Skip to main content

"அதுதான் தவறான விசயம்..." - இணையத்தைக் கலக்கும் ரஜினி ரசிகர் பிஜிலி ரமேஷ்!  

Published on 27/06/2018 | Edited on 27/06/2018

கடந்த வருடத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி சக்கைபோடு போட்டது. அதில் ஓவியாவின் ரசிகர்கள் எல்லாம் ராணுவமாக மாறினார்கள், அதான் ஓவியா ஆர்மி அமைத்தார்கள். அதே போல இந்த வருடமும் பிக்பாஸ் ஆரம்பமாகி யாஷிகாவுக்கு ஆர்மி தொடங்கப் போறாங்களோ, இல்ல ஜனனிக்கு ஆர்மி தொடங்கப் போறாங்களோ என்று எதிர்பார்த்தால், பிக்பாஸ் பக்கம் இந்த முறை ஆர்மி ஆரம்பிக்காமல் 'எம்ஜிஆர் நகர்' பிஜிலி ரமேஷுக்கு ஆர்மி தொடங்கி வச்சுருக்காங்க நம்ப சமூக வலைதள நண்பர்கள்.

 

bijili ramesh



'காலா' படம் வெளியான சமயத்தில் வெளியானதுதான் பிஜிலி ரமேஷ் பற்றிய 'பிளாக்  ஷீப்' யூ-ட்யூப் சேனல் வீடியோ. அது, பொதுமக்களிடம் நகைச்சுவையாக நடித்து கேலி செய்து இறுதியில் 'நாங்கள் தொலைக்காட்சியிலிருந்து வருகிறோம்' என்று சொல்லி அவர்களை அசடு வலிய செய்து சிரிக்கவைக்கும் நிகழ்ச்சி. இதில் ஒரு பகுதியாக வந்த பிஜிலி ரமேஷ் பெற்ற வரவேற்பை பார்த்து அவருக்கென தனி வீடியோவே விடப்பட்டது. அதிலிருந்து தற்போது வரை சோசியல் மீடியா ட்ரெண்டிங்காக இருக்கிறார் பிஜிலி.

காத்திருந்த மீம் கிரியேட்டர்களுக்கு இப்படி ஒரு அருமையான டெம்ப்லேட் கிடைத்தால் சும்மா இருப்பார்களா? அவரை வைத்து மீம்ஸ்களும் எக்கச்சக்கமாக வளம் வர துவங்கின. அவற்றில் சில இங்கே...

 

bijili meme 1

 

bijili 2

 

bijili memes 3

 

bijili memes 4

 

bijili memes 5

 

இன்னொருவருக்கு பிடித்தமான ஒரு பொருளை கேட்கிறோம் என்றால் உதாரணத்திற்கு.

நண்பன் 1 : அந்த கேக் கொடுடா !

நண்பன் 2: அதுதான் தவறான விஷயம் 

பாட்ஷா படம் வெளியானபோது, ரஜினி பேசிய "நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி" வசனம் எத்தனை பேமஸோ அந்த அளவிற்கு ரஜினி ரசிகர் பேசிய "அதுதான் தவறான விஷயம்" வசனமும் பேமஸ் ஆகியிருக்கிறது. 'சிவனேனு போட்டுயிருந்தவன புடிச்சு லாக் பண்ணி... ஆஹ்ன்...' இதுவும் அவருடைய பேமஸ் வசனம் தான். வசனத்தைவிடவும் அவரது பாடி லாங்குவேஜ்தான் செம்ம என்கிறார்கள் பிஜிலி ரமேஷ் ஆர்மிகாரர்கள். சோழிங்கநல்லூரில் இவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் ஐடி ஊழியர்கள், இவர் கூட செல்பி எடுத்துக்கொள்ள சண்டையிடும் அளவுக்கு தமிழகத்தின் பேமஸ் ஸ்டாராக வளம் வருகிறார்.

