Skip to main content

ரஃபேல் விமான பேரத்தை ஊழல் நடவடிக்கையில் இருந்து நீக்கிய மோடி!

Published on 11/02/2019 | Edited on 11/02/2019

 

r

 

ரஃபேல் விமானங்களை வாங்க மோடி முடிவு செய்தபோது அது ஊழல் பேரம் என்பதை உணர்ந்தே இருந்திருக்கிறார். அதற்காகவே, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு ராணுவ சாதனங்கள் வாங்குவதில் ஊழல் நடந்தால் தண்டிக்க வகைசெய்யும் பிரிவுகளை ஊழல் தடுப்பு பிரிவுகளில் சேர்த்திருந்தது.

 

ஆனால், ரஃபேல் விமானங்களை பிரான்ஸ் அரசுடன் பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டு பேசத் தொடங்கியவுடன், ராணுவ சாதனங்களை வாங்குவதில் தவறு இருந்தாலும் அது ஊழல் நடவடிக்கையில் சேராது என்று முக்கியமான 8 பிரிவுகளில் மோடி அரசு திருத்தம் செய்துள்ளது.

 

mm

 

இந்தியாவும் பிரான்சும் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி டெல்லியில் ராணுவ சாதன ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ரஃபேல் விமானங்களை சப்ளை செய்யும் நிறுவனமாக டஸால்ட்டும், விமானப்படைக்கு ஆயுதங்கள் வழங்கும் நிறுவனமாக எம்பிடிஏவும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னரே ஊழல் தடுப்பு பிரிவின் முக்கியமான எட்டு விதிகளில் மோடி அரசு திருத்தம் செய்துள்ளது.

 

அதில் முக்கியமானது, ராணுவ தளவாட பேரத்தில் செல்வாக்கு செலுத்துவதோ, ஏஜெண்டுகள் அல்லது ஏஜென்சி கமிஷன் பெறுவதோ, ராணுவ சாதனங்களை வினியோகிப்பதற்கான வங்கிக் கணக்குகள் விவகாரமோ ஊழல் நடவடிக்கைக்கு ஆளாகாது என்பதாகும்.

 

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் போதுமான அளவு வங்கியில் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்பதற்காக காப்போலை கணக்கு வைத்திருக்க வேண்டும் என்பதையும் பிரதமர் அலுவலகம் வலுக்கட்டாயமாக நீக்கியிருக்கிறது.

 

hh

 

 

இரு நாடுகளிடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு 2016 ஆகஸ்ட் 24 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதலைப் பெற்றபிறகு, ராணுவ அமைச்சர் மனோகர் பரிக்கர் தலைமையிலான ராணுவ சாதனங்கள் வாங்கும் குழு 2016 செப்டம்பரில் இந்த எட்டுத் திருத்தங்களுக்கும் ஒப்புதல் கொடுத்திருக்கிறது என்று தி ஹிண்டு ஆங்கில நாளிதழில் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் புதிய ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறார்.
 

 

 

 

 

 

Next Story

“கையில் இருக்கும் அழுக்கு வாட்சில் சேர்ந்திருக்கிறது” - நம்பர் மாறியதன் பின்னணி

Published on 16/04/2023 | Edited on 16/04/2023


 

Will Tamil Nadu be a battlefield for the next 8 months? annamalai pressmeet

 

அடுத்த 8 மாதம் இன்னும் ரணகளமாக இருக்கும். கேள்விகள் கேட்டுக்கொண்டே தான் இருப்போம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

 

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுகவின் அடுத்த பாகத்தை வெளியிட்ட பின்,  மத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பின் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த திட்டங்களில் ஏதேனும் தவறுகள் நடந்துள்ளதா என்பது குறித்தான பைல்கள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதில் யார் இருந்தாலும் கவலைப்படப் போவதில்லை. இது யாருக்கும் எதிரானது இல்லை. தமிழ்நாட்டில் இதுபோன்ற அரசியலை செய்துகாட்ட முடியும் என்ற முயற்சியைத்தான் நாங்கள் எடுக்கிறோம். ஊழல் என்று வந்த பின் நண்பர்கள், எதிரிகள் என பார்க்கவில்லை. நாங்கள் இங்கு யாரையும் பங்காளிகள் என சொல்லவில்லை. எங்களுக்கு எல்லோரும் எதிரிகள் தான்.

 

ரஃபேல் வாட்சில் சீரியல் நம்பர் மாறியிருப்பதாக சொல்கிறார்கள். என் கையில் இருக்கும் வாட்ச் ஜிம்சனில் கொடுத்து கேட்டுப்பாருங்கள்.  வாட்சில் உள்ள நம்பர் தான் சரியான நம்பர், கையில் இருக்கும் அழுக்கு வாட்சில் சேர்ந்திருக்கிறது. இதில் 147 தான் இருக்கிறது. மேடையில் படிக்கும் போது அழுக்கு இருக்கிறதால் தெரியவில்லை. இப்பொழுது நீங்கள் படிக்கும் போதே ஒரு நிமிடம் கஷ்டப்பட்டீர்கள் தானே. 147 தான். பில்லில் போட்டிருப்பது தான் வாட்ச் நம்பர்.

