Skip to main content

மகேந்திரன் குடும்பத்துக்கு பெரிய நிதி கொடுத்த ரஜினி !

Published on 20/02/2019 | Edited on 04/03/2019

ழக்கம்போல் தலைப்புச் செய்தியாகியிருக்கிறார். வழக்கம்போல் தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியிருக்கிறார் இன்னமும் முழுமையாக அரசியலுக்கு வராத ரஜினி. அமெரிக்காவில் ரஜினி இருந்த போது, ராகவேந்திரா மண்டபத்தைத் தவிர்த்துவிட்டு, ஓட்டல் ஒன்றில் சில மா.செ.க்களை வரவழைத்து ஆலோசனைக் கூட்டம் போட்டார் தூத்துக்குடி மா.செ. ஸ்டாலின். அந்தக் கூட்டம் முடிந்து ஊர் திரும்பும்போதுதான் சாலை விபத்தில் மரண மடைந்தார் தர்மபுரி மா.செ.மகேந்திரன். விஷயம் பெரிதாகிவிடக் கூடாது என்பதற்காக, மகேந்திரன் குடும்பத்திற்கு ஒரு தொகையைக் கொடுத்து சரிக்கட்டினார்கள் தலைமை நிர்வாகிகள் சிலர்.

rajini


மகேந்திரன் மறைந்து ஒன்பதாம் நாள், தர்மபுரியில் நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை நிர்வாகியான வி.எம்.சுதாகர், மா.செ.ஸ்டாலின், ரிடையர்டு ஐ.பி.எஸ். அதிகாரி ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சில லட்சங்களை செலவு செய்தார் பக்கத்து மாவட்டமான கிருஷ்ண கிரி மா.செ.மதியழகன். அமெரிக்காவிலிருந்து தமிழகம் திரும்பிய ரஜினியைச் சந்திக்க பல்வேறு வழிகளில் முயற்சித்தும் முடியாததால் தி.மு.க.விற்கு தாவிவிட்டார் மதியழகன்.

இந்த விவகாரங்களோடு, கடலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மா.செ.க்களை நியமித்து, மீண்டும் ஒரே மாவட்டமாக்கி, ஒரு மா.செ.வை நியமித்து என ஏகப்பட்ட குளறுபடி களும் ரஜினிக்குத் தெரிந்தது. தனது இளையமகள் சௌந்தர்யாவின் திருமணம் முடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தார் ரஜினி. சீரும் சிறப்புமாக திருமணம் முடிந்த ஒரு வாரம் கழித்து, கடந்த 17-ஆம் தேதி அனைத்து மா.செ.க் களும் ராகவேந்திரா மண்டபத்தில் ஆஜராகு மாறு .ர.ம.ம.வின் தலைமை யிலிருந்து தகவல் போனது.

காலை 8 மணிக்கு மண்டபத்தில் அவர்கள் ஆஜரானபோது, அனை வரும் போயஸ் கார்டனில் இருக்கும் ரஜினி வீட்டிற்குப் போகுமாறு மண்டபத்தில் சொல்லியிருக்கிறார்கள். காலை 9 மணிக்கு அனை வரும் ரஜினி வீட்டிற்குச் சென்றதும் 9.30-க்கு ஆலோசனை கூட்டம் ஆரம்பித் துள்ளது. எப்போதும் ரஜினியின் இடப்பக்கம் வி.எம்.சுதாகர், ராஜசேகர், ஸ்டாலின் ஆகியோர் அமர்வார்கள். ஆனால் இந்த முறை மா.செ.க்களுடன் அமரவைக்கப்பட்டார் ஸ்டாலின். ராஜசேகர் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்படாததால், சுதாகர் மட்டுமே, ரஜினியின் இடப்பக்கம் அமர்ந்திருந்தார்.

rajiniதர்மபுரி மகேந்திரன் மறைவு குறித்து தனது கவலையைப் பகிர்ந்து கொண்ட ரஜினி, எம்.பி.தேர்தலுக்குள் கட்சி தொடங்கும் ஐடியா இல்லை என்பதைச் சொல்லிவிட்டு, தங்களது கருத்துக்களை சொல்லலாம் என மா.செ.க்களிடம் கூறினார். இராமநாதபுரம் மா.செ. செந்தில் ஆனந்த், சிவகங்கை மா.செ.ராமேஸ்வரன், தேனி மா.செ. கணேஷ் ஆகிய மூவர் மட்டும், "எம்.பி. தேர்தலில் நாம் போட்டியிடலாம்' என்றதும்,மற்ற மா.செ.க்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

