Skip to main content

ராகுல் குரலில் ஒலித்த அண்ணாவின் அரசியல்! தேர்தல் கணக்கா, தமிழ்நாட்டின் வீச்சா?

Published on 03/02/2022 | Edited on 04/02/2022

 

fgh

 

நாடாளுமன்றம் நேரு முதல் மோடி வரை எத்தனையோ பிரதமர்களின் பேச்சுக்களையும், அமைச்சர்களின் பேச்சுக்களையும் கேட்டிருக்கிறது. ஆனால் ஒரு பெரும் கட்சியின் பிரதான ஆளுமை, தனது 48 நிமிட உரையில் ஆளும் கட்சியை பார்த்து " உங்கள் வாழ்க்கையில் ஒருமுறை கூட அந்த மாநில மக்களை ஆள முடியாது" என்று குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் இதுவரை யாரும் சவால் விட்டு பேச்சைப் பதிவு செய்ததாக தகவல் இல்லை. அவ்வாறு சவால் விட்டவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. சவாலுக்கு அவர் எடுத்துக்கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இன்று பிரதமர் மோடிக்கு எதிராக கடுமையான வார்த்தை பிரயோகம் செய்து தமிழ்நாட்டுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அவரின் காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் ஆட்சியை பறிகொடுத்து 50 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவர் நாங்கள் ஆள்வோம் என்று சொல்லி வீண் சவால் விட விரும்பவில்லை. இந்த தமிழ்நாட்டை பற்றி தமிழக மக்களை பற்றி இந்தியாவில் வேறு எந்த தேசிய தலைவருக்கும் இல்லாத புரிதல் இவருக்கு இருக்கிறது. அதற்கான காரணம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. 

 

அதனால்தான் இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், 5 ஆண்டுகள் நிறைவடைந்து மீண்டும் தேர்தலை சந்திக்கும் பஞ்சாப் மாநிலத்தையோ, அல்லது தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் வேறு ஏதோ ஒரு மாநிலத்தையோ, அல்லது தேர்தல் நடைபெறும் வேறு ஏதோ ஒரு மாநிலத்தையோ கூறி அவர் சவால் விடவில்லை. தமிழ்நாட்டின் கோரிக்கை பற்றி பேசியதால் அவர் தமிழ்நாட்டை பற்றி பெருமையாக பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்று யாரும் அதனை குறைத்து பேச தேவையில்லை. அப்படி என்றால் அவர் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி செய்ய போவதை பற்றி பேசியிருக்கலாம், ஆனால், பாஜகவை டார்க்கெட் செய்து உங்களால் முடியாது என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. 

 

dhj

 

50 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் அவர்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து பார்த்துவிட்டு, தமிழர்கள் வேறானாவர்கள் என்ற புரிதலின் வெளிப்பாடே ராகுலின் தமிழ்நாடு குறித்த நேற்றைய பேச்சு. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் உங்களால் தனித்து கால் பதிக்க முடிகிறது. மேற்கு வங்கத்தில் முடிகிறது, கேரளாவில் தனித்து சில சட்டமன்ற இடங்களில் வெற்றிபெற முடிகிறது. திரிபுராவில் ஆட்சி அமைக்க முடிகிறது.  ஆனால் தமிழ்நாட்டில் ஆட்சி என்ற நினைப்பே உங்கள் வாழ்க்கையில் வரக்கூடாது என்றார் ராகுல்காந்தி! ராகுலின் பேச்சை சற்று கூர்ந்து யோசித்து பார்த்தால் மேலே கூறிய இரண்டு வார்த்தைகள் தான் அவர் தமிழ்நாட்டு மக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை. எங்கும் முடியும், ஆனால் இங்கு முடியாது என்பதுதான் அது. அது உண்மையும் கூட, வரலாறு இந்தியாவுக்கு அதைத்தான் சொல்கிறது. 

 

குறிப்பாக தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாள் இன்று. அவர் ஆரம்பித்த கட்சியை தடை செய்வோம் என்று கூறிய அதே காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவரையே, அண்ணா 1962ம் ஆண்டு தமிழ்நாடு குறித்து நாடாளுமன்றத்தில் என்ன சொன்னாரோ அதை மீண்டும் ஒருமுறை கூற வைத்துள்ளது காலம். இதை விட அவரின் நினைவு நாளுக்கு வேறு ஒரு சிறப்பு யாரும் செய்துவிட முடியாது. தன்னை காலெமெல்லாம் எதிர்த்தவர்கள் வாயாலேயே தமிழ்நாடு மற்ற மாநிலத்தைப்போல் அல்ல, அவர்கள் வேறானவர்கள் என்று நாடாளுமன்றத்தின் மையமண்டபத்தில் நின்றவாறே ஒரு பெரும் கட்சியின் தேசியத்தலைவரை கொண்டே இந்த தேசத்துக்கே மீண்டும் ஒருமுறை கூற வைத்துவிட்டார் அண்ணா. அவர் அன்று போட்ட விதைதான் இன்று தமிழ்நாட்டை இந்தியாவில் மற்ற மாநிலங்களை போல் அல்லாமல் தனித்துவமாக மாற்றி வைத்துள்ளது என்றால் அது மிகையல்ல. 

