Skip to main content

“இன்றோடு 152வது நாள்... ரஜினிக்கு ஓட்டு போட்டுட்டு இந்த பனியனை கழட்டிடுவேன்..” ரஜினி ரசிகர் உறுதி!

Published on 31/10/2020 | Edited on 31/10/2020

 

Rajni political entry  fans interview

 

சமூக வலைதளங்களில் நடிகர் ரஜினிகாந்த் பெயரில் ஒரு கடிதம் பரவியது. இந்நிலையில், நேற்று முன்தினம் இதுகுறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் "என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்குத் தெரிவிப்பேன்" என்று தெரிவித்திருந்தார். 


அதனைத் தொடர்ந்து நேற்று காலை ''ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்'' என வலியுறுத்தி எழும்பூர் பகுதி ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் போயஸ்கார்டனில் உள்ள ரஜினி வீட்டின் முன்பு குவிந்தனர். அவர்களில் சில ரசிகர்கள் நக்கீரன் இணையத்திற்கு அளித்த பேட்டி...

 

Rajni political entry  fans interview
                                                    ஆட்டோ ஆண்டாள்

 

ஆட்டோ ஆண்டாள்:

 

நான், சென்னை எழும்பூர் மகளிர் அணி பகுதிச் செயலாளர். சமீபத்தில் தலைவருக்கு உடல்நலக்குறைவு எனச் செய்திகள் வந்தது. அதுக்கு தலைவர் நேத்து ட்விட்டர்ல பதில் சொல்லிட்டாரு. ‘ஆமா எனக்கு உடம்பு சரியில்லை என்பது உண்மை’தானு. ஆனா தமிழகத்த காப்பத்த தலைவரால மட்டும்தான் முடியும். அவர் வரனும். அவர் கண்டிப்பா வருவாரு. அவருக்காகக் களத்தல் இறங்கி வேலை செய்யத் தயாரா இருக்கோம். தமிழகத்த காப்பாத்த தலைவரால் மட்டும்தான் முடியும் அவர் கண்டிப்பா வரனும், வருவாரு. என்று தெரிவித்தார்.

 

ரஜினி:


நான், மத்திய சென்னை மாவட்ட எழும்பூர் பகுதி துணைச் செயலாளர், ட்விட்டர்ல நேத்து தலைவரு, 'உடம்பு முடியல என்பது உண்மைதான், ஆனா வாட்ஸ் ஆப்ல வர அறிக்கை பொய்'ன்னு சொல்லி இருக்காரு. கண்டிப்பா தலைவர் தமிழகத்தைக் காப்பாத்த வருவாரு. தத்தளிக்கிறது தமிழகம். மக்கள் வாழவேண்டும். அதற்குத் தலைவா நீங்கள்தான் ஆள வேண்டும். தலைவர் இல்லை என்றால் இனி எப்பவும் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் இல்லை. வாழ்க தமிழ்நாடு, வளர்க தமிழ். 

 

Rajni political entry  fans interview
                                                        ரஜினி

 

தலைவர் வரமாட்டாருனு எல்லாக் கட்சியிலும் சொல்லிட்டு இருக்காங்க. ஆனா தலைவர் இன்னும் சொல்லல, அப்படி தலைவர் ‘நான் வரல’னு சொன்னாருனா ரசிகர்களாகிய நாங்களும் பொதுமக்களும் இருக்கிற இடத்துலே 'உண்ணாவிரதமிருந்து அவர கண்டிப்பா வரவைப்போம்'. தமிழ் மக்கள் நல்லா இருக்கனும்னா எங்கள பாத்துக் கண்டிப்பா அவரு வருவாரு. ஏற்கனவே அவர் வர ஐடியாலதான் இருக்காரு. ஊடகங்கள் எல்லாம் தப்பா போட்றாங்க அப்படி போடாதிங்க. கண்டிப்பா தலைவர் வருவாரு தமிழகத்த காப்பாத்துவாரு. 

 

rajni


தலைவர் மார்ச் மாசம் லீலா பேளஸ்ல 'ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம்' எல்லா மக்களுக்கும் தெரியனும், 'இப்ப இல்லனா, இனி எப்பவும் இல்ல'னு மக்களுக்குத் தெரியனும் மூல முடுக்கெல்லாம் மக்கள்கிட்ட இந்த விஷயத்தைச் சேருங்கனு சொன்னாரு. அத எப்படி சேர்ப்பதுனு யோசன பண்ணி, தலைவர் படம் போட்ட டீ-ஷர்ட்ல 'தலைவரும் நீயே, முதல்வரும் நீயே'னு முன்னாடிப்பக்கமும், பின்னாடிப்பக்கமும், மே மாசம் 31ஆம் தேதியில இருந்து, இன்று 152வது நாளான இன்னிக்கு வரைக்கும் இதத்தான் நான் போட்டுட்டிருக்கன்.

 

Ad

 

கல்யாணம், வாழ்வு, சாவு, நல்லது, கெட்டதுனு எல்லாத்துக்கும் நாங்க இதத்தான் போட்டுட்டிருக்கோம். இதுவரைக்கும் 320 பனியன் அடிச்சு இருக்கேன். எல்லா மாவட்டத்துலையும் தெரிஞ்ச நண்பர்களுக்கெல்லாம் கொடுத்திருக்கேன். நைட் ஒரு மணிக்கு எழுப்பினாலும் இந்த டீஷர்ட்தான் போட்டிருப்பேன். ஒரு நாளைக்கு 300, 400 பேரு இந்த டீஷர்ட் பாக்குறாங்க. எங்களால் முடிஞ்ச விழிப்புணர்வு இது. வாக்குச் சாவடியில, கையில் மை வெச்சிகிட்டு வெளியேவந்ததும் இந்த டீஷர்ட்ட கழட்டிடுவேன். அதுவரைக்கும் என் பிரச்சாரம் தொடரும்.” என்றார் தீவிரமாக.

 

 


 

Next Story

“மகிழ்ச்சி..” - அயோத்திக்கு புறப்பட்ட நடிகர் ரஜினி!

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
Actor Rajini left for Ayodhya!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம், உத்தரப்பிரதேசத்திற்கு புறப்பட்டார். அதேபோல், நடிகர் தனுஷும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் புறப்பட்டுள்ளார். இருவரும் ஒரே விமானத்தில் பயணிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ராமர் கோயில் அறக்கட்டளையின் அழைப்பை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் இன்று உத்தரப் பிரதேசத்திற்கு புறப்பட்டுள்ளார். முன்னதாக அவர் விமான நிலையத்திற்கு செல்வதற்குமுன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், ‘அழைப்பின் பேரில் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க செல்கிறீர்கள் எப்படி உணர்கிறீர்கள்’ என கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், “மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று பதில் அளித்துவிட்டு சென்றார். 

Next Story

“சிந்தனையில் நேர்மை இருந்தால் மன நிம்மதியாக வாழ முடியும்” - நடிகர் ரஜினிகாந்த்

Published on 15/01/2024 | Edited on 15/01/2024
Actor Rajinikanth wishes his pongal celebration

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், மதுரை மாவட்டம், அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில், 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த போட்டியைக் காண ஏராளமான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று இந்த பொன்னாளில் நான் இறைவனை வேண்டுகிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை சந்தோஷமாக நிம்மதியாக இருக்கும்” என்று கூறினார்.