""எம்.பி. எலெக்ஷன்னாலே காங்கிரசா, பி.ஜே.பி.யான்னுதான் மக்கள் பார்ப்பார்கள். இப்ப நாம கட்சி ஆரம்பிச்சு போட்டியிட்டா நம்மோட உழைப்பும் வீணாப் போயிரும், அதைவிட முக்கியம், சென்ட்ரலில் வரும் ரூலிங் பார்ட்டியையும் பகைச் சுக்க வேண்டியிருக்கும். நீங்களும் யாரையும் பகைச்சுக்கிராம, உங்க வேலையைப் பாருங்க, குடும் பத்தைக் கவனிங்க. நானும் ஏப்ர லில் ஷூட்டிங் போறேன். எல்லோரும் "பேட்ட'’படம் பார்த்தீங்களா, எப்படி இருந்துச்சு. சட்டமன்றத் தேர்தல்தான் நம்மோட எய்ம்கிறதால, அடுத்த ஆகஸ்ட்ல கட்சி ஆரம்பிக் கிறோம், எலெக்ஷன்ல நிக் கிறோம், ஜெயிக்கிறோம். பெரிய பெரிய ஆளுங்கெல்லாம் நம்ம கட்சிக்கு வருவாங்க. ரஜினி மக்கள் மன்றத்துக்கு புது நிர்வாகி கள் யாரையும் நியமிக்க வேண்டாம். எந்தப் பிரச்சனையாக இருந் தாலும் இனிமேல் சுதாகரிடம் மட்டும் ஆலோசனை கேட்டு நடந்துக்கங்க. நன்றி வணக்கம்'' எனச் சொல்லி தனது பேச்சை நிறைவு செய்திருக்கிறார் ரஜினி.

ஒருமணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்து மா.செ.க்களெல்லாம் கிளம்பிச் சென்ற கொஞ்ச நேரத்திலேயே, ""எம்.பி. தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை'' என்ற ரஜினியின் அறிக்கை வெளியானது. கூட்டத்தில் கலந்துகொண்ட சில மா.செ.க்களிடம் பேசினோம். “""எங்க தலைவர் எதிர்பார்த்த மாதிரி பூத் கமிட்டி அமைக்கும் வேலை சுணக்கமா யிருச்சு. பல மாவட்டங்களில் அமைக் கப்பட்ட பூத் கமிட்டி ஆட்களை அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் பேக்கேஜ் சிஸ்டத்துல வளைச்சுட்டாங்க.

அதனால இன்னும் ஒரு வரு ஷம் ஆனாத்தான் எல்லாம் சரிப் படும் என்ற முடிவுக்கு வந்துட்ட தாலதான் இந்த முடிவை எடுத்துருக் காரு. இப்பவும் பார்த்தீங்கன்னா... "பணம், பதவியை எதிர்பார்க்குறவங்க இருந்தா இப்பவே வெளியே போயி ருங்கன்னு சொல்லிட்டு, நீங்களே நினைச்சுப் பார்க்காத பெரிய ஆளுங்கெல்லாம் வருவாங்க'ன்னு சொல்லிருக்காரு தலைவரு. "அப்படின்னா அவர்களுக்குத்தான் பதவியா, எம்.எல்.ஏ. சீட்டா? அல்லது எதையும் எதிர்பார்க்காம அந்த பெரிய மனுஷங்க வரப்போறாங் களா?''’என நம்மிடமே கேட்டார்கள்.

ரஜினி நல்லவழி காட்டுவார் என்ற நம்பிக்கை நிறைந்திருப்பதால் இன்னமும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் நிர்வாகிகள்.

மா.செ.க்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் முடிந்த மறுநாள், தர்மபுரி மா.செ. மகேந் திரனின் குடும்பத்தினரை தனது இல்லத்துக்கு வரவழைத்துப் பெரிய அளவிலான நிதி உதவியை வழங்கியதோடு, மகேந்திரன் மகன்களின் படிப்புச் செலவையும் ஏற்றுள்ளார் ரஜினி.
 

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார். 

Next Story

கோவை தி.மு.க. வேட்பாளர் ரஜினியின் மருமகன்?

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Coimbatore DMK Candidate Rajini's son-in-law?