 

ஆனால் அதையும் தாண்டி ராகுலின் நேற்றைய பேச்சை வர போகின்ற நாடாளுமன்ற தேர்தலோடு முடிச்சு போட்டு நிறைய பேச்சுக்கள் உலாவி வருகின்றன. இந்தியாவில் காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் ஆண்டு வருகிறது, வர போகின்ற ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் என்ன என்றும் யாருக்கும் தெரியாது, நிலைமை அப்படி இருக்கையில் தமிழ்நாட்டில் அவர் போட்டியிட்டால்தான் ஜெயிக்க முடியும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டதாக தெரியவில்லை. அதற்காக நாடாளுமன்றத்தில் பாஜகவை எதிர்த்து அவர் சவால் விட வேண்டிய அவசியமும் இல்லை. தமிழ்நாடு பற்றிய உண்மை அவருக்கு புரிந்திருக்கிறது, பாஜகவுக்கு உண்மை புரிய வேண்டும் என்று விரும்புகிறார். அதைத்தாண்டி வாக்கு அரசியலுக்கு தமிழ்நாட்டை ராகுல் பயன்படுத்துகிறார் என்று எதிர்தரப்பினர் குற்றம் சுமத்துவது என்பதெல்லாம் தமிழர்களின் அரசியல் புரிதலை குறைத்து மதிப்பிடுவதை போல்தான் இருக்கும். ராகுலுக்கு நேற்று புரிந்திருக்கிறது, எதிர்தரப்புக்கு விரைவில் புரியும்!! 


 

Next Story

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியா? பதிலளித்த கார்கே

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Kharge replied Rahul Gandhi Contest in Amethi Constituency?

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

இதற்கிடையில், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்த நிலையில்,  இந்த மக்களவைத் தேர்தலில் கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகிறார். அதே சமயம், ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. 

Kharge replied Rahul Gandhi Contest in Amethi Constituency?

இந்த நிலையில், இன்று (27-04-27) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார்? என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில்,  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். 

அப்போது அவர், “பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. ஆனாலும், மோடி நாட்டுக்காக நிறைய வேலை செய்துள்ளார் என்று கூறுகிறார். நான் அதிகம் பேச விரும்பவில்லை. காங்கிரஸ் இந்தியாவை சுதந்திரமாக்கியவர்களின் கட்சி. இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் பா.ஜ.க ஒருபோதும் போராடவில்லை. இந்த நாட்டைக் கட்டியெழுப்பினோம். நேருவுக்கு ஒன்றுமில்லை, இந்திரா காந்தி ஒன்றுமில்லை, லால்பகதூர் சாஸ்திரி ஒன்றுமில்லை, மோடிதான் எல்லாம் என தேசப்பற்றைப் பற்றி பாஜகவினர் எவ்வளவோ பேசுகிறார்கள்.

2014க்குப் பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்தது, அதற்கு முன் நாடு சுதந்திரம் அடையவில்லை என்ற எண்ணத்தை கூட வைத்துள்ளார்கள். இவை அனைத்தும் அவரது வார்த்தைகளில் பிரதிபலிக்கின்றன. இதில் வருத்தம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சியால் வளர்க்கப்பட்டு, தலைவர்களாக மாறியவர்களும் இதையே சொல்கிறார்கள். காங்கிரஸ் மிகவும் மோசமாக இருந்திருந்தால், உங்கள் வாழ்நாளில் 30-40 வருடங்களை ஏன் தேவையில்லாமல் செலவழித்தீர்கள்?. இவர்களுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஆனால் அவர்களும் இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தியை விமர்சிக்கிறார்கள் எனப் பேசினார். இதனையடுத்து, அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் சார்பாக யார் போட்டியிடுவார்கள் என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்கே, “சில நாட்கள் பொறுத்திருங்கள். எல்லாம் தெளிவாகிவிடும்” எனக் கூறினார்.

Next Story

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு கிண்டல் அடித்த ராகுல் காந்தி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Rahul Gandhi taunted by comparing BJP's poetry with empty anvil!

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த வாக்குப்பதிவுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு கட்சி, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க விரும்புவதால், முன்பு நடந்த தேர்தல் போல் இந்த தேர்தல் அல்ல. பிரதமரின் உரைகளைக் கேட்டிருப்பீர்கள். அவர் பயந்துவிட்டார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். சில சமயங்களில் சீனா, பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவார். சில சமயம் தட்டுகளை அடிக்க வைத்து, உங்கள் மொபைல் போன்களின் டார்ச் லைட்டை ஆன் செய்யச் சொல்வார். பா.ஜ.க என்ன செய்யப்போகிறது என்பதை நான் சொல்கிறேன். நரேந்திர மோடியின் பாரதிய சொம்பு கட்சி காலியாக உள்ளது.

அது கர்நாடகா மாநிலம், நாட்டிற்கு ஜி.எஸ்.டியாக வழங்கும் ஒவ்வொரு ரூ.100க்கும், அதற்கு ஈடாக ரூ.13 மட்டுமே வரிப் பகிர்வின் கீழ் கிடைக்கிறது. வறட்சி நிவாரணமாக கர்நாடகாவுக்கு சுமார் ரூ.18,000 கோடி கிடைக்க வேண்டும், ஆனால் அதற்கு ‘சொம்பு’ தான் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் இதே போன்ற பதிவை ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிவில், ‘பொதுமக்களின் பணத்தை ஏராளமாகக் கொள்ளையடித்து, பதிலுக்கு காலி பானை வழங்கப்பட்டது. இது மோடியின் பாரதிய சொம்பு கட்சி’ எனப் பதிவிட்டு சொம்புடன் இருந்தபடி இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.