Skip to main content

’’பூரண மதுவிலக்கே தனது பிரதான கொள்கை!‘’  -ரஜினி ட்வீட்டின் பின்னணி

Published on 10/05/2020 | Edited on 10/05/2020
Rajinikanth




ஊரடங்கினால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளை சமீபத்தில் திறந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நீதிமன்றத்தின் நிபந்தனைகளை அரசு நிறைவேற்றாததால் திறக்கப்பட்ட மது கடைகளுக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்த தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்திருக்கிறது எடப்பாடி அரசு. 

                   

மது கடைகள் திறக்கப்பட்டபோது எந்த கருத்தையும் வெளிப்படுத்தாமல் இருந்த ரஜினிகாந்த், மது கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ள நிலையில் கருத்து தெரிவித்திருக்கிறார். 

 

 

இது குறித்து டிவிட்டரில் ரஜினி, ‘இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும். தயவு செய்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்‘ என சுட்டிக்காட்டுகிறார். ரஜினியின் இந்த ட்வீட், பரபரவென ட்ரெண்டிங் ஆகியிருக்கிறது. 

    

எடப்பாடி அரசுக்கு எதிராக ரஜினி கூறியுள்ள இந்த கருத்தை கடந்த காலங்களில் அவர் வெளிப்படுத்திய பஞ்ச் டயலாக்கோடு நினைவுக் கூறுகின்றனர் ரஜினி ரசிகர்கள். குறிப்பாக, அதிமுக அரசுக்கு எதிராக கடந்த காலங்களில் அவர் தெரிவித்த கருத்துக்களில் மிக பரபரப்பாக மக்கள் மத்தியில் எதிரொலித்த டயலாக், ’ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது‘ எனபதுதான். 

                

1996-ல் திமுக-தமாக கூட்டணியை உருவாகிய போது ரஜினி கூறிய அந்த டயலாக், மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்கு இணையாக, அதிமுக அரசுக்கு எதிராக தற்போது தெரிவித்துள்ள கருத்தை ஒப்பிடுகின்றனர் அவரது ரசிகர்கள். அன்றைக்கு ஜெயலலிதா ஆட்சியை வீழ்த்த வாய்ஸ் கொடுத்தார் ; இன்றைக்கு மது விலக்கு கொள்கையை அமல்படுத்துங்கள் என்கிற ரீதியில் எடப்பாடிக்கு அட்வைஸ் செய்திருக்கிறார் என்கின்றனர். 
 

ிு

                  

அதேசமயம், தேர்தல் அரசியலில் நேரடியாக இறங்கும் போது தனது முதல் கொள்கை பிரகடனமாக பூரண மது விலக்கு விசயத்தை ரஜினி கையிலெடுக்கவிருக்கிறார் என்பதற்கான அறிகுறிதான் இது! முழுமையான மது விலக்கை கொண்டு வருவோம் என தமிழக அரசியல் கட்சிகள் ஏற்கனவே சொல்லியிருந்தாலும்,  ரஜினி அதனை அறிவிக்கும் போது தமிழக பெண்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும், ரஜினியின் கொள்கை பிரகடனங்களில் முதலாவதாக இருக்கப் போவது மது விலக்கு கொள்கைதான்  என்கிறார்கள் ரஜினியின் நடவடிக்கைகளை கவனித்து வரும் அரசியல் விமர்சகர்கள்.



 

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.