தற்பொழுது வரை கூட்டணியும், யாருக்கு எங்கு சீட் என்பதும் முடிவாகாத நிலையில் பரபரப்பின் உச்சத்தில் இருக்கின்றது கோவை நாடாளுமன்றத் தொகுதி. தி.மு.க. கூட்டணியில் நடிகர் கமலஹாசன் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என அனேகம் பேர் எதிர்பார்த்த நிலையில், கோவையை மீண்டும் ஏன் கூட்டணிக்கே தள்ளிவிட வேண்டும்? தி.மு.க.வே போட்டியிட வேண்டும். அதுவும் ரஜினியின் குடும்பத்தாரே போட்டியிட வேண்டும் எனத் தலைமைக்கு தகவலைப் பகிர்ந்து வருகின்றனர் துவக்க கால தி.மு.க.வினர்.

"பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கோவை நாடாளுமன்றத் தொகுதியில், கோவை தெற்கு தவிர மீதமுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளையும் தன்வசமாக்கி வைத்திருக்கின்றது அ.தி.மு.க. தி.மு.க.வைப் பொறுத்தவரை உட்கட்சிக் குழப்பம், கோஷ்டி அரசியல் ஆகியவற்றால் இங்கு பலவீனமாகக் காட்சியளிக்கிறது. கோவை மாவட்டம் ஒரு காலத்தில் கொங்கு சமுதாயத்தினரின் ஆதிக்கமுள்ள பகுதியாக இருந்துவந்தது. காலபோக்கில் கொஞ்சங் கொஞ்சமாக மாறி, தற்போது தெலுங்கு மொழி பேசும் அருந்ததியர் உள்ளிட்ட போயர், நாயக்கர் போன்ற சமுதாயத்தினர் அதிகமுள்ள பகுதியாக மாறிவிடடது. அந்த உண்மையை அறிந்த ஜெயலலிதா, கொங்கு சமுதாயத்தினருக்கு மட்டுமின்றி, தேவர், நாயக்கர், செட்டியார் போன்ற சமூகத்தினருக்கும் வாய்ப்புகளை வழங்கி, தொடர்ந்து வெற்றிபெற்று கோவை மாவட்டத்தை அ.தி.மு.க.வின் கோட்டையாக மாற்றினார். தி.மு.க.வை பொறுத்தவரையோ, முழுக்க முழுக்க குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி, கட்சிப் பொறுப்பு முதல் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புவரை அனைத்தையும் அவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து வழங்கி வருவதால் மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் தி.மு.க.வின் மீது அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

நடந்து முடிந்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வெளியான முடிவுகளே இதற்கு சாட்சி. இப்பொழுது கூட கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. போட்டியிட்டு, கண்டுகொள்ளப்படாத மாற்று சமுதாயத்தினரையும் அரவணைத்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை வழங்கினால் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதோடு, இத்தொகுதியில் அ.தி.மு.க.வின் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டி தி.மு.க. வளர வாய்ப்புள்ளது'' என்கிறார் ராமநாதபுரத்தை சேர்ந்த உடன் பிறப்பு ஒருவர்.

Coimbatore DMK Candidate Rajini's son-in-law?

பொங்கலூர் பழனிச்சாமி தி.மு.க.வின் மாவட்டச் செயலாளராக வருவதற்கு முன்புவரை வணங்காமுடி மு.ம.சண்முகசுந்தரம், கோவைத் தென்றல் மு.இராமநாதன், சி.டி.தண்டபாணி, இரா.மோகன், கா.ரா.சுப்பையன், அவினாசி இளங்கோ, போடிபட்டி தம்பு உள்ளிட்ட மாற்று சமுதாயத்தினர் தி.மு.க.வில் கோலோச்சி வந்தனர். அப்போது கோவை மாவட்டத்தில் தி.மு.க. அசைக்கமுடியாத சக்தியாக இருந்தது. 1996 தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் செட்டுக்காரர் சமுதாயத்தை சேர்ந்த ப.அருண்குமாரும், சூலூர் தொகுதியில் தேவர் சமுதாயத்தை சேர்ந்த சூலூர் பொன்முடியும், அவினாசி தொகுதியில் தேவேந்திரகுல சமுதாயத்தை சேர்ந்த இளங்கோவும், உடுமலை தொகுதியில் போடிபட்டி தம்பு போன்றோர்களும் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, சட்டமன்ற உறுப்பினர்களானார்கள். அதற்கு அடுத்து வந்த 2001 தேர்தலில் இவர்களுக்கு சீட் கொடுக்க மறுத்த பொங்கலூர் பழனிசாமி, தன்னுடைய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து சீட் கொடுத்ததால் அந்தத் தேர்தலில் தி.மு.க. படுதோல்வியடைந்தது. தற்பொழுது வரை அத்தோல்வியிலிருந்து மீள முடியவில்லை என்கிறது தேர்தல் வரலாறு.

