Skip to main content

பந்திப்பூர் காட்டில் ரஜினி! விமானத்தில் கோளாறு; முட்கள் குத்தி காயம்!

Published on 29/01/2020 | Edited on 29/01/2020
r

 

பந்திப்பூர் காட்டில் ஒரு நாள் பயணம் சென்று திரும்பியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.   ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ என்கிற உலகப்புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சிக்காக இந்த பயணத்தை மேற்கொண்டார் ரஜினி.

 

’காடும் மனிதனும்’ என்கிற இந்த டிவி நிகழ்ச்சி, பருவநிலை மாற்றம் மற்றும் காடுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்டு வருகிறது.   அமெரிக்க அதிபராக இருந்தபோது ஒபாமா, இந்திய பிரதமர் மோடி, ஹாலிவுட் நடிகைகள் கேத்தே வின்ஸ்லெட், ஜூலியா ராபர்ட்ஸ், லீனா ஹெட்டே உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

 

ரஜினிகாந்த் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்காக பந்திப்பூர் காட்டில் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது.   உலகிலேயே புலிகள் அதிகம் வாழும் ஒரே காட்டுப் பகுதி எ பந்திப்பூர்தான்.  இங்கு 382 புலிகள் வரை இருக்கலாம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  கர்நாடகம், கேரளம், தமிழகம் என மூன்று மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது இந்த பந்திப்பூர் காடுகள்.   காட்டின் பெரும்பான்மை பகுதிகள் கர்நாடக மாநிலத்துக்குள் வருவதால் பந்திப்பூர் காடுகள் கர்நாடக காடு என்றே கூறப்படுகிறது.  நாகர்ஹோல், முதுமலை, சத்தியமங்கலம், வயநாடு என பல காடுகளை அருகருகே எல்லைகளாக பெற்றுள்ளது பந்திப்பூர் காடுகள்.

 

r

 

இந்த காட்டில் ரஜினிகாந்த் 6 மணி நேரம் படப்பிடிப்பில் பங்கேற்றார்.  பிரிட்டனின் முன்னாள் ராணுவ வீரர் பியர் கிரில்ஸ் எனும் எட்வர்ட் மைக்கேல் கிரில்ஸ்தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  படப்பிடிப்புக்காக நேற்று முன் தினமே ரஜினிகாந்த் மைசூர் சென்றுவிட்டார்.  மைசூர் செல்வதற்கு முதலில் புறப்பட்ட விமானத்தில் கோளாறு ஏற்பட்டது.  இதனால் சென்னையில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் தரையிறக்கப்பட்டது.  இதன் பின்னர் மீண்டும் வேறொரு விமானத்தில் மைசூருக்கு சென்றார் ரஜினிகாந்த்.

 

படப்பிடிப்பின் போது ரஜினிக்கு காட்டில் முட்கள் குத்தி காயம் ஏற்பட்டுள்ளது.  படப்பிடிப்பு முடிந்ததும் நேற்று இரவு சென்னை திரும்பினார் ரஜினி.

 

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார்.