Skip to main content

'ஒரு குழந்தையைப் போலப் பழகினார்' - நெகிழ்ச்சியில் 'வில்லேஜ் குக்கிங் சேனல்'

Published on 31/01/2021 | Edited on 01/02/2021

 

Rahul Gandhi speech at karur

 

தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி எனக் களத்தில் இறங்கி இருக்கும் நிலையில், தமிழகத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தவர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, 'வில்லேஜ் குக்கிங் சேனல்' எனும் கிராமத்துச் சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாடியது பெரும் வரவேற்பைப் பெற்றது.

 

புதுக்கோட்டை மாவட்டம் சின்னவீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த, யூட்யூபில் பிரபலமான 'வில்லேஜ் குக்கிங் சேனல்' சமையல் நிகழ்ச்சிக்கு வருகை தந்த ராகுல் காந்தி, அவர்களுடன் சில வார்த்தைகள் தமிழில் பேசினார். பின்னர் குழுவினரோடு சேர்ந்து அவரும் உற்சாகமாக சமையலில் இறங்கி அவர்களுக்கு உதவிகளைச் செய்தார். இதுகுறித்து அந்த 'வில்லேஜ் குக்கிங் சேனல்' குழுவினரிடம் நேர்காணல் எடுத்தோம்.

 

Rahul Gandhi speech at karur



ராகுல் காந்தி எவ்வாறு உங்களிடம் பழகினார்?

ராகுல் ஐயா வந்தது ஒரு கோட்டையைப் பிடித்த மாதிரியான சந்தோசம் எனக்குள். மிகவும் ஆனந்தமாக இருந்தது. அவர் ஒரு குழந்தையைப் போலப் பழகினார். எங்களுக்குக் கைகொடுத்தார். 'நல்லா இருக்கிங்களா?' என விசாரித்தார்.



ராகுல் காந்தி ஒரு தேசியத் தலைவர், அவரிடம் ஏதேனும் வித்தியாசத்தை உணர்ந்தீர்களா?

வித்தியாசம் ஏதும் தெரியவில்லை. சக நண்பரைப் போலத்தான் அவர் நடந்துகொண்டார். என் பேரனைப் போலவே நடந்துகொண்டார்.


ராகுல் காந்தி எப்படி உங்கள் நிகழ்ச்சிக்கு வந்தார்?

எங்கள் சமையலை சாப்பிட நிறைய பேருக்கு ஆசை இருக்கும். அப்படித்தான் ராகுல் அண்ணனும் எங்கள் நிகழ்ச்சிக்கு வந்தார். மிகப் பெரிய தலைவர் வரப்போகிறார் எனப் பரபரப்பாக இருந்தோம். ஆனால், அவர் வந்தவுடன் ஃபிரண்ட்லி ஆக கட்டிப்பிடித்து அன்பாக நடந்துகொண்டார். அதில், எங்களின் பதட்டம் பறந்துபோய்விட்டது. பிறகு, "நான் பல நிகழ்சிகளால், தாமதமாக வந்துவிட்டேன். மன்னிக்கவும். இப்போது என்ன செய்கிறீர்கள்?" என்றார். பிரியாணி செய்துவிட்டோம் என்றோம். உடனே, "நான் ரைய்த்தா செய்ய உதவுகிறேன்" என்றார். அப்போது, 'ONION-க்கு தமிழில் என்ன' எனக் கேட்டார். 'வெங்காயம்' என்றோம். உடனே, எங்க தாத்தா மாதிரி 'வெங்காயம்' எனச் சத்தமாகச் சொன்னார். ஆஹா, ராகுல்காந்தி அண்ணனும் நம்ம சேனல பாத்திருங்காங்க என அப்போதுதான் எங்களுக்குப் புரிந்தது. பிறகு, சாப்பிட்ட உடனேயே செல்லாமல் எங்களுடன் அமர்ந்து பேசிவிட்டுத்தான் சென்றார்.

 

Rahul Gandhi speech at karur

 

ராகுல் வந்ததை உங்கள் ஊர் மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

ராகுல் அண்ணன் வந்ததன் மூலம், எங்கள் பகுதி மக்களுக்கு மிகப் பெரிய பெருமையைத் தேடித் தந்திருக்கிறோம். அதைப்போலவே, எங்களது சப்ஸ்க்ரைபர்களும் எங்களைப் பாராட்டி வருகின்றனர். எங்களைப் பார்த்து சந்தோஷப்படுகின்றனர். 


எப்படி ராகுல் காந்தியுடன் தொடர்பு ஏற்பட்டது?

எங்களது  யூ-டியூப் சேனலைப் பார்த்துவிட்டு, வாரத்திற்கு இரண்டு குடும்பம் எங்களது வீட்டிற்கே நேரடியாக வந்து செல்வார்கள். அதன்படி, ஜோதிமணி அக்காவின் தம்பியும் ஒருநாள் வந்திருந்தார். அவர்மூலம், ஜோதிமணி அக்காவும் நேரில் வந்து எங்களைப் பார்த்துப் பாராட்டினார். பிறகு ராகுல் காந்தி அவர்களிடம் அறிமுகம் செய்துவைப்பதாகக் கூறினார். நாங்கள் விளையாட்டாக, 'ராகுல் அண்ணனை சமைக்கக் கூப்பிட்டடால் வருவாங்களா அக்கா?' எனக் கேட்டோம். அவரும் உடனே, அதெல்லாம் வருவார் தம்பி என்றார். அப்படி ராகுல் அண்ணனின் கரூர் வருகையின் போது இந்தச் சந்திப்பு சாத்தியப்பட்டது. 


 

Rahul Gandhi speech at karur




ஏதேனும் உதவி வேண்டுமா எனக் கேட்டாரா?

அப்படிக் கேட்கவில்லை. ஆனால், 'உங்களது அடுத்த திட்டம் என்ன?' எனக் கேட்டார். அப்போது, நாங்கள் இந்தச் சேனலை ஆரம்பிப்பதற்கு முன் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பிறகு, யூ-டியூப் சேனல் தொடங்கிய பிறகு அந்த நிர்ப்பந்தம் இல்லாமல்போனது. இருந்தாலும், 'எங்களது சமையலை உலகம் முழுதும் கொண்டு போய்க் காட்ட விரும்புகிறோம்' என்று சொன்னோம். அப்போது, 'என்ன நாட்டிற்குச் செல்ல வேண்டும்?' எனக் கேட்டார். நாங்கள், 'அமெரிக்கா செல்ல வேண்டும்' என்றோம். இப்போது, நாங்கள் செல்வதற்கான நடவடிக்கைகளை அவர் எடுத்துவிட்டார். பாஸ்போர்ட் எடுக்கச் சொன்னார்கள். நாங்கள் தான் அமெரிக்கா செல்ல இனி தயாராக வேண்டும் என்றனர் நெகிழ்ச்சியாக.  

 

 

 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.