இரண்டாவது, மழையால் மட்டும் வெள்ளம் ஏற்படாது. அது ஏற்பட பல்வேறு காரணங்கள் உண்டு. ஆதலால் அவையனைத்தும் வைத்துதான் தீர்மானிக்க முடியும்.

 

 

 

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.