Skip to main content

பழைய வழிக்கே திரும்பும் ரஜினி! - இது, ஆன்மிகம் அரசியல் அல்ல...

Published on 04/06/2018 | Edited on 04/06/2018

ரஜினிக்கு பிடித்த நிறம் கறுப்பு. சினிமாவுக்கு வெளியேவும் கறுப்புநிற ஆடைகளை விரும்பி அணிந்துகொள்வார். 'காலா' படத்தில் ரஜினியின் கதாபாத்திர கொள்கையோடு... 'காலா' என்றால் கறுப்பு, கரிகாலன் என்கிற பெயர்க்குறியீடு, 'கறுப்பு சேட்' என்கிற அர்த்தத்தில் 'காலா சேட்' என அழைக்கப்படுவது... என ரஜினியின் 'காலா'வில் கறுப்பின் தாக்கம் அதிகம்.

 

rajini sandal



'காலா' ஆடியோ விழாவில் ரஜினியும், பெருமளவில் திரண்டிருந்த அவரின் ரசிகர்களும் கறுப்பு ஆடையில் திரண்டு... கறுமையாக்கினர்.

’ரஜினி மக்கள் மன்ற’ நிர்வாகிகளைச் சந்திக்க வந்தபோது... வெள்ளைநிற வேஷ்டி, சட்டையில் வந்தார் ரஜினி. மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களையும், இளைஞரணிச் செயலாளர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தியபோதும் வெள்ளுடைதான் அணிந்திருந்தார் ரஜினி.

மே 20-ந் தேதியன்று... ரஜினி மக்கள் மன்ற மகளிரணி மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்தபோது... கறுப்பு பேண்ட்டும், சந்தனநிற ஜிப்பாவும் அணிந்து சந்தித்தார். அன்றிலிருந்து... சந்தனக் கலர் ஜிப்பாவையே தொடர்ந்து அணிந்து வருகிறார் ரஜினி.

கமல் பல வண்ண ஆடைகளை அணிந்து வந்தார். ‘முரசொலி’ பொன்விழாவில் வெள்ளை பேண்ட்டும், வெள்ளைச் சட்டையுமாக வந்தார். ஆனால்... அரசியல் கட்சி தொடங்கிய பிறகு... பெரும்பாலும் கமல் கறுப்பு நிற சட்டையையே அணிகிறார். பகுத்தறிவுவாதியான கமலின் அரசியல் குறியீடாக கறுப்புச் சட்டை இருக்கும் நிலையில்... ரஜினி தனது ஆன்மிக அரசியலின் குறியீடாக சந்தன நிறத்தை தேர்ந்தெடுத்திருக்கிறாரோ..

 

 


ரஜினியின் தனிப்பட்ட ஆன்மிகச் சிந்தனையிலும் மாற்றம் ஏற்பட்டிருப்பதை அவருக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் தெரிவிக்கிறார்கள்.

"ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தராக... சீடராக இருப்பவர் ரஜினி. தமிழகத்தில் புவனகிரியில் பிறந்த இந்து சமயத் துறவியான ராகவேந்திரரை இந்தக் காலத்தில் புகழ்பெறச் செய்ததில் முக்கியமானவர் ரஜினி.

ராகவேந்திரரை பூஜிக்கும்போது, மிக உரிமையாக அவருடன் சண்டைகூட போடுவார் ரஜினி. தனது நூறாவது படமான 'ஸ்ரீராகவேந்திரர்' வெற்றிப் படமாக அமையாதபோது... கோபத்தில் ராகவேந்திரரை கொஞ்ச நாள் பூஜிக்காமல் இருந்தார். "உங்க பெருமையச் சொல்ற படம் ஓடுறதுக்கு நீங்க உதவலேன்னா எப்படி?" என்பதுதான் ரஜினியின் கோபம். தொடர்ந்து திருவல்லிக்கேணி ராகவேந்திரர் மடத்திற்கு போவதையும் கூட கைவிட்டு... அவ்வப்போது பழைய நெருக்கம் காட்டாமலேயே வீட்டில் பூஜித்து வந்த ரஜினி... பிறகு இமயமலை போனார். பாபாவின் பக்தரானார்.

 

 


எட்டு மாதங்களுக்கு முன் ராகவேந்திரர் தன் கனவில் தோன்றியதையடுத்து ராகவேந்திரர் ஜீவசமாதியான ஆந்திராவிலுள்ள மந்த்ராலயம் சென்று வந்த ரஜினி, கடந்த பிப்ரவரியில் திருவல்லிக்கேணி மடத்திற்கும் சென்று பூஜித்தார். மீண்டும் ராகவேந்திரரை தீவிரமாக பூஜித்து வருகிறார்... ராகவேந்திரருக்கான 11 நாள் விசேஷ பூஜையும் செய்தார் ரஜினி...'' என்கிறார்கள்.

ராகவேந்திரர் வாழ்ந்த காலத்தில் அவரை கும்பகோணத்தில் ஒரு விருந்துக்கு அழைத்தவர்கள்... சரியாக கவனிக்காமல் இன்சல்ட் செய்வதுபோல் நடந்தபோது... "தான் அரைத்த சந்தனம் மூலம் தனது மகிமையை அங்கே நிரூபித்தார் ராகவேந்திரர்...'' என்பது அவரின் வாழ்க்கையில் சொல்லப்படும் சம்பவம். ராகவேந்திரரின் சந்தனம்... ரஜினியின் சந்தனக் கலர் ஜிப்பா... லாஜிக் சரியாத்தான் இருக்கோ...





 

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.