இது இப்படியிருக்க, "பல்லடம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சூலூர் நகரின் முன்னாள் பேரூராட்சித் தலைவருமான பொன்முடியின் குடும்ப வாரிசும், ரஜினியின் மருமகனுமான விசாகன் வணாங்காமுடிக்கு கோவை நாடாளுமன்றத் தொகுதியில் சீட் கொடுக்கும் பட்சத்தில் பிற சமுதாயத்தை அரவணைத்தது போலவும் ஆயிற்று, வெற்றியும் நிச்சயம்'' என்கிற ரீதியில் தலைமைக்கு தகவலை பகிர்ந்து வருகின்றனர் சூலூர்வாசிகள்.

சூலூரைச் சேர்ந்த உடன்பிறப்பு ஒருவரே, "கோவை மாவட்டத்தில் தி.மு.க. அசைக்க முடியாத சக்தியாக இருந்தது என்றால் அது சூலூரில் தான். அன்றைய காலகட்டத்தில் அண்ணாவும், பெரியாரும் சந்தித்துக்கொண்ட இடமும் இதுதான். சூலூரில் திராவிட பாரம்பரியத்தை வளர்த்தெடுத்தவர் சூலூர் சுப்பிரமணியன். தேவர் சமுதாயத்தை சேர்ந்த இவரின் அரசியல் வாரிசாக இருந்தவர், 2012ல் காலமான தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்முடி. வியாபார வாரிசாக இருந்தவர் வணங்காமுடி. சூலூர் பேரூராட்சியின் கட்டடம் அமையவும், சூலூருக்கு நீர் கிடைக்கக் காரணமானவரும் பொன்முடியே. அவர் உயிரோடு இருந்த வரை சூலூர் தி.மு.க. உயிர்ப்போடு இருந்தது. தீவிர திராவிட இயக்க குடும்பமான பொன்முடியின் குடும்பம் அவரது மறைவிற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அரசியலிலிருந்து விலகியது. அவரது மறைவு தி.மு.க.விற்கு பலவீனத்தை ஏற்படுத்தியது. அவர் இருக்கும்வரை தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்த தேவர் சமுதாயத்தினர், அவர் இறந்த பிறகு ஒதுங்கிக் கொண்டனர்.

பொன்முடியின் தம்பியான வணங்காமுடியின் மகன் தான் விசாகன். இந்த விசாகனைத்தான் நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா திருமணம் முடித்துள்ளார். சமீபத்தில் சவுந்தர்யா-விசாகன் தம்பதியினரின் குழந்தைக்கு காது குத்து விழா, சூலூரிலுள்ள விசாகனின் குல தெய்வம் கோவிலில் நடைபெற்றபோது, சூலூருக்கு நடிகர் ரஜினி வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தனது மகளைப் பார்ப்பதற்காக நினைத்த போதெல்லாம் இங்கு வருகை தருவது ரஜினியின் வழக்கம். தி.மு.க. பாரம்பரியத்தோடு, நடிகர் ரஜினியின் மருமகன் என்ற பெருமையையும் கொண்டுள்ள விசாகனை கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராகக் களமிறக்க வேண்டுமென்பது எங்களது விருப்பம். அவர் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சுலபமாக இருக்கும். மேலும், தேவர், நாயக்கர், செட்டியார், அருந்ததியர் போன்ற மாற்று சமுதாயத்தினருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும். இதில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களும் தேர்தல் பணியாற்றுவார்கள். ஆகையால் தி.மு.க. தலைமை கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக விசாகனை நிறுத்த வேண்டும் என்பது எங்களது விருப்பம். இதனைக் கடிதமாகவும், செய்தியாகவும் தலைமைக்கு சேர்த்துள்ளோம்'' என்கிறார் அவர்.

ஆக, கூட்டணியில் கமலுக்கு கோவை கிடைக்குமா? இல்லை தி.மு.க.வே இங்கு போட்டியிட முடிவெடுத்து, தி.மு.க. பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த ரஜினியின் மருமகனை களமிறக்குமா? என்பதுதான் கோவை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடையே எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள மில்லியன் டாலர் கேள்வி!