 

 


வார்த்தைக்கு வார்த்தை ரஜினி, ரஜினி தமிழ்நாட்டின் அடுத்த முதல்வரில் இருந்து எல்லாமே ரஜினி என்று மட்டுமே வாயை திறந்தால் சொல்கிறார் இந்த பேமஸ் ஸ்டார் பிஜிலி ரமேஷ். ரஜினியின் ரசிகன் என்பதை விட வெறியன் என்றுதான் இவரை சொல்ல வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் இவரின் வளர்ச்சி என்ன என்றால், அவருக்கே தெரியாத ஒரு கூட்டம் அவரை பின்னோக்கியுள்ளது. "யூ ஆர் த பெஸ்ட்" (you are the best) என்று அவரைப் பார்த்து சொன்னாலும், 'அது நான் இல்லை தலைவர் ரஜினிதான்' என்பார். காலா படத்திற்காக காசி தியேட்டர் வாசலில் வைக்கப்பட்ட பிளக்சில் பிஜிலியின் படம் ஒரு ரசிகனாக இருக்க, தற்போது பிஜிலி ரமேஷுக்கும் அதுபோன்று கட் அவுட்கள் வைக்கும் அளவுக்கு ரசிகர்கள் பெருகிவிட்டனர். பிஜிலி ரமேஷ் ரஜினிகாந்துடன் புகைப்படம்  எடுத்திருப்பதை சமூக வலைத்தளங்களில் போட்டு, 'ரஜினிகாந்த் கொடுத்து வைத்தவர், எங்கள் தலைவருடன் புகைப்படம் எடுத்திருக்கிறார்' என்றெல்லாம் சற்று ஓவராகவே பிஜிலி ரமேஷ் புகழ் பாடி வருகின்றனர். 'பிஜிலி ரமேஷைப் பற்றி நீ சொல்லப்பா' என்றால் அவர் பாணியிலேயே 'நீ மூடப்பா' என்கிறார்கள். ரஜினியின் ரசிகர் என்பதால் அவரைவிட பாபா முத்திரையை அழகாக வைத்து பாபா முத்திரையை தமிழகத்தில் மீண்டும் பிரபலமாக்கியுள்ளார்.

 

 


பிஜிலி ரமேஷ் ஆர்மி பக்கத்தில் இருக்கும் நண்பரிடம் கேட்ட பொழுது, 'தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்சனைகள், அலுவலகங்களில் இருக்கும் பிரச்சனைகள் என சுற்றியிருக்கும் பிரச்சனைகளை பேச, மறக்க, மீம்கள் தான் இப்பொழுது பெரும் வடிகாலாக இருக்கின்றன. அவற்றில் அவ்வப்போது இது போல வரும் புதிய கான்சப்ட்டுகள், டெம்ப்லேட்கள்தான் எங்களை குஷிப்படுத்துகின்றன. அதனால்தான் இதெல்லாம்' என்கிறார். இப்பொழுதெல்லாம் எல்லா பிரச்சனைகளுமே கான்சப்ட்டாகவும் டெம்ப்லேட்டாகவும் மாறி மறக்கப்படும் அபாயம் இருக்கிறது. அதுதான் தவறான விசயம்.                

 

 

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார். 

Next Story

“கலைஞரின் தாஜ்மஹால் என்று சொல்லலாம்” - நடிகர் ரஜினிகாந்த்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024

 

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் எதிரில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி (24.8.2021) சட்டமன்றப் பேரவை விதி 110 ன்கீழ் வெளியிட்ட அறிவிப்பின் படி நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன.

மேலும் அண்ணா, கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கலைஞர் சதுக்கத்திற்கு கீழே ‘கலைஞர் உலகம்’ என்ற அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நினைவிடங்களில் அண்ணா சிலை, திருவாரூர் - சென்னை ரயில் பயண ஒலி-ஒளிக் காட்சி, சாதனை விளக்கப் புகைப்படத் தொகுப்புகள், கலைஞர் பொன்மொழிகள் கலைஞர் சிலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26.11.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைத்தார். பின்னர் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகள் மற்றும் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்றப் பேரவை தலைவர் மு. அப்பாவு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், பா.ம.க. சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே. மணி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Lets call it an kalaignar Taj Mahal says actor Rajinikanth

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “கலைஞரின் நினைவிடம் மிகவும் அருமை. ரொம்ப அற்புதம். இதனை கலைஞரின் நினைவிடம் என்று சொல்வதை விட, கலைஞரின் தாஜ்மஹால் என்று சொல்லலாம். அவ்வளவு அருமையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.