Skip to main content

ஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்! 

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

"பா.ம.க.வும் ரஜினியும் கூட்டணி சேர வாய்ப்பு இருக்கிறது; அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்திருக்கிறது' என தமிழருவி மணியன் வீசிய குண்டு அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்திய சூழலில், சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினி தொடர்பான கேள்விகளுக்கு பூடகமாகவே பதிலளித்தார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். அவருடைய பதிலால் அதிர்ச்சியடைந்திருக்கிறது அ.தி.மு.க. தலைமை.

"சினிமாக்காரர்களை கூத்தாடிகள்' என விமர்சிப்பவர் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். குறிப்பாக, ரஜினியின் "பாபா' பட விவகாரத்தின்போது ரஜினிக்கு எதிராக முன்வைத்த விமர்சனம் இது. அந்த விமர்சனத்தின் மீது அழுத்தமான நம்பிக்கையை ஆழமாக வைத்திருக்கும் ராமதாஸ், தற்போது ரஜினிக்கு எதிராக எந்த விமர்சனத்தையும் வைப்பதில்லை.

 

rajini



"பத்திரிகையாளர்கள் கேட்கும் எப்படிப்பட்ட கேள்விகளுக்கும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என நேரடியாகவே பதில் சொல்லிப் பழக்கப்பட்ட ராமதாசிடம் ஏற்பட்டிருக்கும் அண்மைக்கால மாற்றங்களுக்கு ரஜினியுடனான அன்புமணியின் நெருக்கமும் கூட்டணி முயற்சிகளும்தான் காரணம்' என்கிறார்கள் பா.ம.க.வினர்.

ராமதாஸ், ரஜினி, எடப்பாடியைச் சுற்றி அரசியலில் என்ன நடக்கிறது என மூன்று தரப்பிலும் விசாரித்தோம். பா.ம.க. வின் உள்வட்டங்களில் விசாரித்தபோது, ""நேரடி அரசியலுக்கு ரஜினி வராமல் போனால் அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும்தான் சட்டமன்றத் தேர்தலில் பிரதானமாக களத்தில் நிற்கும். அப்படிப்பட்ட சூழல் உருவானால் ஆட்சியை தி.மு.க. கைப்பற்ற வாய்ப்பு உண்டு என சில கணக்குகளை ராமதாசிடம் சிலர் சொல்லியிருக்கிறார்கள்.

 

pmk



தி.மு.க.வை தனது எதிரியாக நினைக்கும் ராமதாஸ், என்ன விலை கொடுத்தாலும் மு.க.ஸ்டாலின் முதல்வராவதை தடுக்க வேண்டும் என்பதில் உறுதி காட்டி வருகிறார். அதற்குப் பல கணக்குகளும் காரணங்களும் இருக்கின்றன. குறிப்பாக, ஆட்சி அதிகாரத்தில் இந்தமுறை பா.ம.க. பங்குபெறாமல் போனால் அப்படி ஒரு வாய்ப்பு எப்போது வாய்க்கும் என தெரியாது. அதனாலேயே, அதிகாரத்தை கைப்பற்ற பல்வேறு காய்களை நகர்த்தியபடி இருக்கிறது பா.ம.க. தலைமை. அதில் ஒன்றுதான் ரஜினி.

அரசியலுக்கு ரஜினி வருவது உறுதி என ராமதாசுக்கும் அன்புமணிக்கும் சொல்லப்பட்டுள்ளது. ரஜினியுடன் கூட்டணி வைப்பதை விரும்பும் அன்புமணி, பா.ம.க. -ரஜினி -பா.ஜ.க. என ஒரு கூட்டணியை உருவாக்கத் திட்டமிடுகிறார். அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ரஜினியை சந்தித்து விவாதித்திருக்கிறார் அன்புமணி. அந்த வகையில்தான், ரஜினிக்கு எதிரான விமர்சனங்களை ராமதாஸ் தவிர்ப்பதுடன் பா.ம.க. தரப்பிலிருந்து பாசிட்டிவ் சிக்னலும் ரகசியமாக ரஜினிக்கு கொடுக்கப்பட்டு வருகிறது'' என்கிறார்கள் நம்மிடம் பேசிய பா.ம.க.வின் வடதமிழக மூத்த நிர்வாகிகள்.

