Skip to main content

ரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

 

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் கமலஹாசன் ஏன் போட்டியிடவில்லை? வயது முதிர்ந்த காரணத்தால் தான் கட்சி ஆரம்பித்துள்ளதாகவும், அவருக்கு அரசியலில் என்ன தெரியும்? என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது தெரிவித்திருந்தார். 
 

எடப்பாடி பழனிசாமியின் கருத்து தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் நம்மிடம் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
 

என்ன எதிர் விளைவுகள் வரும் என்று கவலைப்படாமல் கமல்ஹாசன் 92லேயே இந்த சமூகத்திற்காக குரல் கொடுத்தவர். அன்றிலிருந்து சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். இன்று இருக்கும் ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகம், அவருடைய வீடு. அதனை வீடாக வைத்துக்கொண்டு நடிகராகவே இருந்தால் பிரதமர் மோடி வந்தால்கூட பார்த்துவிட்டு போவார். அந்த அளவுக்கு அந்தஸ்து, செல்வாக்கு உள்ளவர் தன்னுடைய வசதிகளை குறைத்துக்கொண்டு, மக்களுக்காகத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறார். அதிகாரத்தை கைப்பற்றினால் மட்டுமே மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பதால்தான் தேர்தல் அரசியலுக்கு வந்திருக்கிறார். 

 

makkal needhi maiam Murali Appas


 

25 வருடத்திற்கு முன்பு இருந்த கிராம சபையை அதன் பயன்பாடு தெரியாமல் முடக்கி வைத்திருந்தார்கள். அதனை இப்போது கமல்ஹாசன்தான் மீண்டும் வெளியே கொண்டு வந்து, அதனை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு கொண்டு வந்தார். கிராமங்களுக்கு அதிகாரம் போய் சேரவேண்டும் என்று நினைப்பவரை பார்த்து ஊராட்சி தெரியுமா? நகராட்சி தெரியுமா என்று முதலமைச்சர் கேட்கிறார். 
 

2021 சட்டமன்றத் தேர்தலில் எங்கள் பலத்தை பார்த்து அச்சத்தில் இருப்பதால் முதலமைச்சர் இப்படி பேசியிருக்கலாம். திமுக பலவீனமாக இருப்பதால்தான் இப்போதுவரை அவர்கள் தப்பித்துக்கொண்டிருக்கிறார்கள். 2021 சட்டமன்றத் தேர்தல் அவ்வளவு சுலபமாக அவர்களுக்கு இருக்காது. 2021ல் எல்லா பிரச்சனைகளையும் முன்வைத்து யார் முதல் அமைச்சர் என்ற கேள்விதான் முதலில் நிற்கும். அப்படி வரிசைக் கட்டி நிற்கும்போது மக்களின் எண்ணங்கள் மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 


 

 

பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்து, மூன்று மாதத்தில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக ஓட்டுபோடுகிறார்கள் என்றால் மக்கள் இவர்களைப் பார்த்து மயங்கிப்போய் போடவில்லை. அவர்கள் மனம் மாறுவதற்கு ஏதோ ஒரு காரணம் இருந்திருக்கிறது. நாளை நல்லாட்சி வரவேண்டும் என்று நினைத்தால் மீண்டும் மாற்றி ஓட்டுப்போடுவார்கள். 
 

தேர்தல் அரசியல் என்று வந்துவிட்டாலே எந்த தேர்தல் என்றாலும் சந்திக்க வேண்டும் என்று அதிமுக மட்டுமல்ல மற்ற கட்சிகளும் உங்கள் கட்சியைப் பார்த்து கேட்கிறார்களே? 
 

பாராளுமன்றத் தேர்தலை சந்தித்தோம். உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலை சந்திக்கப்போகிறோம். இடைத்தேர்தல் லட்சணம் எப்படி இருக்கும் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். ஆளும் கட்சியின் அத்துமீறலும், அதிகார துஷ்பிரயோகமும் நடக்கும் என்றார். பாராளுமன்றத் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்கள். மூன்று மாதத்தில் எப்படி ஓட்டுக்கள் மாறும். எடப்பாடி பழனிசாமி மீது உள்ள அணுதாபத்தில் ஓட்டு போட்டார்களா? 
 

நாங்கள் கட்சியை தொடங்கி எங்கள் கட்டமைப்பு சரியாக அமைவதற்குள் தேர்தல் வந்துவிட்டது. இருப்பினும் நாங்கள் பாராளுமன்றத் தேர்தலை சந்தித்தோம். நாங்கள் பயந்திருந்தால் எப்படி நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்தித்திருப்போம். எங்கள் பலம் என்ன என்பது அவர்களைவிட எங்களுக்கு நன்றாகவே தெரியும். அடுத்து உள்ளாட்சித் தேர்தல், அதனைத் தொடர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திப்போம். அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். 

 

rajini-kamal-eps



எங்களை பிரிக்க முடியாது என்று ரஜினியை குறிப்பிட்டு கமல் பேசியிருப்பது அரசியலுக்கும் பொருந்துமா? இருவரும் இணைந்து தேர்தலை சந்தித்தால் என்ன நடக்கும் என்று யூகங்கள் எழுகிறதே? 
 

இந்த யூகம்தான் எடப்பாடி பழனிசாமியை பதட்டமடைய வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். அவர்கள் இருவரும் 40 ஆண்டு காலமாக எந்தவித வேறுபாடும் இல்லாமல்தான் பழகினார்கள். அரசியலுக்கு கமல் வந்துவிட்டார். ரஜினி வரப்போகிறார். இருவருக்கும் தெளிவான புரிதல் இருக்கிறது. தெளிவாக அகற்றப்பட வேண்டிய ஆட்சி, கட்சி எது என்ற புரிதலோடு இருக்கிறார்கள். 
 

அரசியலில் எப்போதும் வியூகங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. ரஜினி இன்னும் அரசியலுக்கு வரவில்லை என்பதால் சில விசயங்களுக்கு பதில் அளிக்காமல் இருக்கிறார். அவரது திட்டங்கள் அரசியலுக்கு வரும்போது தெரியலாம். எங்களைப் பொருத்தவரை ஆதரவை கேட்பதாக சொல்லியிருக்கிறார் எங்கள் தலைவர். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று இருவருக்கும் நன்றாகவே தெரியும். 

 

Vijayan




 

 

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.