Skip to main content

’’பூரண மதுவிலக்கே தனது பிரதான கொள்கை!‘’  -ரஜினி ட்வீட்டின் பின்னணி

Published on 10/05/2020 | Edited on 10/05/2020
Rajinikanth




ஊரடங்கினால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளை சமீபத்தில் திறந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நீதிமன்றத்தின் நிபந்தனைகளை அரசு நிறைவேற்றாததால் திறக்கப்பட்ட மது கடைகளுக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்த தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்திருக்கிறது எடப்பாடி அரசு. 

                   

மது கடைகள் திறக்கப்பட்டபோது எந்த கருத்தையும் வெளிப்படுத்தாமல் இருந்த ரஜினிகாந்த், மது கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ள நிலையில் கருத்து தெரிவித்திருக்கிறார். 

 

 

இது குறித்து டிவிட்டரில் ரஜினி, ‘இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும். தயவு செய்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்‘ என சுட்டிக்காட்டுகிறார். ரஜினியின் இந்த ட்வீட், பரபரவென ட்ரெண்டிங் ஆகியிருக்கிறது. 

    

எடப்பாடி அரசுக்கு எதிராக ரஜினி கூறியுள்ள இந்த கருத்தை கடந்த காலங்களில் அவர் வெளிப்படுத்திய பஞ்ச் டயலாக்கோடு நினைவுக் கூறுகின்றனர் ரஜினி ரசிகர்கள். குறிப்பாக, அதிமுக அரசுக்கு எதிராக கடந்த காலங்களில் அவர் தெரிவித்த கருத்துக்களில் மிக பரபரப்பாக மக்கள் மத்தியில் எதிரொலித்த டயலாக், ’ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது‘ எனபதுதான். 

                

1996-ல் திமுக-தமாக கூட்டணியை உருவாகிய போது ரஜினி கூறிய அந்த டயலாக், மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்கு இணையாக, அதிமுக அரசுக்கு எதிராக தற்போது தெரிவித்துள்ள கருத்தை ஒப்பிடுகின்றனர் அவரது ரசிகர்கள். அன்றைக்கு ஜெயலலிதா ஆட்சியை வீழ்த்த வாய்ஸ் கொடுத்தார் ; இன்றைக்கு மது விலக்கு கொள்கையை அமல்படுத்துங்கள் என்கிற ரீதியில் எடப்பாடிக்கு அட்வைஸ் செய்திருக்கிறார் என்கின்றனர். 
 

ிு

                  

அதேசமயம், தேர்தல் அரசியலில் நேரடியாக இறங்கும் போது தனது முதல் கொள்கை பிரகடனமாக பூரண மது விலக்கு விசயத்தை ரஜினி கையிலெடுக்கவிருக்கிறார் என்பதற்கான அறிகுறிதான் இது! முழுமையான மது விலக்கை கொண்டு வருவோம் என தமிழக அரசியல் கட்சிகள் ஏற்கனவே சொல்லியிருந்தாலும்,  ரஜினி அதனை அறிவிக்கும் போது தமிழக பெண்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும், ரஜினியின் கொள்கை பிரகடனங்களில் முதலாவதாக இருக்கப் போவது மது விலக்கு கொள்கைதான்  என்கிறார்கள் ரஜினியின் நடவடிக்கைகளை கவனித்து வரும் அரசியல் விமர்சகர்கள்.



 

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார். 

Next Story

“கலைஞரின் தாஜ்மஹால் என்று சொல்லலாம்” - நடிகர் ரஜினிகாந்த்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024

 

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் எதிரில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி (24.8.2021) சட்டமன்றப் பேரவை விதி 110 ன்கீழ் வெளியிட்ட அறிவிப்பின் படி நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன.

மேலும் அண்ணா, கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கலைஞர் சதுக்கத்திற்கு கீழே ‘கலைஞர் உலகம்’ என்ற அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நினைவிடங்களில் அண்ணா சிலை, திருவாரூர் - சென்னை ரயில் பயண ஒலி-ஒளிக் காட்சி, சாதனை விளக்கப் புகைப்படத் தொகுப்புகள், கலைஞர் பொன்மொழிகள் கலைஞர் சிலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26.11.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைத்தார். பின்னர் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகள் மற்றும் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்றப் பேரவை தலைவர் மு. அப்பாவு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், பா.ம.க. சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே. மணி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Lets call it an kalaignar Taj Mahal says actor Rajinikanth

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “கலைஞரின் நினைவிடம் மிகவும் அருமை. ரொம்ப அற்புதம். இதனை கலைஞரின் நினைவிடம் என்று சொல்வதை விட, கலைஞரின் தாஜ்மஹால் என்று சொல்லலாம். அவ்வளவு அருமையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.