 

டீசல் கட்சி கொடுக்கிறது, வீட்டு வாடகை நண்பர்கள் கொடுக்கிறார்கள், 3 பிஏ விற்கு 3 கம்பெனிகளில் இருந்து சம்பளம் போடுகிறார்கள். என்னால் அதையெல்லாம் செய்ய முடியாது. மாநிலத் தலைவராக இருக்கும் வரை சிலரின் உதவியை வைத்து தான் நான் செய்கிறேன். நான் கொள்ளை அடித்து சொத்து சேர்த்திருந்தால் அந்த பணத்தில் கொடுப்பேன். கொள்ளை அடித்து சொத்து சேர்க்கவில்லையே.

 

தமிழகத்தின் வளர்ச்சி பற்றியெல்லாம் பேச வேண்டாம். ஊழலைப் பற்றி பேசுவோம். 2024 பாராளுமன்றத் தேர்தல் என்பது ஊழலை மையமாக வைத்து நடக்க வேண்டும். 49 ஆயிரம் பேர் எதற்கு அந்த நடைபயணத்திற்கு பதிவு செய்ய வேண்டும். இதில் இருந்து பின் வாங்கப்போவது கிடையாது. அடுத்த 8 மாதம் இன்னும் ரணகளமாக இருக்கும். கேள்விகள் கேட்டுக்கொண்டே தான் இருப்போம்” எனக் கூறினார்.

 

 

 

Next Story

ஹெலிகாப்டர் விபத்து விசாரணை - உறுதியளித்த விமானப்படை தளபதி!

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

IAF CHIEF

 

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் கடந்த 08/12/2021 அன்று பிற்பகல் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கிய கேப்டன் வருண் சிங் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி உயிரிழந்தார். இதற்கிடையே இந்த விபத்து குறித்து முப்படை விசாரணை நடைபெற்றுவருகிறது.

 

இந்நிலையில், விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்திரி, விசாரணை நியாயமான முறையில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இன்று (18.12.2021) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ரஃபேல் ஒப்பந்தம், அண்டை நாடுகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றைப் பற்றியும் பேசியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளதாவது, "விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட எதையும் முன் கூட்டியே வெளியிட நான் விரும்பவில்லை. ஏனெனில் இந்த விசராணை ஒரு முழுமையான செயல்முறையாகும். எங்கே தவறு நடந்திருக்கும் என்று ஒவ்வொரு கோணத்தையும், ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்து, தகுந்த பரிந்துரைகளைச் செய்வதும், கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதும் முக்கியம். இந்த முழு விசாரணையும் மிகவும் நியாயமான செயல்முறையாக இருக்கும் என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். விவிஐபி-க்கள் பறப்பதற்கான நெறிமுறைகள் ஆய்வு செய்யப்பட்டு திருத்தப்படும். விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில், நடைமுறைகள் ஆய்வு செய்யப்படும்.

 

பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களை நாங்கள் தொடர்ந்து ஆராய்ந்துவருகிறோம். அவர்களின் அச்சுறுத்தல்களை நாங்கள் நன்கு அறிவோம். சீனாவுடனான எல்லை பிரச்சனை தொடர்ந்துகொண்டிருக்கிறது. லடாக்கில் சில பகுதிகளில் படைவிலகல் நடைபெற்றுள்ளது. ஆனால் முழுமையான படை விலகல் நடைபெறவில்லை. விமானப்படை தொடர்ந்து அங்கு நிலைநிறுத்தப்படும். அந்தப் பகுதியில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம்.

 

ரஃபேலைப் பொறுத்தவரையில், சரியான நேரத்தில் டெலிவரி செய்ததற்காக அவர்களுக்கு (பிரான்ஸ்) நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். 36 விமானங்களுக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டதும், அவற்றில் 32 வழங்கப்பட்டுள்ளதும் உங்களுக்குத் தெரியும். மீதமுள்ள நான்கில் மூன்று விமானங்கள் பிப்ரவரியில் டெலிவரி செய்யப்படும். இந்தியா கேட்ட மேம்பாடுகளைக் கொண்ட கடைசி ரஃபேல் விமானம், அதற்கான சோதனைகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்ட பிறகு வழங்கப்படும். ரஃபேல் போர் விமானத்தின் எதிர்கால பராமரிப்பு பிரச்சனைகள் மற்றும் இந்தியாவில் டி-லெவல் பராமரிப்பு அமைப்பது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சருடன் நாங்கள் விவாதித்துள்ளோம்.” இவ்வாறு வி.ஆர். சவுத்திரி தெரிவித்துள்ளார்.