 

pmk



ரஜினிக்கு நெருக்கமான நட்பு வட்டாரங்களில் விசாரித்தபோது,’ சென்னை -கேளம்பாக்கத்திலுள்ள ரஜினியின் பண்ணை வீட்டில் அவரை சந்தித்திருக்கிறார் அன்புமணி. அந்த சந்திப்பில், "நேரடி அரசியலுக்கு நீங்கள் வருவதன் மூலம் தமிழகத்தில் ஒரு மாற்றம் நடக்கும். நாங்களும் நீங்களும் கூட்டணியாக இணைந்தால் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை தர முடியும்' என அன்புமணி சொல்ல, அதனை ஆமோதித்த ரஜினி, "அய்யா ராமதாசின் போராட்டங்களை நிறைய படித்திருக்கிறேன். சமூக நீதிக்கான போராட்டங்களில் அவரது பங்களிப்பு பிரமிக்கத்தக்கது. அவரை விட்டால் இப்போது தமிழகத்தில் மூத்த சமூகப் போராளி யாருமில்லை. தமிழக அரசியலில் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அது பற்றி நிறைய விவாதிக்கலாம்' என சொல்லியிருக்கிறார்.

இந்த சந்திப்பையடுத்து ரஜினி-அன்புமணி யின் நட்பு இறுகியிருக்கிறது. பா.ம.க.வுடன் கூட்டணி வைப்பதில் ரஜினியும் விருப்ப மாகத்தான் இருக்கிறார். காரணம், பா.ஜ.க.வின் செயல் திட்டங்களுக்கேற்ப தி.மு.க.வை எதிரியாக கருதும் ரஜினி, தி.மு.க.வுக்கு எதிராக அரசியல் செய்யும் பெரும்பான்மை சமூகத்தை உள்ளடக்கிய பா.ம.க.வுடன் கூட்டணி வைப்பது தனக்கு சாதகமாக இருக்கும் என கணக்குப் போடு வதுதான். இதற்கான பல புள்ளிவிபரங்கள் ரஜினியிடம் தரப்பட்டிருக்கின்றன'' என்கிறார்கள் அழுத்தமாக.


இந்த நிலையில், ரஜினி-பா.ம.க. உறவு குறித்து விசாரிக்க உளவுத்துறைக்கு உத்தர விட்டிருந்தார் முதல்வர் எடப்பாடி. உளவுத் துறை உறுதி செய்தது. இது குறித்து தனது தரப்பிலிருந்து ராமதாசிடம் பேச, "அ.தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறோம். நமது கூட்டணி தொடரும். பா.ம.க.வை சந்தேகப் பட வேண்டாம்' என தெரிவித்திருக்கிறார். இருப்பினும் பா.ம.க. மீதான தனது சந்தேகத்தை எடப்பாடி விலக்கிக்கொள்ள வில்லை'' என்கிறார்கள் மூத்த அமைச்சர் களுக்கு நெருக்கமானவர்கள்.


பா.ஜ.க.வின் அரசியல் ஆலோசகர்களி டம் இது குறித்து விசாரித்தபோது, ""பா.ம.க.வில் அதிகரித்துவரும் அதிருப்தி யாளர்கள் அங்கிருந்து வெளியேற தருணம் பார்க்கிறார்கள். இத்தகைய அதிருப்தியாளர் கள் அ.தி.மு.க., தி.மு.க.வுக்குள் போக விரும்பு வதில்லை. ரஜினி போன்ற மாஸ் ஹீரோக்கள் கட்சி ஆரம்பிக்கும்போது அங்கு சென்றால் நல்ல பதவிகள் வாங்க முடியும் என எதிர் பார்த்திருக்கிறார்கள். அதனைத் தடுப்பதற்காக வும், அ.தி.மு.க.விடம் சீட் சேரிங்கை அதிகரித்துக்கொள்ளவும்தான் ரஜினியும் பா.ம.க.வும் நெருங்குவது போல தோற்றத்தை உருவாக்குகிறது பா.ம.க. தலைமை''‘என சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால், தி.மு.க.வை வீழ்த்த ரஜினியை வைத்து ஒரு மெகா கூட்டணியை உருவாக்க பலே பலே திட்டங்களைப் போடத் துவங்கியிருக்கிறது பா.ஜ.க.வின் தேசியத் தலைமை.

 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.